என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டீசர் வெளியாகி உள்ளது.

    நடிகர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகான நடிக்கிறார். அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

    இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அத்துடன், ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

    படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக், டீசர் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி படத்தின் டீசர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்புகள், பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


    • கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்து வெளியான படம் 'ரிவால்வர் ரீட்டா'.
    • கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை.

    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

    மிடில் கிளாஸ்

    அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனிஷ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் வெளியான படம் 'மிடில் கிளாஸ்'. திருமணமான குடும்பத் தலைவன் என்னென்ன சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்திக்கிறார் என்பதை நகைச்சுவையில் சொல்லப்பட்டு உள்ளது. இப்படம் நாளை முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் கண்டுகளிக்கலாம்.

    ரஜினி கேங்

    'பிஸ்தா' திரைப்படம், 'உப்பு புளி காரம்', 'கனா காணும் காலங்கள்' போன்ற வெப் தொடர்களை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ள படம், 'ரஜினி கேங்'. ரஜினி கிஷன் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திவிகா நடித்துள்ளார். மேலும், முனீஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், கல்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்த இப்படம் நாளை முதல் ப்ரைம் வீடியோ மற்றும் சிம்பிளி சௌத் ஓ.டி.டி. தளங்களில் கண்டு களிக்கலாம்.

    ஆந்திரா கிங் தாலூகா

    ராம் பொதினேனி, பாக்யஸ்ரீ போர்ஸ், யுபேந்திரா ஆகியோர் நடிப்பில் வெளியான தெலுங்கு சினிமா. 2002-ல் நடக்கும் கதை. கல்லூரி மாணவரான நாயகன், தெலுங்கு சினிமா நட்சத்திரமான சூர்யாவின் ரசிகர் என்ற மனநிலையை தாண்டி அவரை மானசீக குருவாக ஏற்கிறார். இந்தநிலையில் சூர்யாவின் 9 படங்கள் தொடர்ந்து தோல்வியடைகிறது. இதனால் அவருடைய செல்வாக்கு சரியதொடங்கி 10-வது படத்தை தயாரிக்க படத்தயாரிப்பாளர்கள் இல்லாதநிலை ஏற்படுகிறது. அப்போது நாயகன் தன்னுடைய நட்சத்திரத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட கூடாது என்றநோக்கில் மேற்கொள்ளும் முடிவே இதன் கதை. நெட்பிளிக்சில் வருகிற 25-ந்தேதி வெளியாகிற இதனை தமிழில் காணலாம்.

    ரிவால்வர் ரீட்டா

    கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்து வெளியான படம் 'ரிவால்வர் ரீட்டா'. இப்படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கி இருந்தார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில், 'ரிவால்வர் ரீட்டா' வருகிற 26-ந்தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி.தளத்தில் கண்டு களிக்கலாம்.

    ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5 பாகம் 2

    உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் மிகவும் விரும்பிப்பார்க்கப்படும் வெப் தொடர்களில் ஒன்று 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. இதன் முதல் சீசன் கடந்த 2016-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இந்த தொடர் உலகளவில் பார்வையாளர்களின் இதயங்களை வென்றதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகின. இதுவரை 4 முழு சீசன்கள் வெளியாகி உள்ளன. கடந்த நவம்பர் மாதம் டான் டிராட்சன்பெர்க் இயக்கிய 5-வது சீசனின் முதல் 4 எபிசோட்டுகள் வெளியாகி வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து வருகிற 26-ந்தேதி முதல் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் கண்டு மகிழலாம்.

    இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.

    • முழுக்க முழுக்க சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும்.
    • ரசிகர்கள் கட்சி கொடி, டி-சர்ட், துண்டு அணிந்து வரக்கூடாது.

    விஜய் நடித்த 'ஜன நாயகன்' படம் வருகிற 9-ந் தேதி திரைக்கு வருகிறது.

    இதையொட்டி படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற 27-ந்தேதி மலேசியாவில் நடக்கிறது.

    விழாவுக்கு மலேசியா அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முழுக்க முழுக்க சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும். யாரும் அரசியல் பேச கூடாது. ரசிகர்கள் கட்சி கொடி, டி-சர்ட், துண்டு அணிந்து வரக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை போன்ற நிபந்தனைகளை மலேசிய அரசு விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    • கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.
    • படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார்.

    இயக்குநர் மிஸ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் "டிரெயின்" என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.

    இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஃபௌசியா பாத்திமா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார்.

    இந்நிலையில், 'டிரெயின்' படத்தின் முதல் பாடல் 'கன்னங்குழிக்காரா...' இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகிறது. கபிலனின் பாடல் வரிகளில் மிஷ்கின் இசையமத்துள்ள இப்பாடலை நடிகை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுஉள்ளார்கள். 



    • மேட் டாமன், டாம் ஹாலண்ட், அன்னே ஹாத்வே, ஜெண்டயா, சார்லிஸ் தெரோன் என நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
    • ஐமேக்ஸ் கேமராக்களிலேயே எடுக்கப்பட்ட படம் இது.

    ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடைசியாக 2023இல் வெளியான 'ஓபன்ஹெய்மர்' திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகள் வென்றது. இது அணுகுண்டை கண்டுபிடித்த விஞ்ஞானி ஓபன்ஹெய்மர் உடைய வாழ்க்கை கதையாகும்.

    இந்நிலையில் 'தி ஒடிஸி' என்ற புதிய படம் ஒன்றை நோலன் இயக்கி வருகிறார். இது இவரின் 13வது படம் ஆகும்.

    இதில் மேட் டாமன், டாம் ஹாலண்ட், அன்னே ஹாத்வே, ஜெண்டயா, சார்லிஸ் தெரோன் என நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். புகழ்பெற்ற கவிஞர் ஹோமரின் காவிய கவிதையை தழுவி இப்படம் உருவாகி உள்ளது.

    தற்போது 'தி ஒடிஸி' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. ஐமேக்ஸ் கேமராக்களிலேயே எடுக்கப்பட்ட இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி வெளியாக உள்ளது. ஜமாக்ஸ் திரையில் ஒரு ஒரிஜினல் ஜமாக்ஸ் படத்தை காண அனைவரும் ஆவலுடன் உள்ளனர். 

    • படத்திற்கு ’ரவுடி ஜனார்தனா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
    • முதல் முறையாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கடைசியாக கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

    இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் 15வது படம் ரவி கிரன் கோலா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தின் டைட்டில் கிலிம்பஸ் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி படத்திற்கு 'ரவுடி ஜனார்தனா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    இப்படத்தில் முதல் முறையாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

    கிங்டம் படம் விஜய் தேவரகொண்டாவுக்கு கை கொடுக்காத நிலையில் 'ரவுடி ஜனார்தனா' மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

    • நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
    • மம்மூட்டியைச் சந்தித்து ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார்.

    நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் மலையாளம், தமிழ் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

    தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பெற்றவர் ஆவார். 69 வயதான இவர் கடந்த 20 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

    நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    ஸ்ரீனிவாசனின் சொந்த ஊரான எர்ணாகுளம் மாவட்டத்தின் உதயம்பேரூரில் உள்ள அவரது வீட்டில் அரசு மரியாதையுடன் நேற்று உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    நடிகர் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியப் நடிகர் பார்த்திபன், மம்மூட்டியைச் சந்தித்து ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பார்த்திபன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், ஒரு நீண்ட தூக்கத்தின் துக்கத்தை , ஒரு சிறிய தூக்கம் லேசாய் களைந்தெறிய, கண்களைத் துடைத்துக் கொண்டு அடுத்ததில் விரைகிறோமோ?

    துக்க வீட்டில் நான் வெறுமையுடன் உரையாடிக் கொண்டிருப்பதை தயாரிப்பாளர்  ஆண்டோ  ஜோசப்  மம்மூட்டி சாரிடம் சொல்லியிருப்பார் போல, ஶ்ரீனிவாசனின் இறுதி யாத்திரைக்கு நெருப்புப் படுக்கை தயாராகிக் கொண்டிருக்க ,அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னால், அந்த உஷ்ணத்தை ஶ்ரீனயின் உடல் உணராது என்பதும் சுட்டது.

    அதற்கு மேல் அங்கிருக்க இயலாமல் வருத்தத்துடன் வெளியேற, வாசலில் மம்முட்டியின் தயாரிப்பாளர் ஆறுதலாய் அழைத்துச் சென்றார்.

    ஶ்ரீனியின் நினைவுகளை இருவரும் அசை போட்டபடி மாலைவரை அவரது அன்பான உபசரிப்பில்!!!நட்பிற்கில்லை மொழி பேதங்கள்" என்று தெரிவித்துள்ளார்.  

    வர்கீஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    நாயகன் சௌந்தரராஜா, நாயகி தேவனந்தாவை திருமணம் செய்து கொண்டு உறவினர் வீட்டில் தங்குவதற்காக மலைப்பகுதிக்கு செல்கிறார். அங்கு நாயகியுடன் சந்தோஷமாக வாழ்ந்து விட்டு, பணம் நகைகளை இந்த வீட்டில் மறைத்து வைத்துவிட்டு சில தினங்களில் வருவதாக சொல்லி நாயகி தனியே விட்டு செல்கிறார்.

    இரண்டு மூன்று வருடங்கள் ஆகியும் சௌந்தரராஜா வராமல் இருக்கிறார். இந்நிலையில் பாம்பு கடித்ததாக கூறி வீட்டுக்கு வரும் சந்தோஷ் தாமோதரன், நாயகி தேவனந்தாவை அடைய நினைக்கிறார். மேலும் சௌந்தரராஜா வீட்டில் மறைத்து வைத்திருக்கும் பணம் மற்றும் நகைகளை தேடுகிறார்.

    இறுதியில் சந்தோஷ் தாமோதரன் யார்? எதற்காக பணம் நகைகளை தேடுகிறார்? நாயகி தேவனந்தாவை அடைந்தாரா? சௌந்தரராஜா தேவானந்தாவை தேடி மீண்டும் வந்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சௌந்தரராஜா, காதல், கோபம், சண்டை என நடிப்பில் பளிச்சிடுகிறார். இவருக்கு படம் ஆரம்பம் மற்றும் இறுதி காட்சிகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் தேவனந்தா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். துணிச்சலான கதாபாத்திரத்தை தைரியமாக செய்ததற்கு பாராட்டுக்கள். குறிப்பாக கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

    சந்தோஷ் தாமோதரன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி தேவனந்தாவை அடைய நினைப்பது, அவருக்காக ஏங்குவது, சண்டை போடுவது என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். அப்புகுட்டி கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

    இயக்கம்

    மலைப்பகுதியில் வாழும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் அனில் குமார். ஒரு பெண்ணை அடைய நினைப்பவர்கள், அவர்களை அந்த பெண் எப்படி சமாளிக்கிறார் என்பதை திரை கதையாக கொடுத்திருக்கிறார். மெதுவாக செல்லும் திரை கதையும், சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாததும் படத்திற்கு பலவீனம்.

    இசை

    வர்கீஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.

    ஒளிப்பதிவு

    ராமச்சந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். மலைப்பகுதிகளை அழகாக படம் வீட்டில் ரசிக்க வைத்திருக்கிறார்.

    ரேட்டிங்- 2/5

    • சிவகார்த்திகேயனின் 25வது படம்.
    • முன்னதாக படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருந்தது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம். ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் ஃபசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருந்தது.

    ஜனவரி 9ஆம் தேதி விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் வெளியாகும் நிலையில், அதற்கு போட்டியாக ஜன.10 வெளியாகிறது பராசக்தி. 


    கயாடு லோஹர் இதயம் முரளி மற்றும் STR 49 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    சில மாதங்களுக்கு முன் வெளியான டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கயாடு லோஹர். திரைப்படத்தின் வெற்றியின் மூலம் பல ரசிகர் கூட்டத்தை இவர் உருவாக்கினார். இப்படத்தின் வெற்றியின் மூலம் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

    கயாடு லோஹர் முதன் முதலில் கடந்த 2021 ஆம் ஆண்டு முகில்பெட் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கயாடு லோஹர் இதயம் முரளி மற்றும் STR 49 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    மேலும் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தை மாரியப்பன் சின்னா இயக்குகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. படத்திற்கு இம்மார்டல் என தலைப்பிடப்பட்டுள்ளது.

    இப்படம் ஒரு மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. படத்தின் இசையில் சாம் சி.எஸ் மேற்கொள்ள அருண்குமார் தனசேகரன் படத்தை தயாரிக்கிறார்.

    ஜிவி பிரகாஷ் அவரது 25-வது படமான கிங்ஸ்டன் திரைப்படத்தை தொடர்ந்து இடிமுழக்கம், 13 மற்றும் பிளாக்மெயில் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இம்மார்ட்டல் படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 24ம் தேதி டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

     

    • இப்படத்தை விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குகிறார்.
    • இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகான நடிக்கிறார்.

    நடிகர் விஜயின் மகன், ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகான நடிக்கிறார். அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை லைகா நிறுவவனம் தயாரிக்கிறது. அத்துடன், ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

    சிக்மா படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியீடும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.



     


    • விக்ரம் பிரபுவின் முக்கிய படங்களில் ஒன்று டாணாக்காரன்.
    • சின்மயி குரலில் நல்ல மெலடி பாடலாக அமைந்துள்ளது

    விக்ரம் பிரபுவின் முக்கிய படங்களில் ஒன்று டாணாக்காரன். இப்படம் விக்ரம் பிரபுவிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இதனைத்தொடர்ந்து தற்போது மற்றொரு போலீஸ் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் 'சிறை'. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி படத்தை இயக்கியுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. த் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படம்.

    படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரெய்லர் அண்மையில் வெளியானது. இப்படத்தின் 2வது பாடல் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகி உள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சின்மயி குரலில் நல்ல மெலடி பாடலாக அமைந்துள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 


    ×