சினிமா
இலியானா, ஆண்ட்ரூ

காதலரை பிரிந்தாரா இலியானா?

Published On 2019-08-27 06:59 GMT   |   Update On 2019-08-27 06:59 GMT
இலியானாவும் அவரது காதலர் ஆண்ட்ரூவும் ஒருவருக்கொருவர் பகிர்ந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கி இருப்பதால் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்த இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூவும் காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாகவும் சுற்றி வந்தார்கள்.

இருவரும் நெருக்கமாக படம் எடுத்து சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு வந்தனர். இலியானா படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு ஆண்ட்ரூவ் தவறாமல் வந்து விடுவார். இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் வதந்தி பரவியது. 

இலியானாவின் கவர்ச்சி புகைப்படங்கள் பெரும்பாலானவை ஆண்ட்ரூவால் கிளிக் செய்யப்பட்டவையாகும். மேலும் இலியானா அடிக்கடி தனது தலைப்புகள் மூலம் அவரை 'கணவன்' என்று குறிப்பிட்டு வந்தார்.



இந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டதாகவும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது இல்லை என்றும், சந்தித்து கொள்வதும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இலியானா மற்றும் ஆண்ட்ரூவின் இன்ஸ்டாகிராம் பக்கங்களைப் பார்த்தால், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பின்தொடரவில்லை, மேலும் புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர்.
Tags:    

Similar News