மிதுனம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி (2023) ராசிபலன்கள், பரிகாரங்கள்

Published On 2023-12-19 05:17 GMT   |   Update On 2023-12-19 05:21 GMT

ஒன்பதாமிடத்தில் சனி, உன்னத வாழ்வுதான் இனி!

சனியின் வக்ர காலம்!

19.6.2024 முதல் 4.11.2024 வரை மற்றும் 2.7.2025 முதல் 18.11.2025 வரை என்று இரண்டு முறை சனி வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி தரும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோகத்தில் மீண்டும் பழைய இடத்திற்கே வரும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் வழியில் ஏற்பாடு செய்த திருமண முயற்சி கைகூடும். 9-ம் இடத்திற்கு அதிபதியாக சனி விளங்கு வதால், ஒருசில சமயங்களில் பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வாகன மாற்றம் செய்ய உகந்த நேரமிது.

மிதுன ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 20.12.2023 அன்று 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு அடியெடுத்து வைக்கின்றார். உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. ஆயுள் மற்றும் பிதுர்ரார்ஜித ஸ்தானத்திற்கு அதிபதியான அவர், தன் சொந்த வீடான கும்ப ராசியில் சஞ்சரிப்பது யோகம் தான். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். பொருளாதார நிலை உயரும். உடல்நலமும், மன நலமும் சிறப்பாக இருக்கும் நேரமிது. ஒளிமயமான எதிர்காலம்!

டிசம்பர் 20-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பிதுர்ரார்ஜித ஸ்தானத்திற்கு சனி வருகின்றார். அது பாக்கிய ஸ்தானமாகவும் இருப்பதால் இதுவரை தடைப்பட்டவை தானாக வந்து சேரும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகளும், எதிர்பார்த்த ஊதிய உயர்வும் கிடைக்கும். கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைபடிப்படியாக மாறும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். பொருளாதார நிலையில் இருந்த ஏற்ற இறக்க நிலை சீராகும்.

சனியின் பார்வை பலன்கள்!

உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 3, 6, 11 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே சகோதரம், ஜீவனம், உத்தியோகம், தொழில் வளர்ச்சி, லாபம் ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளும் இடங்களில் சனியின் பார்வை பதிவதால் அந்த இடங்களுக்குரிய ஆதிபத்தியங்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். குறிப்பாக கூடப்பிறந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேற, விலகிய சனியை விரும்பிச் சென்று வழிபடுவது நல்லது.

சனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் எதிரிகள் விலகிச் செல்வர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய நல்ல தகவல் கிடைக்கும். கடன் சுமை குறைய புதிய முடிவெடுப்பீர்கள். சனியின் அருட்பார்வை மூலம் உடல் ஆரோக்கியம் சீராகும்.

உத்தியோகத்தில் திடீரெனக் கூடுதல் பொறுப்புகளும், சம்பள உயர்வும் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து பொருளாதார நிலை உயர வழிவகுத்துக் கொடுப்பர்.

சனியின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய ஒப்பந்தங்களும் வந்துசேரும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் வருமானம் கிடைத்து மகிழ்ச்சிப்படுத்தும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும்.

சனியின் பாதசாரப் பலன்கள்!

செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது(20.12.2023 முதல் 21.2.2024 வரை) துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். வீடு, இடம், வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கேட்ட சலுகைகளும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். அரசுவழி உத்தியோகத்திற்காக ஏற்பாடு செய்தவர்களுக்கு அது கைகூடும். வெளிநாட்டு வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும், பங்குச்சந்தையில் நுழைந்திருப்பவர்களுக்கும் வளர்ச்சி அதிகரிக்கும்.

ராகு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (22.2.2024 முதல் 14.3.2025 வரை)

தொழில் வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். சேமிப்பு உயரும். 'தொழிலுக்கான மூலதனம் இல்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு வங்கிகள், வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். 'வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொண்டு பணிபுரியச் செல்லலாமா?' என்று கூட சிந்திப்பீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைந்து பொருளாதார நிலை உயர வழிவகுத்துக் கொடுப்பர்.

குரு சாரத்தில்சனி சஞ்சரிக்கும் பொழுது (15.3.2025 முதல் 6.3.2026 வரை)

பொருளாதாரப் பற்றாக்குறை அகல எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். பிரபலங்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர். 'வாசல்தேடி வந்த வரன்கள் எல்லாம் திரும்பிச் செல்கின்றதே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது கல்யாண முயற்சி கைகூடும். எந்தக் காரியமும் தொடங்கும் பொழுது தடையாக இருந்தாலும் முடிவில் வெற்றி கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்திகரமாக இருக்கும். கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் மீண்டும் கைகூடிவரும்.

குருப்பெயர்ச்சிக் காலம்!

சனிப்பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அதுமட்டுமல்லாமல் வக்ர காலத்தில் கடக ராசிக்கு குரு செல்கின்றார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு குரு வருவது அவ்வளவு நல்லதல்ல. 'இடமது பனிரெண்டில் இயல்பாக குருவும் வந்தால், கடமையில் கவனம் தேவை, காசுகள் விரயமாகும்' என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. விரயத்தை சுபவிரயமாக அமைத்துக் கொள்ளுங்கள். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம் பரப் பொருட்களையும் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது ஜென்ம குருவாக இருப்பதால் உடல்நலத்தில் கவனம் தேவை. உறவினர் பகை உருவாகும். இடம், வீடு மாற்றங்கள் எளிதில் கைகூடும். கடகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது வாங்கல்-கொடுக்கல்களை சீர்செய்து கொள்வீர்கள். வருமானம் உயரும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

26.4.2025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றார்கள். இதன் விளைவாக உங்கள் பாக்கிய ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே தொழில் வளர்ச்சி திருப்தி தரும். இதுவரை நடைபெறாத காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். தர்ம காரியங்கள் பலவும் செய்து மற்றவர்களால் போற்றப்படுவீர்கள். மூன்றாம் இடத்திற்கு கேது வருவதால் முன்னேற்றத் தடைகள் அகலும்.

முக்கியப் புள்ளிகள் உங்கள் பிரச்சினைகள் தீர வழிகாட்டுவர். தொழிலுக்குத் தேவையான மூலதனம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஊக்குவிப்பு உற்சாகத்தைத் தரும்.

வெற்றி பெற வைக்கும் வழிபாடு!

புதன்கிழமை தோறும் விரதம் இருந்து அனுமனை வழிபடுவதோடு, சிறப்பு வழிபாடாக திருக்கடையூர் சென்று அபிராமி அம்மன், அமிர்தகடேஸ்வரர் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும்.

Similar News