ராசிபலன்

வருகிற 21-ந்தேதி சூரிய கிரகணம்: கன்னி ராசிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்- ஜோதிடர்கள் கணிப்பு

Published On 2025-09-17 11:12 IST   |   Update On 2025-09-17 11:12:00 IST
  • தொழிலில் முதலீடு செய்வது, திருமண பேச்சுவார்த்தை நடத்துவது போன்றவை திடீர் விளைவுகளை ஏற்படுத்தும்.
  • கிரகணம் கன்னி ராசிக்காரர்களின் உடல் மற்றும் மனநலனின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும் போது ஏற்படும் நிகழ்வே சூரிய கிரகணம் எனப்படுகிறது.

சந்திரன் சூரியனின் ஒளியை மறைப்பதால் பூமியின் மீது சில பகுதிகளில் சூரிய ஒளி விழாமல் இருக்கும் போதே சூரிய கிரகணம் நிகழ்கிறது.

இந்த மாதம் 21-ந்தேதி சூரிய கிரகணம் நிகழ்கிறது. இது கன்னி ராசியில் நிகழ இருப்பதாகவும், அந்த நாளில் கன்னி ராசிக்காரர்கள் செய்யக்கூடியவகைள், செய்யக்கூடாதவை ஆகிவைகளை ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

இந்த சூரிய கிரகணம் ஏற்படும் காலம் வழக்கமான அமாவாசையைப் போல் இல்லாமல் இருப்பதால், அவை நம் மனநிலைகள் மற்றும் உணர்வு நிலைகளில் திடீர் மாற்றங்கள் கொண்டு வரக்கூடும். இது துல்லியமான தெளிவுக்கு நல்ல அறிகுறியாக இருந்தாலும், உங்கள் விருப்பங்களை ஒத்துப்போகாதவற்றுடன் இணைப்பதற்கு வழிவகுக்கும். அதனால் தெளிவான மனநிலையுடன் இருங்கள்.

இந்த நேரத்தில் பெரிய முடிவுகளை எடுக்காதீர்கள், உங்கள் உடல்நலம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

உதாரணமாக தொழிலில் முதலீடு செய்வது, திருமண பேச்சுவார்த்தை நடத்துவது போன்றவை திடீர் விளைவுகளை ஏற்படுத்தும். ஆகையால் இந்த காலத்தில் பொறுமை காப்பது நல்லது. கிரகணம் கன்னி ராசிக்காரர்களின் உடல் மற்றும் மனநலனின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

இந்த காலங்களில் சுய பராமரிப்பை மேற்கொள்வது, போதுமான ஓய்வு எடுப்பது முக்கியமான ஒன்றாகும். யோகா மற்றும் சீரான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியமான ஒன்றாகும்.

கிரகணம் மனநலனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆதலால், உறவுகளை கையாள்வதை திறம்பட செய்யவேண்டும். கணவன், மனைவி, பிள்ளைகள், உறவுக்காரர்கள் என யாரையும் கட்டுப்படுத்த முயலாதீர்கள், நீங்கள் இறுகப்பிடிக்க முயற்சித்தால் உறவுகளிடையே மோதல் உருவாக வாய்ப்புண்டு. அதனால் உறவுகளிடையே பொறுமையை கடைபிடியுங்கள். உறவுப்பிரச்சனைகளை அமைதியாக கவனியுங்கள்.

கிரகணங்கள் ஆழ்ந்த ஆன்மீக சக்தியைக் கொண்டுள்ளன. கவனச்சிதறல் இருந்தால் சக்தி வாய்ந்த நுண்ணுர்வுகளை தவறவிடுவீர்கள். ஆகையால் தியானத்தில் ஈடுபடுங்கள், உள்ளத்தை குவித்து ஆன்மீக நாட்டத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு நல்வழியை மீட்டுத் தரும் ஒரு வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு கன்னி ராசிக்காரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஜோதிடர்கள் விளக்கியுள்ளனர்.

Tags:    

Similar News