search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Instagram"

    • அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
    • இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இவர் தமிழ் இயக்குனரான விக்னேஷ் சிவனை ஜூன் 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அழகான இரு ஆண் குழந்தைகள் அக்டோபர் 2022 ஆம் ஆண்டு பிறந்தன. அவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என பெயரிட்டனர். அவ்வப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளங்களில் அவர்களின் திரை துறை வாழ்க்கையை பற்றியும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடைப்பெறும் நிகழ்வை பற்றியும் புகைப்படங்களை பகிர்ந்து வருவர்.

    அதுப்போல் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் நயன்தாரா அவரது மகன்களான உயிர் மற்றும் உலகுடன் குழந்தையோடு குழந்தையாய் விளையாடிக்கொண்டு இருக்கிறார். குழந்தையை தோள் மேல் தூக்கி வைத்து விளையாடுவது, மகனை முத்தமிடுவது, கொஞ்சுவது, சிரிப்பது, கைப் பிடித்து நடப்பது என அந்த வீடியோவில் காட்சிகள் அமைந்துள்ளன.

    இந்த வீடியோவை   பார்க்கவே மிகவும் கியூட்டாக உள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீதான் என்னுடைய உயிர் மற்றும் உலகம் என அந்த வீடியோவில் நயன்தாராவை குறித்து பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லியோ படத்திற்கு அடுத்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • படத்தின் பாடலான 'விசில் போடு' பாடலின் லிரிக் வீடியோவை தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட்டனர்.

    லியோ படத்திற்கு அடுத்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான 'விசில் போடு' பாடலின் லிரிக் வீடியோவை தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட்டனர். இப்பாடலை மதன் கார்கி வரிகளில் விஜய் பாடியுள்ளார்.

    "பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா ? கேம்பைன்ன தான் தொறக்கட்டுமா? என்ற வரிகளில் பாடல் தொடங்குகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், விஜயின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டம் போல் காணப்படுகிறது.

    பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது.

    பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள் 25.5 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் கடந்தது. தென்னிந்திய சினிமாக்களில் 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வைகளை கொண்ட பாடலாக பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற "அரபிக் குத்து" பாடலை தற்போது விசில் போடு பாடல் குறைந்த நேரத்தில் அதிக வியூஸ்களை பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளது.

    இந்நிலையில் விசில் போடு பாடல்  யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளை தற்பொழுது கடந்துள்ளது. தென்னிந்திய சினிமா பாடலுக்கு இவ்வளவு பார்வைகளை பெற்றுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுக்குறித்து படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவரது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்ஸ்டாகிராம் மற்றும் போனில் மட்டுமே பேசி வந்த அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க திட்டமிட்டனர்.
    • தனது காதலி இன்னமும் வரவில்லையே என்று ஏக்கத்தில் அங்கு வெகு நேரம் காத்திருந்தார்.

    கான்பூர்:

    காதல்கோட்டை படத்தில் நடிகர் அஜித்தும் தேவயானியும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் காதலிப்பார்கள். கிளைமாக்சில் இருவரும் ஒன்று சேர்வார்கள்.

    பார்க்காமல் காதல் வந்த காலம் போய், செல்போனில் போட்டோவை பார்த்து பழகும் காலம் தற்போது புது ஸ்டைலாக உள்ளது. ஆனால் போட்டோவில் பார்த்த அழகு நேரில் இல்லாமல் போனால் காதலர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து செல்லும் நிலையும் ஏற்படுகிறது.

    இதேபோல் இன்ஸ்டாகிராமில் இளம்வயது பெண்ணின் போட்டோவை பார்த்து அவருடன் பழகிய வாலிபர் ஆனால் நேரில் பார்த்த போது அந்த பெண் வயதான தோற்றத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து அவரை தாக்கியுள்ளார்.

    இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் தீபேந்திரா சிங் (வயது 20). இவர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்தார். அதன் மூலம் இளம்பெண் ஒருவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

    அந்த பெண் இன்ஸ்டாகிராம் முகப்பு பகுதியில் தன்னுடைய 20 வயது அழகிய போட்டோவை வைத்திருந்தார்.

    இந்த போட்டோவை பார்த்து அழகில் மயங்கிய தீபேந்திரா சிங் அந்த பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக பழகினார். அவருடன் காதல் மொழியிலும் பேசி வந்துள்ளார்.

    இன்ஸ்டாகிராம் மற்றும் போனில் மட்டுமே பேசி வந்த அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க திட்டமிட்டனர். இதற்கான நாளும் இடமும் குறிக்கப்பட்டது.

    தனது அழகான காதலியை சந்திக்க போகிறோம் என்ற ஆர்வத்தில் தீபேந்திரா சிங் மிடுக்கான ஆடை அணிந்து மிகவும் ஆர்வமுடன் துள்ளி குதித்து அங்கு சென்றார். ஆனால் தனது காதலி இன்னமும் வரவில்லையே என்று ஏக்கத்தில் அங்கு வெகு நேரம் காத்திருந்தார்.

    அப்போது சுமார் 45 வயது பெண் ஒருவர் அவரிடம் நெருங்கி வந்தார். அந்த பெண்ணை பார்த்த தீபேந்திரா சிங் நீங்கள் யார் என்று அவரிடம் கேட்டார். அப்போது நீங்கள் தீபேந்திரா சிங்கா என்று அந்த பெண் கேட்டார்.

    அவர் ஆமாம் என்று ஆமோதித்தது தான் தாமதம் அந்த பெண் நான் உங்களிடம் இன்ஸ்டாகிராமில் பேசிய பெண் என்றார். அதை கேட்ட தீபேந்திரா சிங் அதிர்ச்சியில் உறைந்தார்.

    போட்டோவில் உள்ளது யார் என்று கேட்டார். அது நான் தான் என்னுடைய இளம் வயது போட்டோ அது, எனக்கு இப்போது 45 வயதாகிறது என்றார்.

    இதை கேட்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தீபேந்திரா சிங் அந்த பெண்ணை அடித்து உதைத்தார். மேலும் அவரிடம் இருந்த செல்போனையும் பறித்து கொண்டு சென்று விட்டார்.

    இதுகுறித்து அந்த பெண் அடையாளம் தெரியாத வாலிபர் தன்னை தாக்கி சென்று விட்டதாக போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி தீபேந்திரா சிங்கை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கத்தில் நான் ஏமாற்றமடைந்தால் இவ்வாறு நடந்து கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

    • ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
    • லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது.

    ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி விளையாடிய 8 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5 ஆவது இடத்தில உள்ளது.

    குறிப்பாக கடைசியாக லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஹைதராபாத் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.

    இந்நிலையில், சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே 'தல' அஜித்தை சந்தித்து பேசியுள்ளார்.

    இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில் புத்திசாலித்தனமும் எளிமையும் நிறைந்தவர் அஜித் என அவர் பதிவிட்டுள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
    • இந்நிலையில் இன்று யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.

    யுவன் இதுவரை 170 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். படங்களுக்கு மாஸ் பி.ஜி.எம் வடிவமைப்பதில் யுவன் திறம் பெற்றவர். மெலடி மற்றும் காதல் பாடல்களுக்கு இசையமைப்பதில் வல்லவர்.

    சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜயின் குரலில் படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    எந்தளவு வரவேற்பு வந்ததோ அதே அளவு பாடலுக்கு எதிரான கமெண்ட்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது. யுவன் ஷங்கர் ராஜாவையும் இசையமைப்பாளர் அனிருத்துடன் ஒப்பிட்டு பேசி பல மீம்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன.

    இந்நிலையில் இன்று யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.

    இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் யுவனிடம் மன்னிப்புக் கேட்டு பதிவுகளை பகிர்ந்தனர். அவர் ஏன் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகினார் என்ற தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கும் நிலையில் யுவன் தற்பொழுது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் 'ஹலோ மக்களே உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி, நான் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகவில்லை அது வெறும் டெக்னிக்கல் எரர், என்னுடைய குழு அதை சரி செய்ய முயற்சித்துக் கொண்டு இருக்கிறது. நான் மீண்டும் இன்ஸ்டாகிராமிற்கு விரைவில் வருவேன். நன்றி " என பதிவிட்டுள்ளார்.

    • இதுவரை 170 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
    • சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    25 ஆண்டுகளாக இசைத்துறையில் சிறப்பான பணியை செய்து வருகிறார் யுவன். இதுவரை 170 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். படங்களுக்கு மாஸ் பி.ஜி.எம் வடிவமைப்பதில் யுவன் திறம் பெற்றவர். மெலடி மற்றும் காதல் பாடல்களுக்கு இசையமைப்பதில் வல்லவர்.

    சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜயின் குரலில் படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    எந்தளவு வரவேற்பு வந்ததோ அதே அளவு பாடலுக்கு எதிரான கமெண்ட்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது. யுவன் ஷங்கர் ராஜாவையும் இசையமைப்பாளர் அனிருத்துடன் ஒப்பிட்டு பேசி பல மீம்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன.

    யுவன் இசையமைத்த இந்த பாடல் நன்றாக இல்லை என்றும் அவர் ஏன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்ரு பல கமெண்டுஸ்கள் வந்தது.

    இந்நிலையில் யுவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலகியுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. இதற்கு எதிர்மறை கமெண்டுகள் காரணமா என குழம்பியுள்ள ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது.
    • நேற்று வெளியான இப்பாடல் 24 மணி நேரத்திற்குள் 25.5 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் கடந்துள்ளது.

    கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான 'விசில் போடு' பாடலின் லிரிக் வீடியோவை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடலை மதன் கார்கி வரிகளில் விஜய் பாடியுள்ளார்.

    "பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா ? கேம்பைன்ன தான் தொறக்கட்டுமா? என்ற வரிகளில் பாடல் தொடங்குகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், விஜயின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டம் போல் காணப்படுகிறது. நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் அரசியல் கட்சிக்கு விசில் சின்னமாக இருக்கும் என நெட்டிசன்கள் அவர்களின் கருத்தை கமெண்டுகளில் பரப்பி வருகின்றனர்.

    பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது.

    நேற்று வெளியான இப்பாடல் 24 மணி நேரத்திற்குள் 25.5 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் கடந்துள்ளது. தெனிந்திய சினிமாக்களில் 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வைகளை கொண்ட பாடலாக பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற "அரபிக் குத்து" இருந்தது. தற்போது அரபிக் குத்து பாடலின் சாதனையை முறியடித்து கோட் படத்தின் விசில் போடு பாடல் குறைந்த நேரத்தில் அதிக வியூஸ்களை பெற்றுள்ளது.

    இதன் மூலம் அவர் பட பாடலின் சாதனையை அவரே அடுத்தப்பட பாடலின் மூலம் முறியடித்து இருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் தெனிந்திய சினிமாக்களில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் விஜயின் அரபிக் குத்துப் பாடல்.
    • கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

    நடிகர் விஜய் தற்பொழுது " தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான 'விசில் போடு' பாடலின் லிரிக் வீடியோவை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடலை மதன் கார்கி வரிகளில் விஜய் பாடியுள்ளார்.

    "பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா ? கேம்பைன்ன தான் தொறக்கட்டுமா? என்ற வரிகளில் பாடல் தொடங்குகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், விஜயின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டம் போல் காணப்படுகிறது. நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் அரசியல் கட்சிக்கு விசில் சின்னமாக இருக்கும் என நெட்டிசன்கள் அவர்களின் கருத்தை கமெண்டுகளில் பரப்பி வருகின்றனர்.

    பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது.

    பாடல் வெளியாகி 19 மணி நேரம் கடந்த நிலையில் இது வரை 19 மில்லியன் பார்வையையும் 1.15 மில்லியன் லைக்சுகளையும் யூடியூபில் பெற்றுள்ளது.

     

    பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் தெனிந்திய சினிமாக்களில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் விஜயின் அரபிக் குத்துப் பாடல். தற்பொழுது விசில் போடு பாடல் இரண்டாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அரபிக் குத்து பாடலின் வியூசை இது தாண்டி முதல் இடத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பாடலின் தலைப்பான விசில் போடு தலைப்பை இன்று காலையில் வெளியிட்டனர் படக்குழுவினர். இப்பாடலை மதன் கார்கி வரிகளில் விஜய் பாடியுள்ளார்.

    இந்நிலையில் பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. "பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா ? கேம்பைன்ன தான் தொறக்கட்டுமா? என்ற வரிகளில் பாடல் தொடங்குகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், விஜயின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டம் போல் காணப்படுகிறது.

    பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது. தமிழ் புத்தாண்டின் கொண்டாட்டம் இப்பாடலின் மூலம் ரசிகர்களிடையே இரட்டிப்பாகியிருக்கிறது.

    இப்பாடலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தின் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில் தற்பொழுது பாடலின் தலைப்பை வெளியிட்டுள்ளனர்
    • ’விசில் போடு’ என பாட்டிற்கு தலைப்பு வைத்துள்ளனர்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது என ஒரு புதிய போஸ்டரை சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.

    இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் 'THE GOAT' படத்தின் முதல் பாடலுக்கு நீங்கள் தயாரா? என்று நேற்று பதிவிட்டார்.

    படத்தின் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில் தற்பொழுது பாடலின் தலைப்பை வெளியிட்டுள்ளனர். 'விசில் போடு' என பாட்டிற்கு தலைப்பு வைத்துள்ளனர்.

    வெங்கட் பிரபு அவரின் எக்ஸ் பக்கத்தில் "இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நம்ம தளபதிக்கு விசில் போடு" என பாட்டின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அப்போஸ்டரில் விஜய் ஒரு விசிலை ஊதியபடி காணப்படுகிறார்.

    இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நடிகர் விஜய் குரலில், மதன் கார்கி வரிகளில் 'The GOAT' படத்தின் விசில் போடு பாடம் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்
    • ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அடுத்ததாக தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது.

    சமீபத்தில் படப்பிடிப்பு நடக்கும்பொழுது நடிகர் விஜய் ஸ்கேடிங் சைக்கிள் ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்..

    கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது என ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் விஜய் சால்ட் அன் பெப்பர் ஹேர்ஸ்டைலில் கண்ணாடி அணிந்த தோற்றத்தில் காணப்படுகிறார்.

    இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் 'THE GOAT' படத்தின் முதல் பாடலுக்கு நீங்கள் தயாரா? என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு முன்னதாக இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் நாளை சம்பவம் உறுதி என்று பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், நாளை மாலை 6 மணிக்கு நடிகர் விஜய் குரலில் 'The GOAT' படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று அந்த பாடலின் Promo வீடியோவை வெளியிட்டு பட நிறுவனம் அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்
    • ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்

    வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அடுத்ததாக தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது.

    சமீபத்தில் படப்பிடிப்பு நடக்கும்பொழுது நடிகர் விஜய் ஸ்கேடிங் சைக்கிள் ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்..

    கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது என ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் விஜய் சால்ட் அன் பெப்பர் ஹேர்ஸ்டைலில் கண்ணாடி அணிந்த தோற்றத்தில் காணப்படுகிறார்.

    இதற்கு முன்னதாக இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் நாளை சம்பவம் உறுதி என்று பதிவிட்டுள்ளார்.

    இதன்மூலம் நாளை இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×