சினிமா

பார்ட் 2 எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை - எஸ்.ஜே.சூர்யா

Published On 2019-05-15 14:37 GMT   |   Update On 2019-05-15 14:37 GMT
மான்ஸ்டர் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, பார்ட் 2 எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார். #SJSuryah
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மான்ஸ்டர்’. இதில் இவருக்கு பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. 

சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டியில், ‘மெர்சல், ஸ்பைடர் போன்ற படங்கள் வந்தால் மட்டும்தான் வில்லனாக நடிப்பேன். எல்லா படங்களிலும் ஒரே மாதிரி நடிக்க விரும்பவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட வில்லன் வேடங்களை தவிர்த்து இருக்கிறேன். பணத்துக்காக நடிக்கவில்லை. மன திருப்திக்காக நடிக்கிறேன்.



குஷி 2, வாலி 2 படங்களுக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, பார்ட் 2 எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை’ என்று கூறியிருக்கிறார்.
Tags:    

Similar News