search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Snacks"

    • வெங்காயம் வதங்கியவுடன் பீன்ஸ், கேரட், கோஸ் காய்கறிகளை சேர்க்கவும்.
    • பன்னீர் சேர்த்து கிளறி, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    பன்னீா் - 500 கிராம்

    உருளைக்கிழங்கு - 3

    பூண்டு பொடியாக நறுக்கியது - 1/2

    வெங்காயம் - 2

    பீன்ஸ் - 1/4 கப்

    கேரட் - 1/4 கப்

    கோஸ் - 1/4 கப்

    குடை மிளகாய் - 1/4 கப்

    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1 ஸ்பூன்

    சீரக தூள், தனியா தூள், மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    உப்பு, எண்ணெய் தேவையான அளவு

    சோள மாவு - 5 ஸ்பூன்

    பிரெட் தூள் - தேவையான அளவு

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும். பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்க்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் பீன்ஸ், கேரட், கோஸ் காய்கறிகளை சேர்க்கவும்.

    காய்கள் லேசாக வதங்கியவுடன் குடை மிளகாய் சேர்த்து உப்பு சேர்க்கவும். பின்னர் இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து, சீரக தூள், தனியா தூள், மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து வதக்கவும். வதக்கிய பின்னர் பன்னீர் சேர்த்து கிளறி, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

    ஆறிய பின்னர் கைகளால் பிசைந்து சிறுசிறு பகுதிகளாக பிரித்து உருண்டைகளாக உருட்டி, கட்லெட் வடிவில் செய்து கொள்ளவும். பின்பு சோள மாவுடன் நீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.

    கட்லெட்டுகளை சோளமாவு கலவையில் முக்கி பின் பிரெட் தூளில் நன்றாக பிரட்டி எடுத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்தால் சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் வெஜிடபுள் கட்லெட் தயார்.

    • இப்படி செய்து கொடுத்தால் இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள்.
    • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும்.

    சிக்கன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் இப்படி செய்து கொடுத்தால் இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க சிக்கன் பாப்கார்ன் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்

    பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    பிரட் - 4

    முட்டை - 1

    பால் - 1 டேபிள் ஸ்பூன்

    மைதா - 1/2 கப்

    செய்முறை:

    * முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி, நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் கழுவிய சிக்கனை ஒரு பெளலில் போட்டு, அத்துடன் பூண்டு விழுது, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.


    * பின்பு பிரட் துண்டுகளை நன்கு பொன்னிறமாக டோஸ்ட் செய்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின் பிரட் தூளுடன் சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    * பிறகு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் பாலை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    * பின் ஒரு தட்டில் மைதாவை போட்டுக் கொள்ள வேண்டும்.

    * இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும்.

    * பின்னர் ஒரு சிக்கன் துண்டை எடுத்து, முதலில் முட்டை கலவையில் பிரட்டி, பின் மைதாவில் பிரட்டி, அதன் பின் மீண்டும் முட்டையில் பிரட்டி, இறுதியாக பிரட் தூளில் பிரட்டி பின்னர் அதனை எண்ணெயில் போட வேண்டும்.

    * இப்படி அனைத்து சிக்கனையும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கிரிஸ்பியான சிக்கன் பாப்கார்ன் ரெடி.

    • குழந்தைகள் மிகவு விரும்பி சாப்பிடுவார்கள்...
    • நாம் செய்வதற்கும் ஈஸியாக இருக்கும்...

    கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறையில் இருப்பார்கள் அவர்களுக்கு வீட்டிலே மிக பெரிய பொருள் செலவு இல்லாமல் ஈசியாக ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க....

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு- 4

    ரவை- 2 ஸ்பூன்

    மைதா மாவு- 2 ஸ்பூன்

    அரிசி மாவு- 3 ஸ்பூன்

    மிளகாய் தூள்- 1 ஸ்பூன்

    மிளகு- 1 1/2 ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    கறிவேப்பிலை- தேவையான அளவு

    கொத்தமல்லி- தேவையான அளவு


    செய்முறை:

    முதலில் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

    இப்போது வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை தோல் நீக்கி உறித்து ஒரு பவுலில் சேர்த்து நன்றாக மசித்து கொள்ளுங்கள்.

    அடுத்து பவுலில் உள்ள கிழங்குடன் மிளகு, ரவை, மைதா மற்றும் அரிசி மாவு என இவை அனைத்தினையும் நன்றாக 2 நிமிடம் வரை பிசைந்து கொள்ளுங்கள்.

    2 நிமிடம் கழித்து பவுலில் உள்ள பொருளுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

    கடைசியாக கையில் சிறிதளவு எண்ணெயினை தடவி கொண்டு தயார் செய்து வைத்துள்ள உருளைகிழங்கை கலவையை கையில் தொட்டு நீளமாக ஊருட்டி வைத்து விடுங்கள்.

    இதனை தொடர்ந்து கடாயில் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்த பிறகு அதில் செய்து வைத்துள்ளதை போட்டு பொன் நிறமாக வரும் வரை பொரிய விட்டு எடுக்க வேண்டியது தான்.

    அம்புட்டு தான் அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் ரெடி....

    குழந்தைகள் மிகவு விரும்பி சாப்பிடுவார்கள்... நாம் செய்வதற்கும் ஈஸியாக இருக்கும்.

    • உற்சாகமான மன நிலையில் பயணத்தை தொடர்வதற்கு வழிவகை செய்யும்.
    • பாதாம் பருப்பு பயண பலகார பட்டியலில் அவசியம் இடம்பெற வேண்டும்.

    பயணங்கள் மேற்கொள்பவர்கள் வீட்டை விட்டு புறப்படும்போதே அத்தியாவசிய பொருட்களை உடன் எடுத்துச் செல்வது போல பயணத்திற்கு ஏற்ற பலகாரங்களையும் கொண்டு செல்ல வேண்டும். அவை உற்சாகமான மன நிலையில் பயணத்தை தொடர்வதற்கு வழிவகை செய்யும் விதத்தில் அமையும்.

    அந்த வகையில் பாதாம் பருப்பு பயண பலகார பட்டியலில் அவசியம் இடம்பெற வேண்டும். அதில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உண்டு. அது அன்றாட வைட்டமின் ஈ தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்துவிடும்.

    பயணத்திற்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக 5, 6 பாதாம் பருப்புகளை தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும். அதனை சாப்பிடுவது நொறுக்குத்தீனிக்கு மாற்றாக அமையும். உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை கொடுப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். தயிரில் பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதும் உடலுக்கு வலு சேர்க்கும்.

    பிஸ்கெட் சாப்பிட விரும்புபவர்கள் ஓட்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும் பிஸ்கெட்டை உடன் எடுத்துச் செல்லலாம். அது பயணங்களின்போது செரிமான செயல்பாடுகள் சீராக நடைபெறுவதற்கு உதவி புரியும். நொறுக்குத்தீனி சாப்பிட ஆசைப்படுபவர்கள் புரதம் கலந்த குக்கீஸ், சாக்லெட்டுகளை தேர்ந்தெடுக்கலாம். கோதுமை பிரெட், உலர் பழங்கள், உலர் தானியங்களில் தயாரான பலகாரங்களையும் பயணத்தின்போது உட்கொள்ளலாம்.

    • பண்டிகையில் இனிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • உறவினர்களுக்கு இனிப்புகளை பரிமாறி மகிழ்வார்கள்.

    பண்டிகையில் இனிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்புகளை பரிமாறி மகிழ்வார்கள். பண்டிகை நாட்களை தித்திக்க வைக்கும்படி, பரவலாக ருசிக்கப்படும் இனிப்பு பலகாரங்கள் உங்கள் பார்வைக்கு...

    குலாப் ஜாமூன்:

    சிறுவர்கள் விரும்பி உண்ணும் இனிப்பு பலகாரம் இது. பாலை மிதமான சூட்டில் நீண்ட நேரம் கொதிக்கவிட்டு, அதனை சுண்ட வைத்து அதில் மைதா மாவு சேர்த்து உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் பொரித்தெடுக்கப்படும். பின்பு அதனை சர்க்கரை பாகில் ஊற வைத்து ருசிப்பர். இப்போது குலாப் ஜாமூன் மாவு கடைகளில் கிடைக்கிறது. அதனை கொண்டு சுலபமாக தயாரித்து ருசிப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    பால் பேடா:

    பால், சர்க்கரை, ஏலக்காய் கொண்டு தயாரிக்கப்படும் இது பண்டிகை காலங்களில் ருசிக்கப்படும் பலகாரங்களில் தனித்துவமானது. வட்ட வடிவில் இருக்கும் இதனை சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். பால் பேடா செய்வதற்கு சுமார் 2 மணி நேரமாகும். ஒரு லிட்டர் பாலை பாத்திரத்தில் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும். அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அடிப்பிடிக்க வாய்ப்புள்ளது.

    பால் பாதியாக குறைந்ததும் 100 கிராம் சர்க்கரை, அரை டேபிள் ஸ்பூன் ஏலக்காய் சேர்க்கவும். பால் நன்றாக சுண்டி, பாத்திரத்திலேயே தனியாக திரண்டு வரும். அப்போது மிக குறைந்த தீயில் வைத்து இறக்கவும். கோவா கையில் ஒட்டாத பதத்தில் இருக்க வேண்டும். அதனை சிறு உருண்டைகளாக உருட்டி வட்ட வடிவத்தில் அலங்கரித்து ருசிக்கலாம்.

    காஜு கத்லி:

    முந்திரி பர்பி என்றும் அழைக்கப்படும் இது முகலாய காலத்தை சேர்ந்தது. காஜு என்றால் முந்திரி என்றும், பர்பி என்பது பாலுடன் சர்க்கரை, குங்குமப்பூ போன்ற மசாலா பொருட்கள் கலந்து கொதிக்கவைத்து கெட்டி பதத்துக்கு மாற்றுவது என்றும் அர்த்தம் கொள்ளப்படுகிறது. இது வைரத்தை போன்று வெட்டி பரிமாறப்படுவதால் வைர வடிவ இனிப்பு பலகாரமாகவும் காட்சி அளிக்கிறது.

    ஜிலேபி:

    மைதா, கடலை மாவு, சர்க்கரை, நெய், குங்குமப்பூபோன்றவை கொண்டு தயாரிக்கப்படும் ஜிலேபி சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி ருசிக்கும் பலகாரமாக இருக்கிறது. முறுக்கு போன்று சுருள் வடிவில் தயாரிக்கபப்டும் இது சர்க்கரை பாகில் ஊறவைத்து ருசிக்கப்படுகிறது.

    தேங்காய் பர்பி:

    தேங்காய் துருவல், முந்திரி, பாதாம், சர்க்கரை, ஏலக்காய் கொண்டு தயார் செய்யப்படும் இது அனைவரும் விரும்பி சுவைக்கும் இனிப்பு பலகாரமாகும். இதனை தயார் செய்வதும் எளிதானது.

    தேவையானவை:

    தேங்காய் துருவல் - 1 கப்

    சர்க்கரை - 1 கப்

    ஏலக்காய் - 4 (பொடித்தது)

    முந்திரி, பாதாம் - தலா 1 டேபிள்ஸ்பூன் (பொடித்தது)

    நெய் - 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை:
    முதலில் தேங்காய்த் துருவலை வாணலியில் கொட்டி சிறு தீயில் லேசாக வறுத்துக் கொள்ளவும். அதனை இறக்கியதும் மற்றொரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீரில் சர்க்கரையைக் கொட்டி கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும். அந்த பதத்துக்கு வந்ததும் தேங்காய் துருவலைக் கொட்டி கிளறவும். இடைவிடாமல் தொடர்ச்சியாக கிளறவும். இல்லாவிட்டால் அடிப்பிடித்துவிடும். கெட்டி பதத்துடன் வாணலியில் ஒட்டாமல் வரும் போது, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    ஒரு தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் கொட்டி பரப்பி ஆற வைக்கவும். பின்பு நெய்யில் முந்திரி, பாதாமை போட்டு பொன்னிறமாக வறுத்து, தேங்காய் கலவையில் கொட்டி லேசாக கிளறவும். ஓரளவுக்கு சூடு ஆறியதும் துண்டுகளாக வெட்டி ருசிக்கலாம்.

    • நிச்சயமாக அவர்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.
    • கீரைகளை குழந்தைகள் நிச்சயமாக விரும்பி சாப்பிட மாட்டார்கள்.

    கீரையை பொரியல் செய்து கொடுத்தாலோ கடைந்து கொடுத்தாலோ குழந்தைகள் நிச்சயமாக விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால், இப்படி மொறு மொறுன்னு ஸ்நாக்ஸ் ஆக பக்கோடா செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக அவர்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். ஆரோக்கியம் நிறைந்த பொருட்களை இப்படித்தான் சுவையான ஸ்னாக்ஸ் ஆக மாற்றி கொடுக்க வேண்டும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

    தேவையான பொருட்கள்:

    கடலை மாவு- ஒரு கப்

    அரிசி மாவு- அரை கப்

    வெங்காயம்- 3 (நறுக்கியது)

    முருங்கைக்கீரை- ஒரு கப்

    எண்ணெய்-

    உப்பு- தேவையான அளவு

    சோம்பு- 1/2 ஸ்பூன்

    மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்

    பெருங்காயம்- 1/4 ஸ்பூன்

    பச்சை மிளகாய்- 2 (நறுக்கியது)

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் முருங்கைக்கீரையை நன்றாக கழுவிவிட்டு அதனை பொடியாக வெட்டி சேர்க்க வேண்டும். அதில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்தூள், சோம்பு, பச்சைமிளகாய் மற்றும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், உப்பு, தண்ணீர் சேர்த்து உதிரி உதிரியாக நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பொறித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைத்து அதில் சிறிது சிறிதாக போட்டு சிவக்க பொறித்து எடுக்க வேண்டும். சுவையான முருங்கைக்கீரை பக்கோடா தயார். ஈவ்னிங் காபி, டீயுடன் சூடாக பரிமாறலாம்.

    • கிடைக்கும் வருமானத்தை மட்டுமே வைத்து திருப்தியுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
    • பள்ளி மாணவர்களுக்காக மலிவு விலையில் தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகிறார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட த்தை சேர்ந்தவர் தையல்நா யகி (வயது 60). இவர் ஆக்கூர் அரசு மேல்நிலை ப்பள்ளி வாசலில் சிறு குடிசையாக தனது கடையை தொடங்கி 30 வருடமாக நடத்தி வருகிறார்.

    ஆரம்பத்தில் 25 பைசாவுக்கு பஜ்ஜும், போண்டாவும் விற்பனை செய்துள்ளார்.

    தற்போது விண்ணை முட்டும் அளவு விலைவாசி உயர்ந்தாலும், பள்ளி மாணவர்களின் பசியை போக்கும் வகையில் ரூ.1-க்கு பஜ்ஜி போண்டாவும், 10 ரூபாய்க்கு தயிர் சாதம், புளி சாதம் எலுமிச்சை சாதமும் விற்பனை செய்து வருகிறார்.

    எப்படி இது சாத்தியம் என்று தையல்நாயகி இடம் கேட்டபோது, அரசு பள்ளியில் தற்போது ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாணவிகள் மட்டுமே படித்து வருவதாகவும், படிக்கும் பிள்ளைகளுக்கு தினமும் வீட்டில் இரண்டு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை மட்டுமே செலவுக்கு பணம் தருவார்கள்.

    மதிய நேரத்தில் அவர்கள் பெரும் செலவு செய்ய முடியாத நிலையில்லாப நோக்கம் ஏதும் இன்றி தின்பண்டங்களை விற்பனை செய்து வருவதாகவும் இதில் கிடைக்கும் வருமானம் மட்டுமே தனது வாழ்வாதாரமாக உள்ள நிலையில் இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இவரது கணவர் கலியபெரு மாள் சில வருடங்களுக்கு முன்பு இயற்கை எய்திய நிலையில் தனது ஒரே மகனுடன் வசித்து வருவதாகவும் வாழ்நாள் வரை யாருக்கும் பாரமில்லாமல் உழைத்து வருவதாகவும் அதே நேரம் தன்னால் முயன்ற சிறு உதவியாக படிக்கும் மாணவர்க ளுக்கு மலிவு விலையில் தின்ப ண்டங்க ளை விற்பனை செய்து வருவ தாகவும் நெகி ழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    • கேழ்வரகு கேக் செய்வது மிக எளிதான ஒரு முறையாகும்.
    • பிரவுனி மற்றும் பிளைன் கேக்குகளையும் செய்யலாம்.

    சிறுதானியங்களைக் கொண்டு கிரீம் கேக்குகள் மட்டுமில்லாமல், பிரவுனி மற்றும் பிளைன் கேக்குகளையும் செய்யலாம். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்கள், கலோரிகள் குறைவாக உள்ள சிறுதானிய கேக்குகளை சாப்பிடலாம். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்றவை சிறுதானிய கேக்குகள். கேழ்வரகு கேக் செய்வது மிக எளிதான ஒரு முறையாகும்.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு- 100 கிராம்

    கிரீம்- 100 கிராம்

    பேக்கிங் பவுடர்- 1/4 டீஸ்பூன்

    கொக்கோ பவுடர்- ஒரு ஸ்பூன்

    சர்க்கரை- 100 கிராம்

    உப்பு - தேவையான அளவு

    முட்டை- 2

    பால்- 20 மில்லி லிட்டர்

    வனிலா எசன்ஸ்- 2 சொட்டு

    செய்முறை:

    வெள்ளை கருவுடன் சர்க்கரை தூள் சேர்த்து நன்கு அடித்து, கலக்கி அதனுடன் பால், முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் ராகி மாவு, உப்பு, கோகோ பவுடர் சேர்த்து மறுபடியும் நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை நமக்கு தேவையான வடிவங்களில் அல்லது கேக் மோல்டின் உள்ளே பட்டர் அல்லது நெய் தடவ வேண்டும்.

    அதில் கேக் கலவையை ஊற்றி மைக்ரோவேவ் ஓவனில் 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 25 முதல் 30 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்து 10 நிமிடங்கள் வரை குளிர வைத்து பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டியோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தலாம்.

    • மகளை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், எம்.வி. பி காலனியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண்.

    இவர் கொம்மாடியில் உள்ள குருகுல கல்லூரியின் விடுதியில் தங்கி இருந்து 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மாணவியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் மாணவிக்கு பிறந்தநாள் என்பதால் சொந்த ஊருக்கு வந்தார். அன்று இரவு பெற்றோருடன் கேக் வெட்டி பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

    பின்னர் மாணவி மீண்டும் கல்லூரிக்கு செல்ல தயாரானார். அப்போது தனது தாயிடம் தனக்கு பிடித்தமான தின்பண்டங்களை வாங்கி தருமாறு கூறினார்.

    மாணவியின் தாய் மார்க்கெட்டிற்கு சென்று மாணவிக்கு பிடித்தமான தின்பண்டங்களை வாங்கி வந்தார்.

    தாய் வாங்கி வந்த தின்பண்டங்களை பார்த்த மாணவி தனக்கு பிடித்தமான தின்பண்டங்களை ஏன் வாங்கி வரவில்லை என வாக்குவாதம் செய்தார். பின்னர் வேகமாக மாடிக்கு சென்ற மாணவி அங்கிருந்து கீழே குதித்தார். இதில் மாணவி படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    இதனைக் கண்ட மாணவியின் பெற்றோர் கதறி துடித்தனர். மகளை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை செய்யலாம்.
    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    முறுக்கு - தேவையான அளவு

    வெங்காயம் - 1

    வெள்ளரிக்காய் - 1

    தக்காளி - 1

    ஓமப்பொடி - 1 கப்

    சீஸ் துருவல் - 1 கப்

    சட்னி தயாரிக்க:

    புதினா - ஒரு கைப்பிடி

    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி - சிறிய துண்டு

    பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    சட்னி தயாரிக்க:

    ஒரு மிக்சி ஜாரில் புதினா, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி, பொட்டுக்கடலை, உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும். இந்த சட்னியைத் தனியாக எடுத்து வைக்கவும்.

    சாண்ட்விச் தயாரிக்க:

    வட்டமாகவும், தட்டையாகவும் உள்ள முறுக்கைத் தேர்ந்தெடுக்கவும்.

    வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை முறுக்கின் அளவிற்கு ஏற்ப வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.

    முறுக்கின் மேல், முதலில் சட்னியை சிறிதளவு தடவவும்.

    பின்பு வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் ஓமப்பொடி ஆகியவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும்.

    இந்த அடுக்கின் மீது சிறிதளவு சட்னியை வைத்து மற்றொரு முறுக்கைக் கொண்டு மூடவும். பிறகு அதன் மேற்பகுதியில் சீஸ் துருவலை தாராளமாகத் தூவவும்.

    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த, 'சீஸ் முறுக்கு சாண்ட்விச்' தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • டீ, காபியுடன் சாப்பிட இந்த போண்ட சூப்பராக இருக்கும்.
    • இந்த ரெசிபியை 20 நிமிடத்தில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பட்டாணி - 200 கிராம்,

    கேரட் துருவல் - ஒரு டீஸ்பூன்,

    வெங்காயம் - 1

    தக்காளி, பச்சை மிளகாய் - தலா - 2,

    கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு,

    எண்ணெய் - 300 கிராம்,

    உப்பு - தேவையான அளவு.

    மேல் மாவுக்கு:

    கடலை மாவு - 150 கிராம்,

    அரிசி மாவு - 25 கிராம்,

    மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு.

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லித்தழை, புதினா, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    மசித்த பச்சை பட்டாணியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லித்தழை, புதினா, கேரட் துருவல் சேர்த்துப் பிசையவும்.

    இதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    மேல்மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தேவையான நீர் சேர்த்து தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பச்சைப் பட்டாணி போண்டா ரெடி.

    குறிப்பு: பச்சைப் பட்டாணி இல்லாத சமயத்தில் உலர்ந்த பட்டாணியை ஊறவைத்து, வேகவிட்டு அரைத்து பயன்படுத்தியும் இந்த போண்டாவை செய்யலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சேலம் மாவட்ட மக்களின் கால நேர சிற்றுண்டி இது.
    • டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்

    பச்சை வேர்க்கடலை - 50 கிராம்

    வெள்ளை அவல் - 100 கிராம்

    வெங்காயம் - 1

    ப.மிளகாய் - 3

    பூண்டு - 3 பல்

    இஞ்சி - சிறிய துண்டு

    சிவப்பு மிளகாய் - 4

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்க

    எண்ணெய் - சமையலுக்கு

    செய்முறை

    பூண்டு, இஞ்சி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை நன்றாக கழுவி சிறிது தண்ணீர் தெளித்து ஊற வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெண் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பச்சை வேர்க்கடலையை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    வேர்க்கடலை நன்றாக வெந்த பின்னர் ஊறவைத்த அவல், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

    அவல் வெந்து உதிரி உதிரியாக வந்தவுடன்கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சேலம் ஸ்பெஷல் அவல் சுண்டல் ரெடி.

    வேர்க்கடலைக்கு பதில், ராஜ்மா, கொண்டைக்கடலை, பச்சை பட்டாணி சேர்த்தும் செய்யலாம். சிவப்பு அவல் வைத்தும் இந்த ரெசிபியை செய்யலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×