சினிமா

நயன்தாரா, திரிஷா வரிசையில் ஷில்பா மஞ்சுநாத்

Published On 2019-04-26 14:05 GMT   |   Update On 2019-04-26 14:05 GMT
காளி, இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் படங்களின் மூலம் பிரபலமான ஷில்பா மஞ்சுநாத், தற்போது நயன்தாரா, திரிஷா வரிசையில் பின் தொடர்கிறார். #ShilpaManjunath
காளி, இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் படங்களின் மூலம் பிரபலமானவர் ஷில்பா மஞ்சுநாத். இவர் அடுத்து இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் பேரழகி ஐ.எஸ்.ஓ. 

கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி தயாரித்து இயக்கியுள்ளார். ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார். 



படம் குறித்து பேரழகி விஜயன் கூறியதாவது: ‘இது ஒரு அறிவியல் புனைவு படம். சீரியசாக இல்லாமல், மிக ஜாலியாக காமெடி கலந்து இப்படத்தை எடுத்துள்ளேன். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். ஷில்பா மஞ்சுநாத் இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் படத்தில் நடித்து வரும் நயன்தாரா, திரிஷா வரிசையில், ஷில்பா மஞ்சுநாத்தும் இணைந்துள்ளார். 
Tags:    

Similar News