சினிமா
யாஷிகா ஆனந்த்

3 மணி நேரம் மேக்கப் போடும் யாஷிகா ஆனந்த்

Published On 2019-08-21 14:31 GMT   |   Update On 2019-08-21 14:31 GMT
பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான யாஷிகா ஆனந்த், தற்போது ஜாம்பி படத்தில் நடிப்பதற்காக 3 மணி நேரம் மேக்கப் போட்டிருக்கிறார்.
S3 பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சென்னையில் நடைபெற்றது. இதில் நாயகி யாஷிகா ஆனந்த், இயக்குனர் புவன் நல்லான், இசையமைப்பாளர் பிரேம்ஜி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். 

நடிகை யாஷிகா ஆனந்த் பேசும்போது,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த படத்தில் ஒளிப்பதிவாளரின் பணி தான் முக்கியமானது. அந்தப் பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு கோணத்திலும் கேமராவை வைத்து கடினமாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்  அதேபோல் நடன இயக்குநர் எனக்கேற்றவாறு நடனம் அமைத்துக் கொடுத்தார். இரவு பகலாக படப்பிடிப்பு நடக்கும். இருப்பினும் அனைவரும் ஒரு குடும்பம் போல பணியாற்றினோம். மேக்கப் போடுவதற்கு 3 மணி நேரம் ஆகும் என்றார்.



புவன் நல்லான் பேசும்போது,

யோகிபாபு எனக்காக இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஒரு நல்ல கூட்டணி அமைந்ததில் மகிழ்ச்சி. 'ஜாம்பி' மாதிரியான படம் எடுக்கும்போது தொழில்நுட்ப கலைஞர்களின் உதவி பெரும்பங்கு வகிக்கும். அது இந்த படத்தில் எனக்கு நன்றாக அமைந்திருக்கிறது.
Tags:    

Similar News