ஆன்மிக களஞ்சியம்

பொன்னூஞ்சல் பாடல்

Published On 2024-02-14 11:56 GMT   |   Update On 2024-02-14 11:56 GMT
  • மணி வாசகர் இந்தப் பொன் ஊசல் 9-பாடல்களிலும் உத்தர கோச மங்கையைப் பாடுகிறார்.
  • இதைவிட உன்னதமான தாலாட்டுப் பாடல் வேறு எதுவும் இல்லை.

மணி வாசகர் இந்தப் பொன் ஊசல் 9-பாடல்களிலும் உத்தர கோச மங்கையைப் பாடுகிறார்.

இன்றைநாள் வரைக்கும் எல்லா முக்கியச் சிவாலயங்களிலும காலியில் எம்மானைப் பள்ளி அனுப்பும் போது இந்தப் பொன்னூசல் பாடலப் பாடி உத்தரகோச மங்கைக்கு அரசே என்று அனுதினம் இறைவனை விளிக்கிறார்கள்.

இந்த 9-பாடல்களையும் பாடி  பிறகு தால் ஆட்டிப் பாருங்கள் குழந்தை உயரமாக மட்டும் இல்லை உன்னதமாகவும் வளர்வான்.

'சீர் ஆர் பவழம் கால் முத்தம் கயிறாக

ஏர் ஆரும் பொற் பலகை ஏறி இனிது அமர்ந்து

நாராயணன் அறியா நாண்மலர்த் தாள் நாய் அடியேற்கு

ஊராகத் தந்து அருளும் உத்தர கோச மங்கை

ஆரா அமுதின் அருள் தாள் இணை பாடி

போர் ஆர் வேற் கண் மடவீர் பொன் ஊசல் ஆடாமோ . . .?'

இதைவிட உன்னதமான தாலாட்டுப் பாடல் வேறு எதுவும் இல்லை.

Tags:    

Similar News