சினிமா

ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்? - ஸ்ரீரெட்டி மீது பாரதிராஜா பாய்ச்சல்

Published On 2018-07-24 09:28 GMT   |   Update On 2018-07-24 09:28 GMT
ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும், விளம்பரத்துக்காக நடிகர்கள் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறுவதாக இயக்குநர் பாரதிராஜா குற்றம்சாட்டியுள்ளார். #SriReddy #BharathiRaja
தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. சினிமா வாய்ப்பு தருவதாக தெலுங்கு பட இயக்குநர்கள், இளம் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டுக்களை கூறினார்.

இதற்காக அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். தெலுங்கு பட உலகில் இருந்து சென்னையில் மையம் கொண்டுள்ள ஸ்ரீரெட்டி தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி என பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை செக்ஸ் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார். பலரும் ஸ்ரீரெட்டிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீ ரெட்டியின் தமிழ் திரைஉலகினர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.



தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த பாரதிராஜா ஸ்ரீரெட்டி குறித்து கூறியதாவது:-

‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் ? ஸ்ரீரெட்டி அனைத்திற்கும் அனுமதி கொடுத்துள்ளார். ஸ்ரீரெட்டியின் சம்மதத்துடன் எல்லாம் நடந்திருக்கிறது.

அப்படி இருக்கும்போது அதனை வைத்து அவர் விளம்பரம் தேடிக் கொள்ளக்கூடாது. இதற்காக ஒட்டு மொத்த சினிமா துறையை குறை சொல்லக்கூடாது’.

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார். #SriReddy #BharathiRaja

Tags:    

Similar News