சினிமா
திரிஷா

சினிமா கற்பனையே..... அதை பின்பற்றக்கூடாது- நடிகை திரிஷா

Published On 2019-08-28 09:02 GMT   |   Update On 2019-08-28 09:02 GMT
சினிமாவை சீரியசாக எடுத்துக்கொள்ள கூடாது, அவை வெறும் கற்பனையே என மாணவிகளுக்கு திரிஷா அறிவுரை வழங்கினார்.
நடிகை திரிஷா யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக செயல்பட்டு வருகிறார். இன்று சென்னை ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் யுனிசெப் சார்பில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாணவிகளின் கேள்விகளுக்கு திரிஷா பதில் அளித்தார். 

அவர் கூறியதாவது:- பெண்கள், குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம். இணையதள குற்றங்களில் இருந்தும் குழந்தைகளை பாதுகாப்போம். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை பிறரால் புரிந்துகொள்ள முடியாது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையில் போக்சோ சட்டத்தின் கீழ் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



2014-ம் ஆண்டு 9 ஆயிரமாக இருந்த குழந்தைகளுக்கு எதிராக இருந்த பாலியல் வழக்குகள் 2016-ல் 36 ஆயிரமாக அதிகரித்துவிட்டது. பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளில் குற்றவாளிகள் 95 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள். இளைஞர்கள் இதுகுறித்து பேசவும், செயல்படவும் முன்வரவேண்டும். திரைப்படங்களை சீரியசாக எடுத்துக்கொள்ள கூடாது. அவை கற்பனை மட்டுமே. அதை பின்பற்ற கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News