ஆன்மிக களஞ்சியம்

திருமணத் தடை நீக்கும் மயிலாப்பூர் கோவில்

Published On 2024-07-24 17:30 IST   |   Update On 2024-07-24 17:30:00 IST
  • மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோவிலில் மயூரவல்லி தாயாருக்கு வெள்ளிக்கிழமை வில்வ இலைகளால் அர்ச்சனை நடைபெறுகிறது.
  • இந்த அர்ச்சனையால் திருமண தடைகள் விலகி திருமணம் நடைபெறுவதாக ஐதீகம்.

திருமணத் தடை நீங்க!

மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோவிலில் குடிகொண்டுள்ள மயூரவல்லி தாயாருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வில்வ இலைகளால் அர்ச்சனை நடைபெறுகிறது.

இந்த அர்ச்சனையால் திருமண தடைகள் விலகுவதாக ஐதீகம்.

அர்த்தமுள்ள அருகம்புல்!

விதை எதுவும் போடாமல் முளைப்பதுதான் அருகம்புல். மனிதனது ஆன்மாவுக்கும் ஆதாரம் ஏதும் இல்லை.

இப்படி அருகம்புல் போல வந்த ஆத்மாவை உன்னிடம் நிறுத்தி வழிபடுகிறேன்.

எனது ஆன்மாவை தூய்மைப்படுத்த அருகம்புல்லைப் போட்டு வணங்குகிறேன் என்பதுதான் அருகம்புல் வழிபாட்டின் அர்த்தமாகும்.

Tags:    

Similar News