சினிமா
பொள்ளாச்சி பாலியல் கொடுமை - உச்சபட்ச தண்டனையை தாமதமில்லாமல் வழங்க வேண்டும் : சத்யராஜ்
பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து நடிகர் சத்யராஜ் வீடியோ மூலம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். #PollachiRapists
பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கல்லூரி, பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இந்த சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது நடிகர் சத்யராஜ் வீடியோ மூலம் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், ‘பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை, அக்கிரமத்தின் உச்சம், அநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம். இந்த மனித மிருகங்களை பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர்களுக்கு சட்டப்படி உச்சபட்ச தண்டனையை தாமதமில்லாமல் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
#PunishTheRapistspic.twitter.com/MAmNyho1L1
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) March 12, 2019