ஆன்மிக களஞ்சியம்

பஞ்ச சிவ சேத்திரங்கள்

Published On 2023-12-16 18:17 IST   |   Update On 2023-12-16 18:17:00 IST
  • பிரம்மன் வழிபட்ட இடம் பிரம்மகிரி என்னும் அழகிய மலைப்பிரதேசமாகும்.
  • ஐந்தாவதாக சத்யேஜாதக மூர்த்தியாக சிந்தாமணியில் இருப்பது புராணவரலாறு.

அருணா நதிக்கரையில் தங்களின் பஞ்சசேத்திரங்கள் அமைத்து அருள்பாலிக்குமாறு நான்முகனும் சரஸ்வதியும் வேண்டிக்கொண்டனர்.

பிரம்மன் வழிபட்ட இடம் பிரம்மகிரி என்னும் அழகிய மலைப்பிரதேசமாகும்.

மூலசேத்திரமாக விளங்குவது சுருட்டப்பள்ளி ஆகும். இங்கு வால்மீகிஸ்வரராக காட்சி தருகிறார்.

சிவசயன சேத்திரத்தில் தத்புருஷமூர்த்தியாக விளங்குகிறார்.

மேற்கில் சத கூடாத்திரி என்னும் ராமகிரி, இந்த சேத்திரத்தில் ஈஸ்வரன் ஈசான மூர்த்தியாக வாலீஸ்வரராக விளங்குகிறார்.

கிழக்கு புறத்தில் விசங்கடம் என்னும் வடதில்லையில் அகோர மூர்த்தியாக ஸ்ரீ பாபஹரேஸ்வரேர் என்ற திருநாமத்துடன் ஈசன் வீற்றிருக்கிறார்.

அரியதுரையில் வாமதேவ மூர்த்தியாக ஸ்ரீ வரமுக்தீஸ்வரர் அருள்பாளிக்கிறார்.

ஐந்தாவதாக சத்யேஜாதக மூர்த்தியாக சிந்தாமணியில் இருப்பது புராணவரலாறு.

இவ்வாறு உண்டான பன்ச சேத்திரங்களில் ரகசிய சேத்திரம் என்றும், காலகூடசேத்திரம் என்றும் அழைக்கப்படுவது தான் சுருட்டப் பள்ளியாகும்.

Tags:    

Similar News