சினிமா
ஸ்ரீரெட்டியின் அடுத்த டார்கெட் தமன்னா
இயக்குனர்கள் மற்றும் பட அதிபர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது நடிகை தமன்னாவை டார்கெட் செய்துள்ளார்.
நடிகர்கள் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பட உலகை அதிர வைத்த ஸ்ரீரெட்டி ஐதராபாத்தில் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். பின்னர் ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்று வெளியேறி சென்னையில் குடியேறினார். அவரது வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் படமாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் விஷால் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து பரபரப்பாக்கினார்.
இந்நிலையில், இவர் தற்போது நடிகை தமன்னாவை டார்கெட் செய்துள்ளார். அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது: சென்னையில் உள்ள எனது வீட்டின் அருகே தமன்னா நடிக்கும் வெப் தொடரின் படப்பிடிப்பு நடக்கிறது. அவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. கடந்த பத்து நாட்களாக நான் இந்த தொல்லையை அனுபவித்து வருகிறேன். இனி என்னால் பொறுக்க முடியாது. அவர்களிடம் நேரில் சென்று பேசி இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட போகிறேன்” என தெரிவித்துள்ளார்.