சினிமா
ரம்யா பாண்டியன்

பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல தயார்- ரம்யா பாண்டியன்

Published On 2019-08-27 10:55 GMT   |   Update On 2019-08-27 10:55 GMT
சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தி இணையத்தை கலக்கி வரும் நடிகை ரம்யா பாண்டியன், அழைப்பு வந்தால் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல தயார் என தெரிவித்துள்ளார்.
ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் ரம்யா பாண்டியன். அந்த படத்தைத் தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. போட்டோ ஷூட் குறித்து நடிகை ரம்யா பாண்டியன் பேட்டியளித்துள்ளார். 

அதில் கூறியிருப்பதாவது:- ’நான் அதிகம் புடவையில் போட்டோஷுட் செய்தது இல்லை. இப்போதுதான் செய்து இருக்கிறேன். ஜோக்கர் படத்தை அடுத்து கொஞ்சம் வித்தியாசம் காட்ட மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் செய்தேன். இப்போது ஒரு மாற்றத்திற்காக மீண்டும் புடவையில் போட்டோ ஷுட் செய்தேன். ஒரு வித்தியாசம் காட்டத் தான் இந்த போட்டோ ஷுட் செய்தேனே தவிர வேறு எந்த காரணமும் இல்லை. 



பிக்பாஸிடம் இருந்து அழைப்பு வந்தால் நிகழ்ச்சியில் பங்கேற்பேன். அந்நிகழ்ச்சியில் ஷெரின், தர்‌ஷன் இருவரும் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய் சேதுபதி மிகவும் பிடித்த நடிகர். விரைவில் எனது அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார். 5-ம் வகுப்பில் தனக்கு முதல் காதல் புரபோஷல் வந்ததாக தெரிவித்துள்ள ரம்யா பாண்டியன், இதுவரை யாரும் என்னிடம் நேரில் காதல் சொன்னதில்லை என்றார்.
Tags:    

Similar News