தனுசு - குரோதி வருடம் வருட பலன்

சோபகிருது வருட பலன் 2023

Published On 2023-04-08 08:23 GMT   |   Update On 2023-04-08 08:23 GMT

அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீக நாட்டம் நிறைந்த தனுசு ராசியினருக்கு பிறக்கும் சோப கிருது வருட புத்தாண்டு அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். திருக்க ணித பஞ்சாங்கப்படி ஆண்டின் துவக்கத்தில் குருபகவான் ஏப்ரல் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்கிறார். ஜனவரி 17ல் நடந்த சனிப்பெயர்ச்சியில் சனி பகவான் மூன்றாமிடம் எனும் முயற்சி, சகாய ஸ்தானத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார். தற்போது ராசிக்கு 5,11ல் நிற்கும் ராகு கேதுக்கள் அக்டோபர் 30 முதல்4,10மிடம் செல்கிறார்கள்.

எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும்.எதையும் தீர்க்கமாக முடி வெடுத்து சிந்தித்து செயல்ப டுவீர்கள். தனித்த அடையா ளத்துடன் மற்றவர்க ளுக்கு முன் மாதிரியாக வாழ்ந்து காட்டுவீர்கள்.ஏழரைச் சனியால் சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்கு சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்கு வந்து விடுவீர்கள்.

இதுவரை சொத்து வாகன வசதி இல்லாத வர்களுக்கு புதிய சொத்துகள் மற்றும் வாகனங்கள் கிடைக்கும்.கவுரவப் பதவிகள் தேடி வரும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு அதிக தொழில் முதலீடு செய்யக் கூடிய தொழில் பார்ட்னர்கள் கிடைப்பார்கள்.

அரசு ஊழியர்களுக்கு விரும்பிய ஊருக்கு வேலைமாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.3ல் சனி இருப்பதால் ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் தேடி வரும். புத்திர பாக்கியம் உண்டாகும். ஆரோக்கியம் சீராகும்.

குடும்பம், பொருளாதாரம் : உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். விட்டுப் பிரிந்த உறவுகள் எல்லாம் தேடி வருவார்கள். சில உறவினர்களிடம் எதிர்பார்த்த, எதிர்பார்க்காத உதவிகள் கிடைக்கும். நல்லோர் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும்.

தீட்டிய திட்டங்களில் வெற்றி பெற நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உதவுவார்கள்.சிலருக்கு வாழ்க்கைத் துணையின் மூலம் சில பொருள் வரவுகள் ஏற்படும். தொழிலில் சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைக்கும். தேக ஆரோக்கியம், மன அமைதி, பொருளாதார முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் என பல புதிய மாற்றங்கள் ஏற்படும்.

பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கு தகுந்த வருமானமும் அதிகரிக்கும்.உயில் சொத்து, பணம், பங்குச் சந்தை ஆதாயம் போன்ற மறைமுக வகையில் பொருளாதாரம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாட்டால் பாகப்பிரிவினை தள்ளிப்போகும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தொடர் கதையாக, இழுபறியாக இருக்கும்.

பெண்கள் : பெண்களுக்கு இந்த புத்தாண்டில் நன்மைகள் அதிகமாக இருக்கும் குடும்பத்திலுள்ள வர்களிடம்உங்களின் பேச்சு எடுபடும். உங்களின் கௌரவம் அந்தஸ்து உயரும். உங்கள் கணவர்நீங்கள் மனதில் நினைப்பதையும்நடத்துவார். மாமியார் மாமனாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள் .பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பணவரவு சரளமாக இருக்கும். சொந்த வீட்டு ஆசை அதிகரிக்கும்.

மூலம் : நெருக்கடி நிலை மாறும் காலம். தடைபட்ட அனைத்து இன்பங்களும் துளிர் விடும். தடையாக இருந்த ஒரு சில காரியங்கள் தானாக நடைபெறும்.திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

போட்டி, பகை, கடன்தொல்லை, வேலை, தொழில் பாதிப்பு குறையும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம், அதிர்ஷ்டக் குறைபாடு இருந்த இடம் தெரியாது. உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். பெண் வழிப் பிரச்சனைகள் அகலும். சிலர் பூர்வீகத்தை விட்டு பிழைப்பிற்காகவெளியேறலாம்.பங்கு சந்தை ஆதாயம் மகிழ்விக்கும். மாணவர்களுக்கு நல்ல கல்லூரியில் இணைந்துபடிக்கும் வாய்ப்பு உள்ளது. சம்பந்திகள் சண்டை முடிவிற்கு வரும்.வேலையாட்களால் உருவாகிய பிரச்சனை சீராகும்.ஆன்மீக பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். தினமும் தட்சிணாமூர்த்தி காயத்திரி மந்திரம் படிக்கவும்.

பூராடம் : ஆதாயம் நிறைந்த காலம். கண் திருஷ்டி, போட்டி, பொறாமை பாதிப்புகள் அகலும். பங்குச் சந்தை, திடீர் அதிர்ஷ்ட ஆதாயம் உண்டு. பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம், தொழில் முன்னேற்றம் வெகு சிறப்பாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்த மற்றும் ரொட்டேஷனுக்கு தேவையான கடன் அரசுடமை வங்கிகள் மூலம் கிடைக்கும்.

வீட்டில் மேளச் சத்தம் கேட்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமணத்தை நடத்தி ஆனந்தம் அடைவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். பூர்வீகம்தொடர்பானபிரச்சனைகள் குறையும். குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றஏற்ற காலம். பருவ வயது பிள்ளைகள் பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம். தினமும் தட்சிணாமூர்த்தி மூல மந்திரம் படிக்கவும்.

உத்திராடம் 1 : மனோதிடம்கூடும் காலம்மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். இழுபறி நிலைமாறி துரிதமாக காரியங்கள் நடைபெறும். திட்டமிட்டு வெற்றிக் கனியை சுவைப்பீர்கள்.யாரும் செய்யத் தயங்கும் செயல்களை துணிச்சலுடன் செய்து முடிக்கும் வல்லமை உண்டாகும். தாய் மாமா அல்லது தாய்வழி தாத்தா உங்களுக்கு நிதி உதவி செய்யலாம். வெவ்வேறுஊர்களில்பிரிந்துவாழ்ந்ததம்பதிகள் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும்நல்ல நேரம்.உங்களின் முயற்சிக்கு பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், மனைவி, மக்கள் உதவியாக இருப்பார்கள். ஆடம்பரத்தை, அந்தஸ்த்தைதக்க வைத்துக் கொள்ள அதிக செலவு செய்ய நேரும். வெளிநாட்டிற்கு இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். தினமும் தட்சிணாமூர்த்தி அஷ்டோதாரம் படிக்கவும்.

பரிகாரம் : கற்பக விநாயகா் கோவில் தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோவில்களுள் ஒன்றாகும். இது காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் நடுவே பிள்ளையார்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. தனுசு ராசியினர் இங்கு சென்று வர சுப பலன் கூடும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News