ஆன்மிக களஞ்சியம்

நினைத்ததை நடத்தி கொடுக்கும் ஆஞ்சநேயர்

Published On 2023-12-14 10:44 GMT   |   Update On 2023-12-14 10:44 GMT
  • நினைத்தக் காரியங்கள் சித்தியாகும். துன்பம் நீங்கி சந்தோஷம் வரும்.
  • குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு ஆஞ்சநேய சுவாமிகளால் குழந்தைச் செல்வம் உண்டாகும்.

ஆஞ்சநேயரை தினசரி தியானித்து தொழுபவர்களுக்கு தரித்திரம் நீங்கி சுபீட்சம் வரும்.

நினைத்தக் காரியங்கள் சித்தியாகும். துன்பம் நீங்கி சந்தோஷம் வரும்.

தங்களைப் பிடித்திருந்த தோஷங்கள் நீங்கும். நலிந்து போன வியாபாரம் புதுப்பொலிவுடன் நடக்கும்.

எதிரியாக நடந்து வந்த நண்பர்கள் நட்புடன் பழகுவார்கள். பகையாகிப் போன உறவினர்கள் பாசத்துடன் பழகுவார்கள்.

ஆஞ்சநேயரை அனுதினம் பூஜை செய்து வந்தால் யாராலும் குணப்படுத்த முடியாத கடுமையான வியாதிகள் கூட விரைவில் குணம் அடையும்.

வாழ்க்கையில் வெறுப்படைந்து மனசஞ்சலத்தால் தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள் கூட ஆஞ்சநேய சுவாமியை தியானித்து வந்தால், மனம் தெளிவுற்று அந்த எண்ணத்திலிருந்து விடுபட்டு புது வேகத்துடன் செயல்படுவீர்கள்.

குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு ஆஞ்சநேய சுவாமிகளால் குழந்தைச் செல்வம் உண்டாகும்.

உடன் பிறந்தவர்களினால் ஏற்படும் கெடுதல்கள் கூட விலகிவிடும்.

Tags:    

Similar News