ஆன்மிக களஞ்சியம்

அழகிய இளவரசி துளசியின் கதை

Published On 2024-02-02 11:37 GMT   |   Update On 2024-02-02 11:37 GMT
  • சமயத்திரு நூல்களில், துளசியை வ்ரிந்தா என்று அழைக்கின்றனர்.
  • வ்ரிந்தாவை மணந்த பின், வெல்ல முடியாதவனாக மாறினான் ஜலந்தர்.

சமயத்திரு நூல்களில், துளசியை வ்ரிந்தா என்று அழைக்கின்றனர்.

அசுர அரசரான கால்நேமியின் அழகிய இளவரசி தான் இந்த துளசி.

சிவபெருமானின் சக்தி வாய்ந்த பகுதியாக விளங்கிய ஜலந்தரை அவர் மணந்தார்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த தீயில் இருந்து பிறந்தவன் என்பதால் ஜலந்தருக்கு அதிக சக்தி இருந்தது.

பத்தினியாகவும், ஈடுபாடுள்ள பெண்ணாகவும் இருந்ததால், வ்ரிந்தா மீது காதலில் விழுந்தார் ஜலந்தர்.

விஷ்ணு பகவானின் தீவிர பக்தையாக விளங்கினார் வ்ரிந்தா.

ஆனால் ஜலந்தருக்கோ கடவுள்கள் என்றாலே வெறுப்பு தான்.

இருப்பினும் விதி அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்தது.

வ்ரிந்தாவை மணந்த பின், வெல்ல முடியாதவனாக மாறினான் ஜலந்தர்.

வ்ரிந்தாவின் தூய்மையும் கடவுள் பக்தியும் அதற்கு காரணமாக விளங்கி, அவனின் சக்தியை பலமடங்கு அதிகரித்தது.

சிவபெருமானாலேயே ஜலந்தரை வெல்ல முடியவில்லை.

அவனின் ஆணவம் அதிகரித்தது.

சிவபெருமானை வீழ்த்தி, அண்ட சராசரத்திலேயே சக்தி வாய்ந்த கடவுளாக திகழ வேண்டும் என்பதே அவனின் லட்சியமாக இருந்தது.

ஜலந்தரின் சக்தி அதிகரித்து கொண்டிருந்தது அனைத்து கடவுள்களுக்கும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியது.

உதவியை நாடி அனைவரும் விஷ்ணு பகவானிடம் சென்றனர்.

வ்ரிந்தா அவரின் தீவிர பக்தை என்பதால் விஷ்ணு பகவானுக்கு குழப்பம் உண்டாயிற்று.

அவளுக்கு அநீதி வழங்க அவர் மனம் இடம் கொடுக்கவில்லை.

ஆனால் ஜலந்தரால் அனைத்து கடவுள்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்ததால்,

விஷ்ணு பகவான் ஒரு விளையாட்டை அரங்கேற்றிட நினைத்தார்.

அதன்படி, சிவபெருமானுடன் ஜலந்தர் போரில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ஜலந்தர் போல் வேடமிட்டு வ்ரிந்தாவிடம் வந்தார் விஷ்ணு பகவான்.

முதலில் அவரை அடையாளம் காண முடியாமல், ஜலந்தர் தான் வந்துவிட்டான் என்று நினைத்து அவரை வரவேற்க சென்றாள் அவள்.

ஆனால் விஷ்ணு பகவானை அவள் தொட்ட மறு வினாடியே, அது அவளின் கணவன் இல்லை என்பதை அவள் உணர்ந்தாள்.

அவளுடைய தூய்மை கெட்டுப்போனதால், ஜலந்தர் தாக்குதலுக்கு உள்ளானான்.

தவறை உணர்ந்த அவள், தன் சுயரூபத்தை காட்டுமாறு விஷ்ணு பகவானிடம் கேட்டுக் கொண்டாள்.

தன் கடவுளே தன்னிடம் விளையாடியுள்ளார் என்பதை அறிந்த அவள் உடைந்து போனாள்.

தன்னுடைய தூய்மையை கெடுக்க தன் கணவன் போல் விஷ்ணு பகவான் வேடமிட்டு வந்ததை அறிந்த வ்ரிந்தா அவரை சபித்தார்.

விஷ்ணு பகவான் ஒரு கல்லாக மாற வேண்டும் என்று அவர் சபித்தார்.

அந்த சாபத்தை ஏற்றுக்கொண்ட விஷ்ணு பகவான், கண்டக்கா நதி அருகே ஷாலிகிராமத்தில் கல்லாக மாறினார்.

அதன் பின், தன் மனைவியின் தூய்மை என்ற பாதுகாப்பு ஜலந்தரை விட்டு போனதால், சிவபெருமானால் அவன் கொல்லப்பட்டான்.

மனம் உடைந்த வ்ரிந்தா, தன் வாழ்க்கையை முடிக்க முடி வெடுத்தாள்.

வ்ரிந்தா இறக்கும் முன், இனி அவள் துளசியாக அறியப்படுவாள் என விஷ்ணு பகவான் அவருக்கு வரம் அளித்தார்.

அதன்படி, இனி விஷ்ணு பகவானை வழிபடும் போது துளசியும் வழிபடப்படும்.

துளசி இலை இல்லாமல் விஷ்ணு பகவானுக்கு செய்யப்படும் பூஜை முழுமை பெறாது.

அதனால் தான் இந்து சடங்குகளின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக விளங்குகிறது துளசி.

நல்ல ஆரோக்கியத்துடன் அனைவரையும் ஆசீர்வதிக்க அனைத்து மக்களின் வீட்டில் வளரும் ஒரு செடியாக அருளளிக்கப்பட்டார்.

Tags:    

Similar News