சினிமா

எலி மாமா என்று அழைக்கிறார்கள் - எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி

Published On 2019-05-27 13:53 GMT   |   Update On 2019-05-27 13:53 GMT
‘மான்ஸ்டர்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா பேசிய எஸ்.ஜே.சூர்யா, என்னை எலி மாமா என்று அழைக்கிறார்கள் என்று நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மான்ஸ்டர்’. நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘மான்ஸ்டர்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, ‘முதல் வாரம் வெற்றி, இரண்டாவது வாரம் இரட்டிப்பு வெற்றியானதில் மகிழ்ச்சி. நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் காலத்தில், கதைக்காக பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதைதான் நாயகன்.

அனைத்து திரையரங்கிலும் சென்று பார்த்தோம். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். என்னைப் பார்த்து எலி மாமா என்று ஒரு குழந்தை கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.



இம்மாதிரி குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன். பாகுபலிக்கு பிறகு இப்படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற வள்ளலாரின் வரிகள் குழந்தைகள் மனதில் ஆழமாக பதியச் செய்ததே இயக்குநரின் வெற்றி. குழந்தைகள் மனதில் அன்பை விதைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். இதே குழுவுடன் மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்’ என்றார்.


Tags:    

Similar News