சினிமா

புனே சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

Published On 2019-01-29 09:49 GMT   |   Update On 2019-01-29 09:49 GMT
வஸந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படம் புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது. #SivaranjiniyumInnumSilaPengallum #Vasanth
இயக்குனர் வஸந்த் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் படம் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”. சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று பாராட்டுக்களை பெற்று வரும் இந்த படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், மயக்கம் என்ன சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து, மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

கடந்தவாரம் புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம் பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது. முன்னதாக மும்பை திரைப்பட விழா, 23-வது கேரள சர்வதேச திரைப்பட விழா, ஸ்வீடன் நாட்டு திரைப்பட விழாவிலும் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. 



இந்த திரைப்படத்திற்கு என்.கே.ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். குறிப்பாக, பின்னனி இசை இல்லாதாது மும்பை திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை வைத்து திரைக்கதையாக்கி, இயக்குனர் வஸந்த் இந்த திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார். #SivaranjiniyumInnumSilaPengallum #Vasanth #PIFF

Tags:    

Similar News