சினிமா
சுந்தர் சி

மீண்டும் பேய் படம் இயக்க உள்ள சுந்தர் சி

Published On 2019-08-22 05:35 GMT   |   Update On 2019-08-22 05:35 GMT
விஷால் நடிக்கும் ’ஆக்‌ஷன்’ படத்தை தொடர்ந்து, சுந்தர் சி பேய் படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஆக்‌ஷன்’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயங்கரவாதத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. 



இந்நிலையில், சுந்தர் சி ஆக்‌ஷன் படம் முடிந்தவுடன் பேய் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் அரண்மனை படத்தின் 3-ம் பாகமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வெளியான இரண்டு பாகங்களிலும் சுந்தர் சி நடித்திருந்த நிலையில், இப்படத்திலும் அவரே நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News