ஆன்மிக களஞ்சியம்

சோமசூக்த பிரதோஷம்

Published On 2024-01-31 10:26 GMT   |   Update On 2024-01-31 10:26 GMT
  • ஈஸ்வரனை சாதாரண நாளில் இடமிருந்து வலமாக மூன்று முறை வலம் வந்தால் போதுமானது.
  • பிரதோஷ நாளில் “சோமசூக்த பிரதட்சன” முறையை கையாள வேண்டும்.

ஈஸ்வரனை சாதாரண நாளில் இடமிருந்து வலமாக மூன்று முறை வலம் வந்தால் போதுமானது.

ஆனால் பிரதோஷ நாளில் அப்படி வலம் வருதல் கூடாது.

பிரதோஷ நாளில் "சோமசூக்த பிரதட்சன" முறையை கையாள வேண்டும்.

சோமசூக்த பிரதட்சணம் என்றால் என்ன?

ஆலால விசமானது தேவர்களை துரத்தியது. தேவர்கள் ஈசனை வலமாக ஓடி வந்தனர்.

ஆலால விசம் இடமாக வந்து எதிர்த்தது. விசம் எதிர்ப்பதை கண்டு தேவர்கள் அப்படியே திரும்பி இடமாக வந்தனர்.

ஆலாலம் வலமாக வந்து எதிர்த்தது. ஆக ஆலாலம் முன்னும், பின்னும் தேவர்களை எதிர்த்ததால் பிதோஷ நாளன்று ஈஸ்வரனை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் தரிசனம் செய்ய வேண்டும்.

இந்த முறையே "சோம சூக்த பிரதட்சணம்".

Tags:    

Similar News