சினிமா
ராம்கோபால் வர்மா

ராம்கோபால் வர்மா மீது நடிகை பரபரப்பு புகார்

Published On 2019-08-21 08:46 GMT   |   Update On 2019-08-21 08:46 GMT
சர்ச்சைக்கு பெயர்போன இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது நடிகை ஷெர்லின் சோப்ரா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
ஜீவன், கஜாலா நடித்த யுனிவர்சிட்டி படம் மூலம் தமிழ்  சினிமாவுக்கு வந்தவர் இந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா. காமசூத்ரா படத்தில் நிர்வாண காட்சிகளில் நடித்து அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்தவர். சமூகவலைதளங்களில் அவ்வப்போது அரை நிர்வாண படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். ஷெர்லின், சர்ச்சைக்கு பெயர்போன இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது புகார் தெரிவித்துள்ளார். 

அவர் கூறியிருப்பதாவது: ‘2016 ம் ஆண்டு நான் பட வாய்ப்பு கேட்டு என் புகைப்படங்களை ராம்கோபால் வர்மாவுக்கு வாட்ஸ்- அப்பில் அனுப்பினேன். உங்களின் ரங்கீலா, சத்யா உள்ளிட்ட படங்களை பார்த்து ரசித்துள்ளேன் என்று வாட்ஸ்அப் செய்தேன். உடனே அவர் பதில் அனுப்பினார். இது தான் என் அடுத்த பட கதை, படித்து பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்கவும் என்று கூறி இருந்தார். 

கதையை படித்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அதில் கதையே இல்லை. செக்ஸ் காட்சிகள் தான் இருந்தன. சார் நீங்கள் அனுப்பிய கதையில் கதையே இல்லை. வெறும் செக்ஸ் காட்சிகள் தான் உள்ளன. தயவு செய்து கதை என்ன என்பதை தெரிவிக்க முடியுமா என்று கேட்டு நான் பதில் அனுப்பினேன். அதற்கு ராம் கோபால் வர்மா, இது தான் கதை என்றார். 



அது எப்படி கதை இல்லாமல்...? என்று நான் மீண்டும் கேட்க அவரோ, உங்களுக்கு சவுகரியமாக இருந்தால் கூறுங்கள், படம் பண்ணலாம் என்றார். பின்னர் ராம் கோபால்வர்மா எனக்கு ஆபாச வீடியோ ஒன்றை அனுப்பி வைத்தார். அதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்து என்ன சார், இப்படி ஒரு வீடியோவை அனுப்பியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு செக்ஸ் என்பது அடிப்படை தேவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று இப்படி செய்தேன். 

மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் செக்ஸ் தேவை, அதை அனுபவிக்க வேண்டும் என்று பதில் அனுப்பினார்’. இவ்வாறு ஷெர்லின் தெரிவித்துள்ளார். ராம் கோபால் வர்மா மீது ஏன் சைபர் குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கவில்லை என்று ஷெர்லினிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஷெர்லினோ, ராம்கோபால் வர்மா என்னை அவர் படத்தில் நடிக்க கட்டாயப்படுத்தவில்லை என்றார்.
Tags:    

Similar News