சினிமா

பிரபல நடிகருக்கு வில்லியாகும் வரலட்சுமி

Published On 2019-05-14 10:35 GMT   |   Update On 2019-05-14 10:35 GMT
சர்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாக நடித்த வரலட்சுமி அடுத்ததாக தெலுங்கில் பிரபல நடிகருக்கு வில்லியாக நடிக்க இருக்கிறார்.
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா படத்தில் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் வரலட்சுமி. அதன் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல் விஷால் நடித்த சண்டகோழி 2 படத்திலும் வில்லியாக மிரட்டியிருந்தார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதையை அமைத்துக்கொண்ட வரலட்சுமிக்கு தற்போது தெலுங்கு திரையுலகில் இருந்தும் வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளன.



தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் பாலகிருஷ்ணா நடிக்கும் அடுத்த படத்தில் வரலட்சுமி வில்லி கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். ரூலர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. நான்கு மாதங்களுக்குள்ளாகப் படத்தை முடித்து தசரா பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News