கடகம் - இன்றைய ராசி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2022

Published On 2022-05-21 07:28 GMT   |   Update On 2022-05-21 07:28 GMT

ஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2023 ஆண்டு வரை

ஆறில் வருகிறது சனி, அனைத்திலும் வெற்றி இனி!

சிம்ம ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 6-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். 6-ம் இடம் என்பது எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிப்பதாகும். உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். எதிரிகள் ஸ்தானாதிபதி, எதிரிகள் ஸ்தானத்திலேயே இப்பொழுது சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் விலகும். பகை பாராட்டியவர்கள் பாசம் காட்ட முன்வருவர். ஜீவன ஸ்தானமாகவும் அது கருதப்படுவதால் உத்தியோகம் மற்றும் தொழிலில் உங்கள் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் இருக்கின்றார். அவரோடு இப்பொழுது சனி இணைவதால் 'நீச்ச பங்க ராஜயோகம்' ஏற்படுகின்றது. சப்தமாதிபதியாகவும் சனி விளங்குவதால், குடும்பப் பிரச்சினைகள் அவ்வப்போது வரத்தான் செய்யும்.

எதிரிகளின் பலம் குறையும்

டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தை அடையும் சனி பகவானால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் நற்பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும்.

சனியின் பார்வை பலன்கள்

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை, 3, 8, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. அதன்படி சகோதரம், சகாயம், வழக்குகள், உடல்நலம், இழப்புகள், இடமாற்றங்கள், தூரதேசப் பயணங்கள், விரயங்கள், கடன் சுமை, ஆயுள் விருத்தி, நீங்காப்பகை, ஏமாற்றம், புனிதப்பயணங்கள், மூதாதையர் சொத்துக்கள் சம்பந்தப்பட்டவைகளை குறிக்கும் இடங்களில் சனியின் பார்வை பதிவதால், அந்த ஆதிபத்யங்களில் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரலாம். 3-ம் இடத்தை சனி பார்ப்பதால் உடன்பிறப்புகளின் பகை அகலும். சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சனியின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் சிறுசிறு ஆரோக்கியத் தொல்லைகள் வந்து அலைமோதும்.

சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால், திடீர் திடீரென பயணங்கள் ஏற்படும். வாடகை வாகனத்தில் உலா வந்த நீங்கள், இனி சொந்த வாகனம் வைத்துக்கொள்ள வாய்ப்புகள் கைகூடிவரும்.

சனியின் பாதசாரப் பலன்கள்

27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சந்தோஷ வாய்ப்புகள் ஏராளமாக வந்து சேரும். சிந்தித்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். சனி பகவான், உங்கள் ராசி நாதனான சூரியன் காலில் சஞ்சரிப்பதால் பிரகாசமான எதிர் காலம் உங்களுக்கு வந்து சேரும். மனையில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கும்.

28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சுபவிரயங்கள் அதிகரிக்கும். விரயாதிபதியாக சந்திரன் விளங்குவதால் இக்காலத்தில் வீட்டுப் பராமரிப்புச் செலவுகளை மேற்கொள்ளலாம். அசையாத சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் இருந்த தடை அகலும்.

27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மனைகட்டிக் குடியேறும் யோகம் உண்டு. குடும்ப உறுப்பினர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை கிடைத்து குடும்ப வருமானம் உயரும். செவ்வாய் உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகமாவார். எனவே பூமி விற்பனை தொழில் செய்பவர்களுக்கு, பொருளாதாரநிலை நினைக்க இயலாத அளவு உயரும். இக்காலத்தில் சனியும் கும்ப ராசிக்குச் செல்கின்றார். கண்டகச்சனியாக இருந்தாலும் கும்பம் அவருக்குச் சொந்த வீடு என்பதால் கெடுபலன்களை கொடுக்க மாட்டார். புது முயற்சிகளில் தாமதம் உருவாகலாமே தவிர, காரியம் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.

குருப்பெயர்ச்சிக் காலம்

கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் வருவதால், அதன் பார்வை பலம் உங்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்கும். ஆரோக்கியம் சீராகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது சுபகாரியங்கள் முடிவடையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு. வருமானம் இருமடங்காக உயரும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். எனவே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானம் பலப்படுகின்றது. இதனால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கேது மூன்றில் இருப்பதால் சகோதரர்களிடையே ஒற்றுமை குறையலாம். கூட்டு வியாபாரம் செய்த உடன்பிறப்புகள் தனித்தியங்க வேண்டுமென்று கோரிக்கை வைப்பர்.

8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அஷ்டமத்தில் ராகு வருவதால் ஆதாயத்தைக் காட்டிலும் விரயங்கள் கூடலாம். இருப்பினும் குரு வீடாக இருப்பதால் சுபவிரயங்களே அதிகரிக்கும். கேது சஞ்சாரத்தால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கும். இக்காலத்தில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.

வெற்றி பெற வைக்கும் வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை தோறும் விரதமிருந்து சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இல்லத்துப் பூஜை அறையில் சிவ குடும்ப படம் வைத்து திருவாசகம் படித்து வழிபடுவது நல்லது. வாழ்க்கை வளமாக அமையும்.

Similar News