காதுக்கு பின்னால் துளசி இலையை வைப்பது ஏன்?
- மாலை நேரமும், ஏகாதசிக்கும், செவ்வாய், வெள்ளி நாட்களிலும் துளசிப்பூ பறிக்கலாகாது என்று விதி உண்டு.
- வீட்டின் தரையை விட தாழ்ந்த மட்டத்தில் ஆகாமல் குறிப்பிட்ட அளவில் துளசி தரை அமைக்க வேண்டும்.
வழக்கமாக ஆன்மிக அன்பர்கள் தங்களது பக்தியின் வெளிப்பாடாக காதுக்கு பின்புறம் துளசி மற்றும் பூக்களை வைத்துக் கொள்வது இயல்பான ஒன்று.
காதுக்குப்பின் துளசி கதிர் அல்லது இலை சூடுவதற்கு இக்காலத்தில் யாரும் தயாராக மாட்டார்கள்.
அப்படி சூடுபவர்களை காதில் பூ வைத்தவன் என்று ஏளனமாக கூறுவது உண்டு.
ஆனால் காதுக்குப்பின் துளசி வைப்பதனால் பெரும் பயனடைந்தனர் பண்டைய மக்கள்.
மனித உடலில் மிகக் கூடுதலாக உறிஞ்சும் சக்தி உடையது காதுக்கு பின்புறம் உள்ள பகுதி ஆகும்.
இதை விஞ்ஞானம் நிரூபித்து இருக்கிறது. துளசியின் மருத்துவ குணங்களை நாம் நன்கு அறிவோம்.
இந்த மருத்துவ குணங்கள் காதுக்குப்பின் உள்ள சருமம் வழியாக ஊடுருவி செல்லும்.
இதுவே பழங்காலத்து மக்கள் காதுக்குப்பின் துளசி இலையைச் சூடி வந்ததும், பின் சந்ததிக்கு அதை கற்பித்ததும் ஆகும்.
பழங்காலத்தில் உள்ள வீடுகளில் துளசி மாடம் கட்டி துளசியை ஒரு புனித செடியாக பராமரித்து வளர்த்து வந்தனர்.
சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் கிழக்குப் பக்கத்தில் வாசலுக்கு நேராக துளசி மாடம் கட்ட வேண்டும் என்று நம் முன்னோர்கள் போதித்துள்ளனர்.
வீட்டின் தரையை விட தாழ்ந்த மட்டத்தில் ஆகாமல் குறிப்பிட்ட அளவில் துளசி தரை அமைக்க வேண்டும்.
துளசி தரையில் நடுவதற்காக கிருஷ்ண துளசியை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
துளசி செடிக்கு பக்கம் அசுத்தமாக செல்வது ஆகாது. ஜெபம் செய்து கொண்டே அதன் பக்கம் செல்ல வேண்டும்.
துளசியை தினமும் மூன்று வேளை வலம் வர வேண்டும். அவ்வாறு வலம் வரும்போது,
''பிரசீத துளசி தேவி
பிரசீத ஹரி வல்லையே
க்ஷீ ரோதமத நோத்புதே
துளசி த்வாம் நமாம்யஹம்"
என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.
துளசிப்பூ பறிக்க கூடாது,
துளஸ்வமுத சம்பூதா
சதா த்வாம் கேசவப்ரியே
கேச வார்த்தம் லுனமி த்வாம்
வரதா பவ சோபனே"
என்று சொல்ல வேண்டும்.
மாலை நேரமும், ஏகாதசிக்கும், செவ்வாய், வெள்ளி நாட்களிலும் துளசிப்பூ பறிக்கலாகாது என்று விதி உண்டு.
அதேபோல பூஜை செய்யாமல் துளசியை பறிக்கக்கூடாது.