சினிமா
மகேந்திரனுக்கு கை கொடுக்கும் சிவகார்த்திகேயன்
மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட இருக்கிறார். #NammaOorukuEnnaDhanAachu
‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் மாஸ்டர் மகேந்திரன். இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார்.
தற்போது இவர் கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ‘ரங்கராட்டினம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் மகேந்திரன் ஜோடியாக ஷில்பா நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
இப்படத்தை அடுத்து ‘நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் நாளை மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறார்.
இந்த படத்தை நல்.செந்தில் குமார் இயக்குகிறார். ஜி.எஸ்.ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.