சினிமா

வாய்ப்பு இல்லாவிட்டால் அங்கேயே சென்றுவிடுவேன் - நிவேதா பெத்துராஜ்

Published On 2018-06-20 08:46 GMT   |   Update On 2018-06-20 08:46 GMT
ஒருநாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜ், பட வாய்ப்பு இல்லாவிட்டால் துபாய்க்கே சென்று விடுவேன் என்று கூறியிருக்கிறார். #NivethaPethuraj
நிவேதா பெத்துராஜ், ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகமானவர். அதற்குள் எட்டு படங்களை முடித்துவிட்ட இவருக்கு மதுரை தான் பூர்வீகம். ‘பிறந்தது மதுரை என்றாலும் துபாயில் தான் வளர்ந்தேன். இப்போதும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மதுரை சென்றுவிடுவேன். 

அழகி போட்டியில் என்னை பார்த்துவிட்டு முதல் பட வாய்ப்பு வந்தது. ஒன்றிரண்டு படங்கள் அனுபவத்திற்காக நடித்து தான் பார்ப்போமே என்று வந்தேன். முழுநேர நடிகையாகி விட்டேன். சினிமாவில் இயக்குனர் ஆக ஆசை வந்துள்ளது. 



ஓவியம் வரைவேன். கார் நன்றாக ஓட்டுவேன். பந்தயங்களில் கூட கலந்துகொண்டுள்ளேன். சினிமாவில் நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பேன். சினிமாவில் வாய்ப்பு இல்லாவிட்டால் துபாய்க்கே சென்றுவிடுவேன்’ என்று நிவேதா கூறி இருக்கிறார்.
Tags:    

Similar News