சினிமா
தனுஷ்

பல தயாரிப்பாளர்கள் சம்பளமே தராமல் ஏமாற்றுகிறார்கள்- தனுஷ் பரபரப்பு பேட்டி

Published On 2019-08-29 07:53 GMT   |   Update On 2019-08-29 07:53 GMT
அசுரன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், பல தயாரிப்பாளர்கள் சம்பளமே தராமல் ஏமாற்றுவதாக கூறினார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடித்திருக்கும் படம் ’அசுரன்’. கலைப் புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஜீ.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது தனுஷ் அளித்த பேட்டி வருமாறு:- தயாரிப்பாளர் தாணு சார் கிட்ட, ‘வெற்றிதான் இந்தப் படத்தை இயக்கப்போறார்’னு சொன்னதும், அவர் கதைகூட கேட்காமல் ஓகே சொல்லிட்டார். 



இந்த காலத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்குவது அவ்வளவு சாதாரணமான வி‌ஷயம் கிடையாது. அதுவே பெரிய வேலையாக இருக்கிறது. பல தயாரிப்பாளர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள். ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் படம் ஆரம்பிக்கும் முன்பே தாணு சார் எனக்கு முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டார். அந்த நேரத்தில் அது எனக்கு மிக முக்கியமானதாக இருந்தது. அதற்கு என்றைக்குமே நான் நன்றியோடு இருப்பேன். படம் கண்டிப்பாக வந்து பல அதிசயங்கள் செய்யும் என்று நம்புகிறேன்”. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News