சினிமா

என்னை வீட்டிலேயே அடைத்து வைத்தனர் - பிரியா வாரியர்

Published On 2019-02-13 13:53 GMT   |   Update On 2019-02-13 13:53 GMT
கண்ணடித்து புகழ் பெற்ற பிரியா வாரியர், பெற்றோர்கள் என்னை வீட்டிலேயே அடைத்து வைத்தனர் என்று கூறியிருக்கிறார். #PriyaVarrier #OruAdaarLove
கண்ணடித்து புகழ் பெற்ற பிரியா வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ திரைப்படம் காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. காதல் காமெடி கதையான இந்த படம் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் பிரியா வாரியர் அளித்த பேட்டியில் ‘கண்ணடிக்கும் காட்சி மூலம் பிரபலம் அடைந்ததும் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் பயந்தார்கள். எல்லாமே எனக்கும் என் குடும்பத்துக்கும் புதிதாகத்தான் இருந்தது.



மொபைல் போன் கூட என்னிடம் கொடுக்கப்படவில்லை என்பது உண்மைதான். சில நாட்கள் என்னை வீட்டிலேயே அடைத்து வைத்துவிட்டார்கள். என் பெற்றோர் பயந்ததால் என்னை வெளியே அனுப்ப மறுத்துவிட்டனர்’ என்று கூறி இருக்கிறார்.
Tags:    

Similar News