சினிமா
சத்யராஜ், சிபிராஜ்

மீண்டும் இணையும் சிபிராஜ் - சத்யராஜ்

Published On 2019-08-23 13:45 GMT   |   Update On 2019-08-23 13:45 GMT
ஜாக்சன் துரை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிபிராஜ், சத்யராஜ் கூட்டணி புதிய படம் மூலம் இணைந்திருக்கிறார்கள்.
தமிழின் முன்னணி நடிகரான சத்யராஜ் தன் மகன் சிபிராஜுடன் இணைந்து 'ஜாக்சன் துரை' வெற்றிப்படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. 

கடந்தாண்டின் கவனிக்கதக்க படைப்பான “சத்யா” படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும், நடிகர் சிபிராஜும் புதிய கதைக்களம் கொண்ட ஒரு திரைப்படத்தில் இணைகிறார்கள். முற்றிலும் புதுவித திரைக்கதை கொண்ட இப்படத்தினை தயாரிப்பாளர்கள் தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார்கள். 



இப்படத்தில் நடிகர்கள் சிபிராஜ், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்க உள்ளார்கள். சைமன் கே.கிங் இசையமைக்க உள்ளார். படத்தின் மற்ற தொழில்நுட்பக்குழு உறுப்பினர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் படப்பிடிப்பு வரும் நவம்பரில் தொடங்கப்பட்டு ஒரே கட்டமாக ஜனவரியில் முடிக்கப்பட உள்ளது. 
Tags:    

Similar News