ஆன்மிக களஞ்சியம்
அண்ணாசாமியின் பக்திக்காக கடைக்காரர் கனவில் வந்த முருகன்
- வழியில் இருந்த படக்கடை ஒன்றில் பழநி ஆண்டவரின் பெரிய அழகிய படம் ஒன்று அவர் கண்களைக் கவர்ந்தது.
- அதன்பால் ஆர்வம் ஏற்பட்டு நாயக்கர் அதனையே பார்த்துக் கொண்டு அங்கேயே நின்று விட்டார்.
வழியில் இருந்த படக்கடை ஒன்றில் பழநி ஆண்டவரின் பெரிய அழகிய படம் ஒன்று அவர் கண்களைக் கவர்ந்தது.
அதன்பால் ஆர்வம் ஏற்பட்டு நாயக்கர் அதனையே பார்த்துக் கொண்டு அங்கேயே நின்று விட்டார்.
அப்படத்தை விலைக்கு வாங்கிக் கொள்வதற்கு அவர் கையில் பொருள் ஏதுமில்லை.
ஆயினும் அவர் அதனைப் பெறவேண்டும் என்று பெரிதும் விரும்பினார்.
அன்றிரவு அந்தப் படத்தை நாயகருக்கு தரும்படி கடைக்காரர் கனவிலும், அதைப் பெற்றுக் கொள்ளும்படி நாயக்கர் கனவிலும் தோன்றி ஆண்டவர் அருள் புரிந்தார்.
மறுநாள் நாயகரைக் கண்டதும் கடைக்காரர் படத்திற்குப் பூமாலை அணிவித்து மிகவும் அன்புடன், நாயகரிடம் தாமே வலிந்து வந்து கொடுத்து வணங்கி மகிழ்ந்தார்.
நாயக்கர் அந்தப் படத்தைப் பெருஞ்செல்வமாக மதித்துப் போற்றி எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார்.