சினிமா
டாப்சி

நான் ராசி இல்லாதவளா? - டாப்சி வருத்தம்

Published On 2019-08-27 04:41 GMT   |   Update On 2019-08-27 04:41 GMT
தமிழ், தெலுங்கி, இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை டாப்சி, சமீபத்தில் அளித்த பேட்டியில் என்னை ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தினார்கள் என்றார்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள டாப்சி இப்போது இந்தியில் கவனம் செலுத்துகிறார். அமிதாப்பச்சனுடன் நடித்து வசூல் குவித்த ‘பிங்க்’ தமிழில் அஜித்குமார் நடிக்க ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் வந்துள்ளது. சினிமா வாழ்க்கை குறித்து டாப்சி அளித்த பேட்டி வருமாறு:-

“நான் சினிமாவுக்கு வந்த புதிதில் 2, 3 தென்னிந்திய மொழி படங்களில் நடித்தேன். அந்த படங்கள் சரியாக ஓடவில்லை. உடனே என்னை ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தி விட்டனர். எனது சினிமா வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவமாக அதை பார்க்கிறேன். கதை எழுதியது நான் இல்லை. படம் எடுத்ததும் நான் இல்லை. ஆனாலும் படம் ஓடாததற்கு என்மீது பழி போட்டனர்.



நான் நடித்து ஓடாத அந்த 3 படங்களிலும் மூன்று பாடல்கள் நாலைந்து காட்சிகளில்தான் நடித்து இருந்தேன். பெரிய தயாரிப்பாளர் பெரிய இயக்குனர் என்ற காரணத்தினால் அந்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்த படங்களில் நடித்தது எனது தவறுதான். ஆனால் படங்கள் ஓடாததற்கு காரணம் நான் என்று பழியை என் மீது சுமத்தியது சரியல்ல.

இந்தியில் ஒரு விருது வழங்கும் விழாவுக்கு போனேன். அங்கு என்னை ஆறாவது வரிசையில் உட்கார வைத்தனர். முன் வரிசையில் உட்கார அருகதை எனக்கு இல்லை என்று நினைத்தார்களோ என்று தெரியவில்லை. ஒரு இந்தி படத்தில் நடித்தபோது நீதான் மோசமான தேர்வு என்று இயக்குனர் திட்டினார். இதுதான் எனது சினிமா வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள்.”

இவ்வாறு டாப்சி கூறினார்.
Tags:    

Similar News