சினிமா
தெலுங்கு படத்தை தவிர்த்த பிரியா வாரியர்
ஒரு அடார் லவ் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான பிரியா வாரியர், தற்போது தெலுங்கு திரைக்கதை ஒன்றை கேட்டு பிடிக்க வில்லை என்று கூறியிருக்கிறார்.
ஒரு அடார் லவ் படத்தின் ஒரு பாடல் மூலம் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார் பிரியா வாரியர். பாடல் வெளியானதற்கும் படம் வெளியானதற்கும் இடையே சுமார் ஒரு வருட இடைவெளி உருவானது. பாடல் மூலம் கிடைத்த கவனம் மூலம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி அதுவே படத்தின் வெற்றிக்கு தடை போட்டது. அதிகபட்ச எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை.
நடிகர், நடிகையும் இயக்குநரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். அந்தப் படத்தை தொடர்ந்து பிரியா வாரியர் வேறெந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. தற்போது கன்னட திரைப்படம் ஒன்றில் அவரை நடிக்கவைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
அறிமுக இயக்குநர் ரகு கோவி திருச்சூரில் உள்ள பிரியா வாரியரின் வீட்டில் அவரை சந்தித்து கதை கூறியுள்ளார். பிரியா வாரியருக்கு திரைக்கதை மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் தெலுங்கு திரைக்கதை ஒன்றை கேட்ட பிரியா வாரியர் திரைக்கதை பிடிக்க வில்லை என்பதால் அதை தவிர்த்துள்ளார்.