search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • கிமாமி சேமியா ரெசிப்பி ஒரு முகலாய ரெசிப்பி.
    • ஈத் பெருநாள் அன்று செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை ஆகும்.

    இந்த கிமாமி சேமியா ரெசிப்பி ஒரு முகலாய ரெசிப்பி. முகலாயர்கள் காலத்தில் ஈத் பெருநாள் அன்று செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை ஆகும். இந்த ரெசிபியை அவர்கள் ஈத் பெருநாளான ரம்ஜான் அன்று செய்து சாப்பிட்டு வந்துள்ளனர்.

    அத்தகைய இனிப்பு ரெசிப்பியை நாம் எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனை வீடுகளில் முக்கியமான விழாக்காலங்களில் செய்து சாப்பிடலாம். அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா- 200 கிராம்

    சர்க்கரை- 200 கிராம்

    நெய்- 50 கிராம்

    ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

    முந்திரி, ஏலக்காய், பிஸ்தா

    தேங்காய்- ஒரு ஸ்பூன்

    திராட்சை- ஒரு ஸ்பூன்

    பால்கோவா- 100 கிராம்

    செய்முறை:

    முதலில் ஒரு வாணொலியில் நெய் விட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, ஆகியவற்றை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் தேங்காயையும் சிறிய துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அதே கடாயில் சிறிதளவு நெய்விட்டு சேமியாவையும் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு தண்ணீர் கொத்ததும் அதில் வறுத்த பொருட்கள் மற்றும் ஏலக்காய்தூள் சேர்க்க வேண்டும். அதன்பிறகு சேமியாவையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    கலவை சிறிது கெட்டியானதும் அதில் பால்கோவா சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கிமாமி சேமியா தயார்.

     

    • பார்ட்டிகளில் செய்து அசத்துவதற்கு ஏற்ற டிஷ்
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 250 கிராம்

    பெரிய வெங்காயம்- 3

    பெரிய தக்காளி- 2

    பச்சை மிளகாய்- 1

    பூண்டு- 10பல்

    மல்லி தூள்- 2ஸ்பூன்

    சீரகத்தூள்- 1/2 ஸ்பூன்

    கரமசாலா- 1 1/4 ஸ்பூன்

    மிளகாய் தூள்- 1 1/4 ஸ்பூன்

    காஷ்மீர் மிளகாய்த்தூள்- 1/2ஸ்பூன்

    உப்பு- தேவையானஅளவு

    மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்

    முந்திரி பருப்பு- 20

    பாதாம் பருப்பு- 10

    ஃப்ரஷ் கீரிம்- 1/4 கப்

    சோம்பு- ஒரு ஸ்பூன்

    எண்ணெய்- தேவையானஅளவு

    தயிர்- ஒரு கப்

    செய்முறை:

    முதலில் சிக்கனை நன்றாக சுத்தப்படுத்திவிட்டு அதனை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் இந்த சிக்கனுடன் உப்பு, மிளகுத்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், வெங்காயம், பிரெட் தூள் சேர்த்து பிசைந்து எடுத்து உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த உருண்டைகளை பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், சோம்பு, பச்சை மிளகாய், முந்திரி, ஏலக்காய், பட்டை மற்றும் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். பச்சை வாசனை போன பிறகு அதில் அரைத்து வைத்த விழுதை சேர்க்க வேண்டும். பின்னர் அதில் சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாதூள், உப்பு சேர்த்து கலந்து அதில் பொறித்து வைத்துள்ள சிக்கன் கோப்தாக்களை போட்டு கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான கிரீமியான சிக்கன் மலாய் கோப்தா தயார். அதற்கு மேல் கிரீம் சேர்த்தும் பரிமாறலாம்.

     

    • வெயில் நேரத்தில் வெளியே செல்ல முடியாது.
    • வீட்டிலேயே இருக்கலாம் என்றாலும் புழுக்கம் தாள முடியவில்லை.

    இந்த கத்திரி வெயில் காலம் அனைவரையும் வதைத்து வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வெயில் மாலை வரை மக்களை திணறடிக்கிறது.

    வெயில் நேரத்தில் வெளியே செல்ல முடியாது. வீட்டிலேயே இருக்கலாம் என்றாலும் புழுக்கம் தாள முடியவில்லை. ஏ.சி. வாங்கும் அளவுக்கு வசதி உள்ளவர்கள் அதன்மூலம் இளைப்பாறுகிறார்கள். ஆனால் ஏ.சி. வாங்க முடியாதவர்களின் பாடு திண்டாட்டம் தான். சரி ஏ.சி. இல்லாட்மல் வீட்டை குளுமையாக வைத்திருக்க முடியாதா என்றால் நிச்சயமாக முடியும். அதற்கான வழிகள் இதோ....

    ஏ.சி. இல்லாத வீடுகளில் மின்விசிறி இருக்கும். மின் விசிறியை பயன்படுத்தி அறையை குளிரவைக்க முடியும். மின் விசிறியிலும் கூரையை ஒட்டி உள்ள சீலிங் ஃபேனை விட டேபிள் ஃபேன் அதிக குளிர்ந்த காற்றைத் தரும்.

    இந்த மின்விசிறிகள் மட்டுமின்றி, எக்சாஸ்ட் மின் விசிறிகளையும் பயன்படுத்தலாம். சமையலறை போன்ற வெப்பமான இடங்களில் இருந்து வெப்பத்தை வெளியேற்ற இவை உதவும். ஏ.சி.இல்லாமல் அறையை ஓரளவு குளுமையாக வைத்திருக்க எக்சாஸ்ட் ஃபேன்கள் கைகொடுக்கும்.

    திரைச்சீலைகள் மூலம், சூரியக் கதிர்கள் நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்கலாம் . வெளிர்நிற திரைச்சீலைகளை பயன்படுத்துவது சூரிய ஒளியால் ஏற்படும் வெப்பத்தை சுமார் 40 சதவீதம் அளவுக்கு குறைக்க உதவும். வெளிச்சத்தை கட்டுப்படுத்தும் வண்ண ஜன்னல் கண்ணாடிகளும் ஓரளவுக்கு அறையின் வெப்பநிலை உயர்வதைத் தடுக்க உதவும்.

    இயற்கையான காற்றோட்டத்துக்கான வழிகளைச் செய்யலாம். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில். குளிர்ந்த காற்று வீட்டுக்குள் வரும் வகையில் ஜன்னல்களைத் திறந்துவைக்கலாம். ஒரே நேரத்தில் பல ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறப்பதன் மூலம் காற்றோட்டத்துக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் கதவு, ஜன்னல்களை திறந்துவைக்கும் போது. பாதுகாப்பு விஷயத்திலும் கவனமாக இருங்கள்.

    அறையில் குளிர்ந்த நீரைத் தெளித்து பிறகு மின் விசிறியை ஓடவிடுங்கள். அப்போது தரையில் தெளிக்கப்பட்ட நீர் ஆவியாகி, அறைக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். இது கோடை காலத்தில் உஷ்ணத்தை வெல்ல ஏ.சி. இல்லாவிட்டாலும், கொஞ்சம் செலவு செய்ய முடியும் என்றால், ஏர் கூலர் ஒன்றை வாங்கலாம்.

    சிறிய இடங்களிலும் இதை பயன்படுத்த முடியும். விரைவாக குளிர்ச்சியைக் கொடுப்பதில் இது சிறப்பாக செயல்படும். தற்போது சிறிய, குறைந்த விலையிலான ஏர் கூலர்கள் கிடைக்கின்றன.

    அறையில் சில அழகுத் தாவரங்களை வைத்து வளர்க்கலாம். அவை வீட்டை குளிர்விக்க உதவுகின்றன. ஏனெனில் அவை சுவாசிக்கும்போது சுற்றியுள்ள காற்றைக் குளிர்விக்கின்றன, சுத்திகரிக்கவும் செய்கின்றன. நாம் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனையும் கொடுக்கின்றன.

    வீட்டைச் சுற்றிலும் இடம் இருந்தால் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கலாம்.

    பொதுவாக, அதிக வெப்பத்தை உமிழும் எதையும் செய்யாமல் இருப்பதும் அறை வெப்பநிலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். வீட்டில் குண்டு பல்புகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து எல்.ஈ.டி. விளக்குகளை பயன்படுத்தலாம். இதுபோன்ற செயல்கள் மூலம், வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கத்தை குறைத்து. குளுமையாக வைத்திருக்கலாம்.

    • பொடுகு மருத்துவ ரீதியாக செபோரியா என்று அழைக்கப்படுகிறது.
    • எளிய பொருட்களை வைத்தே பொடுகை எளிதாக விரட்டி விடலாம்.

    பொடுகு வெளியே வெள்ளைநிறத்தில் உதிரும் வகை , மற்றொன்று மண்டைப்பகுதியில் மெழுகு மாதிரி படிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியா வகை என இரண்டு வகை உண்டு. இவற்றில் உங்களுக்கு எந்தவிதமான பொடுகு என்றாலும் அதில் இருந்து நிவாரணம் பெற எளிய சிகிச்சை ஒன்று உள்ளது.

    பொடுகு மருத்துவ ரீதியாக செபோரியா என்று அழைக்கப்படுகிறது. இதை எப்படி போக்கலாம் என தெரியாமல் பலரும் குழம்புகிறார்கள். பொடுகின் முதல்கட்டமாக இருந்தால் நீங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்தே அதை எளிதாக விரட்டி விடலாம்.

    அதற்கு வேப்பிலை, வேப்ப எண்ணெய், வேப்பம்பூ, எலுமிச்சை போன்றவற்றை பயன்படுத்தி எளிமையான முறையில் பொடுகு பிரச்சனையில் இருந்து வெளியில் வர முடியும்.

    முதலில் வேப்ப இலைகளை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் மாதிரி செய்து உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை தடவி சுமார் 20 நிமிடங்கள் கழித்து பின்னர் கழுவினால் பொடுகு நீங்கிவிடும்.

    இதேபோல் வேப்பம் பூவை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து அந்த விழுதையும் தலையில் தேய்த்து குளித்து வந்தாலும் பொடுகுத்தொல்லை தீரும்.

    இந்த முறைகளை வாரத்துக்கு ஒரு தடவை செய்யலாம். இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. 

    • வடைக்கு மாவு அரைக்கும் போது உப்பை கடைசியாக சேர்க்க வேண்டும்.
    • தேங்காய் பர்பிக்கு தேங்காய் துருவலை வறுத்த பின்னர் பர்பி செய்தால் கெட்டியாக வரும்.

    * பயத்தம் மாவு உருண்டை செய்யும்போது வெல்லத்தை மிக்சியில் தூள் செய்து அத்துடன் வறுத்து சலித்த பயத்தம் மாவை போட்டு அரைத்தால் மாவு கட்டி இல்லாமல் இருக்கும்.

    * வடைக்கு உளுந்து அரைக்கும் போது கடைசியில்தான் உப்பு சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் மாவு இளகிவிடும்.

    * ஒருவருக்கு மட்டும் காபி போட வேண்டும் என்றால் சிறிது சர்க்கரை கலந்த காபித்தூளை டீ வடிக்கட்டியில் போட்டு வெந்நீர் ஊற்றினால் கெட்டியான டிகாஷன் கிடைக்கும்.

    * சப்பாத்தியை சிறு துண்டுகளாக செய்து, அத்துடன் உருளைக்கிழங்கு குருமாவை சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    * உளுந்தம் பருப்பு அதிகமாகவும், கடலை பருப்பு கொஞ்சமாகவும் போட்டு மிளகாய், கெட்டி காயம், உப்பு சேர்த்து வறுத்து அரைத்தால் இட்லி பொடி நல்ல சுவையாக இருக்கும்.

    * சாம்பார் சாதம் செய்யும்போது அரிசி, பருப்பு, காய்கறி கலவை, சாம்பார் பொடி ஆகியவற்றை மட்டும் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். உப்பு, புளிக்கரைசலை தாளிக்கும் போது கொதிக்க வைத்து சேர்க்க வேண்டும். அப்போதுதான் சாதம் குழைவாக இருக்கும்.

    * அப்பம் செய்யும் போது அரிசி, தேங்காய் அரைத்த கலவையில் வெல்லத்தை தண்ணீரில் நன்றாக கரையவிட்டு ஆறிய பின்பு தான் ஊற்ற வேண்டும். சூடாக ஊற்றினால் அப்பம் சரியாக வராது.

    * தேங்காய் பர்பி செய்யும்போது தேங்காய் துருவலை ஈரப்பசை போக சிறிது வறுத்த பின்னர் பர்பி செய்தால் கெட்டியாக வரும்.

    * வாய் குறுகலான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் முளைக்கீரையை வைத்தால் அடுத்த நாள் கீரை பசுமை நிறம் மாறாமல், வதங்காமல் இருக்கும்.

    • பெண்களில் உடலில் சுரக்கும் ஆண் ஹார்மோன்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • நாளமில்லா சுரப்பியில் ஏற்படும் மாறுபாடு காரணமாக, மனஅழுத்த ஹார்மோன் ஆன, கார்டிசோல் அதிகரிப்பால் இந்த பிரச்சனை வருகிறது.

    ஆண்களுக்கு இருக்கும் தாடி, மீசை போன்ற அமைப்புடன் பெண்களுக்கு முடி வளர்ச்சி இருக்கும். பெண்களில் உடலில் சுரக்கும் ஆண் ஹார்மோன்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    பெண்களுக்கு கன்னம், மேல் உதடு, தாடை பகுதிகளில் தேவையற்ற முடி வளர்ச்சி இருக்கிறது. இது போன்ற முடி வளர்ச்சி அனைத்து பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. இது குறிப்பாக உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் வருகிறது. ஆண்களுக்கு இருக்கும் தாடி, மீசை போன்ற அமைப்புடன் பெண்களுக்கு முடி வளர்ச்சி இருக்கும். பெண்களில் உடலில் சுரக்கும் ஆண் ஹார்மோன்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இதற்கு பெண்கள், த்ரெட்டிங், வேக்சிங் அல்லது ட்வீசிங் போன்றவற்றை செய்து தற்காலிகமாக முடியை நீக்கி வருகின்றனர். ஆனால், இதற்கு நிறைந்த தீர்வாக ஹார்மோன் பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.

    பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் - இது ஹார்மோன் குறைபாடு பிரச்சனையாகும். இதனால் பெண்களின் மாத விடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படும். இதில் ஆண்களின் ஹார்மோன் ஆன ஆண்ட்ரோஜென் அளவுக்கு அதிகமாக சுரப்பதால் இது போன்ற தேவையற்ற முடி வளர்ச்சி பிரச்சனை வரும். இது போன்ற முடி வளர்ச்சி, மாத விடாய் சுழற்சியில் மாறுபாடு இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.


    நாளமில்லா சுரப்பி கோளாறுகள் - நாளமில்லா சுரப்பியில் ஏற்படும் மாறுபாடு காரணமாக, மனஅழுத்த ஹார்மோன் ஆன, கார்டிசோல் அதிகரிப்பால் இந்த பிரச்சனை வருகிறது. இதனால் பெண்களுக்கு உடல் பருமன், வயிற்றை சுற்றி கொழுப்பு சேருதல், மற்றும் நீரிழுவு நோய் போன்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    மரபணு காரணம் - மரபணு காரணமாக அம்மா, அக்கா, அத்தை ஆகியோர்க்கு இந்த பிரச்சனை இருந்தால், இது போன்ற முடி வளர்ச்சி பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

    முதுமை - மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு, உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக முடி வளரும். உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக செயல்படும். அதனால் கூட இது போன்ற முடி வளர்ச்சி பிரச்சனை முதுமையில் வரும்.

    கர்ப்ப காலம் - பெண்கள் உடலில் பல படிநிலைகளில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கிறது. பருவம் அடைதல், கர்ப்ப காலம், உடல் பருமன், மாத விடாய் சுழற்சி நிற்கும் ஆகிய நேரங்களில் ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும். அதனால் இது போன்ற தேவையற்ற முடி வளர்ச்சி வரலாம்.


    அட்ரீனல் சுரப்பி கட்டிகள் - அட்ரீனல் ஹார்மோன் குறைபாடுகளால், உடலில் ஆண்ட்ரொஜென் ஹார்மோன் சுரப்பது அதிகரிக்கும். இதன் காரணமாக கருப்பையில் கட்டிகள் வளரும். மேலும் தேவையற்ற முடி வளர்ச்சி பிரச்சனையும் இருக்கும்.

    முடி வளர்ச்சி இருக்கிறது என்பதை உறுதி செய்தவுடன், மருத்துவரை அணுகி எந்த காரணத்தால் இப்படி முடி வளர்கிறது என்பதை கண்டறிந்து அதற்கான சிகிச்சை எடுத்து கொள்வது மட்டுமே நிரந்தர தீர்வாக அமையும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுவாகவே இந்த செவ்வரளி செடிக்கு காற்றை சுத்தப்படுத்தும் தன்மை இயற்கையாகவே உள்ளது.
    • செவ்வரளி செடியில் இருக்கும் காயானது விஷத்தன்மை கொண்டது.

    வீட்டில் செடி வளர்ப்பதற்கு கூட சாஸ்திர சம்பிரதாயங்கள் பார்க்க வேண்டுமா? என்று சிலர் சிந்திக்கலாம். நம் முன்னோர்களால் கூறப்பட்டிருக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு ஏதாவது ஒரு அர்த்தம் கண்டிப்பாக இருக்கும். சில செடிகளை வீட்டிற்கு முன் வைக்கக் கூடாது என்றால், அதைக் கட்டாயமாக வீட்டிற்கு முன் வைப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. இதன்படி நிறைய பேரின் வீடுகளில் பொன் அரளிச் செடியை வீட்டிற்கு முன் வளர்த்து வருவார்கள். அதாவது மஞ்சள் நிறத்தில் இருக்கும் அரளிப்பூவை தான் பொன் அரளிச்செடி என்று கூறுவோம். இந்த அரளிச்செடி வீட்டில் வளர்க்கலாமா? இதோடு சேர்த்து சிவப்பு அரளி செடியையும் வீட்டில் வைப்பது சரியா? தவறா? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.


    இந்த சிவப்பு அரளி செடியை நாம் எல்லோரும், வாகனத்தில் செல்லும்போது சாலையின் நடுவில் (lamp post) அதிகமாக வளர்ந்து இருப்பதை பார்த்திருப்போம். இதற்கு என்ன காரணம்? என்று பல பேருக்கு தெரிந்திருக்காது. பொதுவாகவே இந்த செவ்வரளி செடிக்கு காற்றை சுத்தப்படுத்தும் தன்மை இயற்கையாகவே உள்ளது. காற்றில் இருக்கும் கெட்ட சக்தியை தனக்குள் ஈர்த்துக்கொண்டு நல்ல காற்றை வெளிப்படுத்துவது தான் இந்த செவ்வரளி செடியின் தன்மை. அதாவது கார்பன் மோனாக்சைட், கார்பன்-டை-ஆக்சைடு இவைகளை தனக்குள் ஈர்த்து சுத்தப்படுத்தி, சுத்தமான காற்றை வெளிப்படுத்துகிறது. இந்த அறிவியல் உண்மை காரணமாகத்தான் இந்த செடியை காற்று மாசுபடும் இடத்தில், வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலையில் அதை வைத்துள்ளார்கள்.

    இதனால் இந்த செவ்வரளி செடியை நம் வீட்டில் வைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. நம் வீட்டிற்குள் வரும் காற்று சுத்தமாக வருவதற்கு இது ஒரு காரணமாக தான் இருக்கும். ஆனால் இந்த செவ்வரளி செடியில் இருக்கும் காயானது விஷத்தன்மை கொண்டது. விஷத்தன்மை கொண்ட காயை குழந்தைகளோ அல்லது தெரியாதவர்கள் யாரேனும் எடுத்து சாப்பிடக் கூடாது என்பதற்காக இந்த செடியை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவார்கள்.


    கூடுமானவரை இந்த சிவப்பு அரளிப்பூவை உக்கிரமான தெய்வங்களுக்கு சூட்டுவதால் வீட்டில் வைக்கக் கூடாது என்றும் கூறுவார்கள். இந்த இரண்டு காரணங்கள் தான். செவ்வரளி பூ முருகனுக்கும் மிக உகந்தது தான். சிவபெருமானும் தன் தலையில் செவ்வரளி பூ பூவை சூடி இருப்பதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் செவ்வரளி பூ செடியை முன் பக்கத்திலும் வைத்துக்கொள்ளலாம். பின் பக்கத்திலும் வைத்துக்கொள்ளலாம். எந்த ஒரு பயமும் வேண்டாம்.

    அடுத்தபடியாக பொன் அரளி பூவிற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை உண்டு என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்த பொன் அரளி பூவை நம் வீட்டில் வைப்பதால் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்றும், வீட்டில் செல்வ வளம் பெருகும் என்றும் சொல்லப்படுகிறது. உங்கள் வீட்டில் இடவசதி இல்லை என்றாலும் கூட, ஒரு சிறிய தொட்டியில் இந்த இரண்டு செடியையும் வைத்து வளர்த்துக் கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலீடு இல்லாமல் அல்லது குறைந்த முதலீட்டில் தொழிலை தொடங்கி போதிய அளவு வருமானத்தை ஈட்ட முயற்சிக்கின்றனர்.
    • ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை வீட்டில் தயாரித்து விற்பதும் ஆக்கப்பூர்வமான வணிக நடவடிக்கைகள் ஒன்றாகும்.

    வீட்டில் இருந்தவாறு குறைந்தபட்ச வருமானத்திலிருந்து அதிகபட்ச வருமானம் வரை தரும் பெண்களுக்கு ஏற்ற பிசினஸ்.

    இன்று அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்க, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அதிகப்படியான பணம் தேவைப்படுகிறது. இதனாலையே பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளை செய்து முடித்துவிட்டு வருமானம் ஈட்டுவதற்கான வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.

    மேலும் வீட்டிலேயே கடுமையான உழைப்பை செலுத்திய பெண்களால் பிறகு வேலைக்காக வெளியே செல்வது இயலாத காரியம் என்பதால் வீட்டில் இருந்தவரை வருமானம் ஈட்டும் தொழில்களை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் குறைந்த நேரத்தில், முதலீடு இல்லாமல் அல்லது குறைந்த முதலீட்டில் தொழிலை தொடங்கி போதிய அளவு வருமானத்தை ஈட்ட முயற்சிக்கின்றனர்.

    • இந்த நிலையில் வீட்டில் இருந்தவாறு அதிக வருமானத்தை பெற பெண்களுக்கு ஏற்ற தொழில்கள், வீட்டிலேயே பேக்கரி தொடங்கி சாக்லேட், கேக் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்யலாம், குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டில் இனிப்பு வகைகள், முறுக்கு தயாரித்து வியாபாரம் செய்யும் பெண்கள் சீசனுக்கு மட்டும் இல்லாமல், முழு நேரத் தொழிலாக ஹோம் பேக்கரி தொடங்கி பயன்பெற முடியும்.


    • கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, மண்பாண்டம், அலங்கார பொருட்கள், கண்ணாடி பொருட்கள் போன்றவற்றை தயாரிக்க குறைந்தபட்ச முதலீடு இருந்தால் போதும், தேவையான உபகரணங்களை வாங்கிக் கொண்டு பணிகளை மேற்கொண்டால் போதிய வருமானம் கிடைக்கும்.

    • சிறிய நகை உற்பத்தி, செயின், கம்மல் போன்ற பல்வேறு வகைகளில் நகை வடிவங்களை சிறிய அளவில் வீட்டிலிருந்தவாரு தயாரித்தால் அக்கம் பக்கத்தினரிடம் விற்பனை செய்தே வருமானம் ஈட்ட முடியும்.


    • வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் டைப்பிங் வர்த்தக நடவடிக்கையாக பயன்படுத்த முடியும். கணினியில் டிசைனிங் உள்ளிட்ட பல்வேறு திறன்கள் கொண்ட பெண்களுக்கு மேலும் வருவாய் கிடைக்கும்.

    • தமிழ்நாட்டில் தற்போது அதிகப்படியான பெண்கள் வீட்டில் தையல் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தையல் தொழில் செய்யும் பெண்களுடைய எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.


    • மெழுகுவர்த்தி மற்றும் அலங்கார விளக்குகள் ஆகியவற்றை வீட்டிலேயே மிக எளிமையாக தயாரிக்கலாம். இவையும் பயன்தரும் வணிக நடவடிக்கைகள் ஆகும். மேலும் ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை வீட்டில் தயாரித்து விற்பதும் ஆக்கப்பூர்வமான வணிக நடவடிக்கைகள் ஒன்றாகும்.

    • தற்போது ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதால் வீட்டில் ஆர்கானிக் சோப்பு மற்றும் ஆர்கனைச் சார்ந்த பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதும் ஏற்ற வணிக நடவடிக்கையாகும்.


    • மேலும் தற்போதைய நவீன சமூகத்தில் அழகு கலை பெண்கள் மத்தியில் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் வீட்டிலேயே அழகு கலை சார்ந்த செயல்பாட்டை செய்யும் பெண்கள் அதிக அளவில் வருமானம் ஈட்டி வருகின்றனர். மேலும் வாடிக்கையாளர் வீடு தேடி சென்று சில மணி நேரங்கள் செலவிட்டு அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர். இவ்வாறான வணிக நடவடிக்கைகள் தற்போது பெண்களுக்கு ஏற்ற முக்கியமான பிசினஸ்க்காக உருவெடுத்து இருக்கின்றனர்.

    • பி.சி.ஒ.எஸ் இருப்பவர்கள் குறைந்த கிளைசெமிக் உணவுகளை எடுக்க வேண்டும்.
    • ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    நீர்க்கட்டி பிரச்சனை என்னும் பாலிசிஸ்டிக் ஓவரியன் இருக்கும் பெண்களுக்கு இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டு செய்கிறது என்கிறது ஆய்வுகள். பி.சி.ஒ.எஸ் பிரச்சனை கொண்டு இருப்பவர்கள் குறைந்த கிளைசெமிக் உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். ஏனெனில் சில கார்போஹைட்ரேட்டுகள் போன்ற உணவுகளை விட இன்சுலின் அளவு அதிகமாகவோ அல்லது விரைவாகவோ இவை உண்டாக்காது.

    குறைந்த கிளைசெமிக் உணவுகளில் உள்ள முழு தானியங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள், பழங்கள், மாவுச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப்படாத குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் அடங்கும்.

    அழற்சி எதிர்ப்பு உணவு பெர்ரி, கொழுப்பு நிறைந்த மீன், இலைகள் கொண்ட காய்கறிகள், கீரைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற அழற்சி எதிர்ப்பு உணவுகள் எடுத்துகொள்ளலாம்.

    இதய நோய்களின் ஆபத்து அல்லது தாக்கத்தை குறைக்க உயர் ரத்த அழுத்த உணவை தவிர்த்து உணவு முறைகளை மாற்ற மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். இவையும் பி.சி.ஓ.எஸ் அறிகுறிகளை நிர்வகிக்க உதவுதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

    மீன், கோழி, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றூம் குறைந்த கொழுப்புள்ள பால் பொருள்கள் கொண்ட டயட்டை 8 வாரங்கள் தொடர்ந்து பின்பற்றியவர்கள் மற்றவர்களை காட்டிலும் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் தொப்பை கொழுப்பு குறைவதை கண்டதாக 2015-ம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    ஆரோக்கியமான பி.சி.ஓ.எஸ் உணவில் இயற்கை உணவுகள், பதப்படுத்தப்படாத உணவுகள், உயர் நார்ச்சத்து கொண்ட உணவுகள், சால்மன், டுனா, மத்தி மற்றும் கானாங்கெளுத்தி உள்ளிட்ட கொழுப்பு மீன்கள், காலே, கீரைகள், அடர்ந்த பச்சை நிற காய்கறிகள், சிவப்பு திராட்சை, பெர்ரி பழங்கள், கருப்பட்டை, அடர் சிவப்பு பழங்கள், காய்களில் ப்ரக்கோலி, காலிஃப்ளவர், உலர்ந்த பீன்ஸ் வகைகள், பயறு வகைகள், ஆலிவ் எண்ணெய், அவகேடோ மற்றும் தேங்காயெண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள், பைன் கொட்டைகள், அக்ரூட் பருப்புகள், பாதாம் மற்றும் பிஸ்தா உள்ளிட்ட கொட்டைகள், கருப்பு சாக்லேட், மசாலாவில் இலவங்கப்பட்டை போன்றவை ஆரோக்கியமான உணவு முறையில் பின்பற்ற வேண்டியவை.

    கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை உள்ள பெண்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ரீபைண்ட் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள், வெள்ளை ரொட்டி, சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள், வறுத்த உணவுகள், சோடாக்கள் மற்றும் எனர்ஜி பானங்கள் போன்ற சர்க்கரை பானங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், திடமான கொழுப்புகள், அதிகப்படியான சிவப்பு இறைச்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    • பி.சி.ஓ.எஸ். பிரச்சனையை இன்று அதிக பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.
    • மாதவிடாய் ஒழுங்கற்று இருந்தால் அதை சீர் செய்ய வேண்டும்.

    பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) என்கிற சினைப்பை நீர்க்கட்டியில் உண்டாகும் பிரச்சனையை இன்று அதிக பெண்கள் எதிர்கொள்கிறார்கள். பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பில் உண்டாகும் கோளாறுகளால் இந்த குறைபாடு நிகழ்கிறது. இது டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரத்தல், கருப்பை விரிவாதல் மற்றும் சீரற்ற மாதவிடாய் போன்ற காரணங்களால் உண்டாகிறது.

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அறிகுறிகள்

    ஒழுங்கற்ற மாதவிடாய்

    முகப்பரு

    அசாதாரண முடி வளர்ச்சி (முகத்தில், கன்னத்தில்,மீசை முடி)

    கூந்தல் உதிர்வு

    தோல் நிறம் மாறுதல்

    உடல் எடை அதிகரிப்பு

    பி.சி.ஓ.எஸ் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் குழந்தை பேறை எதிர்நோக்கும் போது முதலில் பி.சி.ஓ.எஸ் -ஐ கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் அது கருவுறுதலில் பிரச்சனையை உண்டாக்கலாம்.

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் முதலில் செய்ய வேண்டியது மாதவிடாய் ஒழுங்கற்று இருந்தால் அதை சீர் செய்ய வேண்டியதுதான். கருவுறுதலுக்கு முதல் தேவை மாதவிடாய் சுழற்சி சீராவதுதான்.

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் கொண்டிருப்பவர்கள் தங்களது உயரத்துக்கேற்ற எடையை அதாவது பி.எம்.ஐ கொண்டிருக்க வேண்டும். உடல் பருமனாக இருந்தாலும் உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும். அதனோடு உணவு முறையை சரியாக எடுத்துகொண்டால் கருவுறுதல் சிகிச்சை செய்வது எளிதாக இருக்கும்.

    பி.சி.ஒ.எஸ் (PCOS or PCOD) பெண்களின் மாதவிடாய் சுழற்சி சீராக இருந்தால் கருமுட்டை வெளிவரும் சமயம், அவை வெளிவரும் நேரம், எந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் கருவுறுதல் சாத்தியமாகலாம் என்பதை அறிய எளிதாக இருக்கும். அதனால் பி.சி.ஓ. எஸ் இருப்பவர்களுக்கு குழந்தைப்பேறு என்பதும் எளிதில் கிட்டகூடும்.

    • முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.
    • மன அழுத்தத்தில் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படும்.

    அழகாக இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை தான். இதனால் பலரும் சந்தையில் விற்கப்படும் கிரீம்களை முகத்தில் அப்ளை செய்துவருகிறார்கள். சிலர் இயற்கை முறையில் தங்களை அழகு படுத்திக் கொள்கின்றனர். இருந்தாலும் பல நபர்களுக்கு இளம் வயதிலேயே தோல் சுருக்கங்கள் ஏற்படுகிறது. அதிலும் வயதானால் தோல் சுருக்கம் ஏற்படுவது இயல்பு தான். அதுவே இளம் வயதிலேயே தோல் சுருங்குகிறது என்றால் வருத்தமாக தான் இருக்கும். இதற்கு காரணம் நாம் எடுத்து கொள்ளும் உணவு முறை, பழக்க வழக்கம் போன்றவை தான் இளமையிலே முதுமை தோற்றம் வருவதற்கு காரணமாக இருக்கிறது.

    புற ஊதா கதிர்கள் தான் தோல் சுருங்குவதற்கு காரணமாக அமைகின்றன. இந்த புற ஊதாக்கதிர்கள் தோலில் உள்ள கொலாஜன் உற்பத்தியை குறைத்து தோலினை சுருங்கச்செய்கிறது.

    நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் சென்று வந்தாலும் சரி, வெயிலில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள உடல் முழுவதையும் ஆடைகளால் மறைத்துக்கொள்வது நல்லது.

    இளமையை தக்கவைத்துக்கொள்வதற்கு புகைப்பழக்கம் மற்றும் மது குடிப்பது போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது. இது ரத்த ஓட்டத்தை குறைத்துவிடும். இதனால் தோல்கள் பலம் இல்லாமல் தொங்க ஆரம்பித்துவிடும்.

    ஒரு மனிதன் மன அழுத்தத்தில் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனாலேயும் தோல் சுருக்கம் ஏற்படும். எப்பொழுதாவது மன அழுத்தம் ஏற்பட்டால் பிரச்சினை இல்லை. இதனால் மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் உங்களுக்கு பிடித்தவற்றை செய்து மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு கூட தோல் சுருக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.

    சரியாக தூங்காமல் இருந்தாலும் பிஎச் அளவு மற்றும் ஈரப்பதம் இவை இரண்டும் குறைந்து தோலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மேலும் கொலாஜன் உற்பத்தியையும் குறைத்துவிடுகிறது. அதனால் சரியான தூக்கம் என்பது மிகவும் அவசியம்.

    உடலில் சத்துக்கள் குறைந்தாலும் தோல் சுருக்கம் மற்றும் தோல் வியாதிகள் ஏற்படும். இதனால் தினமும் ஜூஸ் அல்லது ஏ.பி.சி. ஜூஸ் குடித்து வரும் போது தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து தோற்றம் பொலிவுபெறும்.

    • பிஸ்கெட்டை வைத்து எளிமையா செய்யலாம் பிஸ்கெட் பர்ஃபி.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    என்னது பிஸ்கெட்டை வைத்து சாக்லேட் பர்ஃபியா, அதெப்படி என்று தானே யோசிக்கிறீங்க... நம்ம வீட்டில் இருக்கும் பிஸ்கெட்டை வைத்து எளிமையா செய்யலாம் பிஸ்கெட் பர்ஃபி. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதுமட்டுமல்ல குழந்தைகளே எளிமையா இதனை செய்ய முடியும். அரைமணிநேரத்திலேயே இதனை செய்து முடித்துவிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிஸ்கெட்- ஒரு பாக்கெட்

    கோ கோ பவுடர்- அரைகப்

    பொடித்த நட்ஸ்- ஒரு கப்

    வெண்ணெய்- 50 கிராம்

    சர்க்கரை- அரைகப்

    செய்முறை:

    இந்த சாக்லேட் பர்ஃபி செய்வதற்கு கிரீம் இல்லாத பிஸ்கெட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் பிஸ்கெட்டை எடுத்து அதனை சிறிது சிறிதாக உடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பு மிக்சியில் போட்டு பொடித்துவிடக்கூடாது.

    அதன்பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பிடித்த சர்க்கரை, கோ கோ பவுடர் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவை கெட்டியாகும் போது வெண்ணெய் சேர்க்க வேண்டும்.

    வெண்ணெய் சேர்த்தவுடன் இந்த கலவை சிறிது கெட்டியாகத்தொடங்கும். இந்த நேரத்தில் இந்த கலவையை எடுத்து நாம் ஏற்கனவே உடைத்து வைத்துள்ள பிஸ்கெட் கலவையில் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

    இந்த கலவையை வெண்ணெய் தடவிய கேக் மோல்டில் கொட்டி சரி சமமாக சமப்படுத்த வேண்டும். பின்னர் இதனை மூடி ஃப்ரிட்ஜில் 2 மணிநேரம் வைத்து எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து பரிமாறலாம். கோடை விடுமுறையை கொண்டாடும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். 

     

    ×