search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • தனது அனுபவத்தை இரண்டாவதாக சிப் பொருத்திக் கொள்பவரிடம் தெரிவிப்பார்.
    • எண்ணங்கள் மூலமாக மொபைல் போன், கணினியை கட்டுப்படுத்தலாம்.

    உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதளம் மற்றும் நியூராலிங்க் என பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். இவரது நியூராலிங்க் நிறுவனம் கை, கால் போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்தவர்கள் மொபைல், கணினி போன்ற சாதனங்களை எண்ணங்கள் மூலம் இயக்க செய்யும் சிப் ஒன்றை உருவாக்கி இருக்கிறது.

    இந்த சிப் மனித மூளையில் பொருத்தி கொண்டால், பயனர்கள் கை, கால் உதவியின்றி எண்ணங்களாலேயே கர்சர் மூலம் மொபைல் போன் மற்றும் கணினி உள்ளிட்டவைகளை இயக்கிவிட முடியும். முதற்கட்டமாக விலங்குகளில் இந்த சோதனை நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் நியூராலிங்க் உருவாக்கிய சிப்-ஐ மனித மூளையில் பொருத்தி சோதனை செய்வதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்தது.

    அந்த வகையில், இந்த ஆண்டு துவக்கத்தில் நியூரிங்க் உருவாக்கிய டெலிபதி சிப் நோலன் ஆர்பா என்ற நபரின் மூளையில் பொருத்தப்பட்டது. இந்த நிலையில், டெலிபதி சிப் பொருத்திக் கொள்ள இரண்டாவது நபர் தற்போது விண்ணப்பிக்கலாம் என்று நியூராலிங்க் அறிவித்து இருக்கிறது.

    "எங்களின் டெலிபதி சைபர்நெடிக் சிப் கொண்டு நீங்கள் உங்களது மொபைல் போன் மற்றும் கணினி போன்ற சாதனங்களை எண்ணங்கள் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும்," என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், மூளையில் சிப் பொருத்திக் கொண்ட நோலன் தனது அனுபவத்தை இரண்டாவதாக சிப் பொருத்திக் கொள்பவரிடம் தெரிவிப்பார்.

    இம்மாத துவக்கத்தில் சிப் பொருத்தி 100 நாட்களை கடந்த நிலையில் நோலன், தற்போது எண்ணங்கள் மூலமாக மொபைல் போன், கணினி மற்றும் ஐபேட் உள்ளிட்டவைகளை இயக்கி கேம்களை விளையாடுவதோடு பிரவுசிங் செய்கிறார்.

    • ஆப்பிள் அந்த விளம்பர வீடியோவுக்கு மன்னிப்பு கோரியது.
    • கேலக்ஸி டேப் மாடலுக்கு விளம்பரமாக அமைந்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தான் மேம்பட்ட ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தது. மேலும், புதிய ஐபேட் ப்ரோ மாடலுக்கான விளம்பர வீடியோ ஒன்றை ஆப்பிள் வெளியிட்டது.

    இந்த வீடியோவில் கணினிகள், லேப்டாப்கள், பெயிண்ட், இசை கருவிகள் என கலை சார்ந்த பொருட்கள் அனைத்தையும் அழகாக அடுக்கி வைத்து, அவற்றை ராட்சத நசுக்கு இயந்திரம் கொண்டு நசுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விளம்பர வீடியோவுக்கு பலத்தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஆப்பிள் அந்த விளம்பர வீடியோவுக்கு மன்னிப்பு கோரியது.

    ஐபேட் ப்ரோ மாடலுக்கான ஆப்பிள் விளம்பர வீடியோ தொடர்பான சர்ச்சை சற்று ஓய்ந்துள்ளது. இந்த நிலையில், சாம்சங் நிறுவனம் ஐபேட் ப்ரோ விளம்பர விவகாரத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ஆப்பிள் வெளியிட்ட வீடியோவுக்கு பதில் அளிக்கும் வகையிலும், கேலக்ஸி டேப் மாடலுக்கு விளம்பரமாகவும் அமைந்துள்ளது.

    சாம்சங் தற்போது வெளியிட்டுள்ள விளம்பர வீடியோவில், கீழே உடைந்து இருக்கும் ஏராளமான பொருட்களில் பெண் ஒருவர் இசைக்கருவியை எடுத்து வந்து இருக்கையில் அமர்கிறார். பிறகு அருகில் உள்ள டேப் ஒன்றில் இசைக்கருவியை இயக்கும் குறிப்புகளை பார்த்துக் கொண்டே இசைக்கருவியை வாசிக்க ஆரம்பிக்கிறார்.

    வீடியோவில் அந்த பெண் பயன்படுத்தும் டேப்லெட் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் மாடல் ஆகும். இந்த வீடியோ முடிவில் கிரியேடிவிட்டியை நசுக்கிவிட முடியாது (creativity can never be crushed) எனும் வாசகமும் இடம்பெறுகிறது. இத்துடன் கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா மாடலும் காண்பிக்கப்படுகிறது. சாம்சங் வெளியிட்ட புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அந்த சேவையை பயன்படுத்தும் அனைவரும் பாதிக்கப்படுவர்.
    • பல பில்லியன் டாலர்கள் இழக்கும் சூழல் உருவானது.

    உலகின் முன்னணி தேடுப்பொறி நிறுவனம் கூகுள். உலகளவில் ஏராளமான பயனர்கள் கூகுள் நிறுவன சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இணையம் சார்ந்து கூகுள் நிறுவனம் ஏராளமான சேவைகளை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அவ்வாறு கூகுள் வழங்கி வரும் ஸ்டோரேஜ் சார்ந்த சேவை தான்- கூகுள் கிளவுட்.

    கூகுள் கிளவுட் சேவையை கொண்டு பயனர்கள் தங்களின் மிகமுக்கிய தரவுகள் அனைத்தையும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட வடிவில் மிகவும் பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலம். தெரியாத்தனமாக கிளவுட் சேவையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அந்த சேவையை பயன்படுத்தும் அனைவரும் பாதிக்கப்படுவர். இதே போன்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    இந்த சம்பவத்தில் ஓய்வூதிய நிதி சேவையை வழங்கி வரும் யூனிசூப்பர் நிறுவன பயனர்கள் சுமார் ஐம்பது லட்சம் பேரின் ஓய்வூதிய நிதி இருப்பு கொண்ட விவரங்கள் தவறுதலாக கூகுள் கிளவுட் சர்வெர்களில் இருந்து அழிக்கப்பட்டு விட்டது. இதை கூகுள் கிளவுட் தலைமை செயல் அதிகாரி தாமஸ் குரியனும் உறுதிப்படுத்தி இருந்தார்.

    மேலும், விவரங்கள் தெரியாமல் அவிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்த சம்பவத்தில் யூனிசூப்பர் நிறுவன பயனர்களுக்கு சொந்தமான பல பில்லியன் டாலர்கள் இருப்பு கொண்ட அக்கவுண்ட்கள் பாதிக்கப்பட்டன.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஓய்வூதிய நிதி நிறுவனம் யூனிசூப்பர். இந்நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தும் சுமார் ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களால் தங்களது ஓய்வூதியை நிதி சார்ந்த அக்கவுண்டை ஒருவார காலத்திற்கு இயக்க முடியாத சூழல் உருவானது. இதனால் பயனர்கள் ஓய்வூதிய நிதி நிலவரத்தை பார்க்க முடியாமலும், சிலரது அக்கவுண்டில் பணம் குறைந்து இருப்பதுமான பிரச்சினைகள் ஏற்பட்டது.

    ஓய்வூதிய நிதி சார்ந்த பிரச்சினை தொடர்பாக யூனிசூப்பர் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில் இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என்றும் இதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இதே தகவலை யூனிசூப்பர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் சுன் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார்.

    மேலும், இந்த சம்பவத்தில் யூனிசூப்பர் நிறுவனம் தனது தரவுகளை கூகுள் கிளவுட் மட்டுமின்றி மேலும், சில நிறுவனங்களின் சர்வெர்களில் ஸ்டோர் செய்து வைத்திருக்கிறது. இதன் காரணமாக இந்த பிரச்சினையின் பாதிப்புகள் பெருமளவுக்கு குறைந்துள்ளது.

    இதுதவிர கூகுள் கிளவுட் தரப்பில் இதுபோன்ற பிரச்சினை எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறிந்து இருப்பதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூகுள் கிளவுட் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

    • ஜியோபைபர் மற்றும் ஏர்பைபர் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.
    • அன்லிமிடெட் டேட்டா, ஓ.டி.டி. பலன்கள் வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய ஜியோ சலுகை "அல்டிமேட் ஸ்டிரீமிங் பிளான்" என்று அழைக்கப்படுகிறது. இந்த போஸ்ட்பெயிட் சலுகை ஜியோபைபர் மற்றும் ஏர்பைபர் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

    மாதம் ரூ. 888 கட்டணத்தில் கிடைக்கும் ஜியோவின் புதிய போஸ்ட்பெயிட் சலுகையில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஓ.டி.டி. பலன்கள் வழங்கப்படுகிறது.

     


    அதன்படி இந்த சலுகையில் நெட்ப்ளிக்ஸ் (பேசிக்), பிரைம் வீடியோ (லைட்), ஜியோசினிமா பிரீமியம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 பிரீமியம், சன் நெக்ஸ்ட், ஹோய்சொய், டிஸ்கவரி பிளஸ், ஆல்ட் பாலாஜி, இரோஸ் நௌ, லயன்ஸ்கேட் பிளே, ஷீமாரோமீ, டாகுபே, எபிகான் மற்றும் இடிவி வின் என 15-க்கும் அதிக ஓ.டி.டி. தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

    மேலும், இந்த சலுகையில் ஐ.பி.எல். "தன் தனா தன்" பலன்களும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் கீழ் பயனர்களுக்கு 50 நாட்கள் வரை இலவச இண்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. எனினும், ஐ.பி.எல். சலுகை மே 31 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும்.

    • ஐபேட் ப்ரோ மாடலுக்காக ஆப்பிள் நிறுவனம் விளம்பர வீடியோ வெளியிட்டது.
    • விளம்பர வீடியோவுக்கு ஆன்லைனில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மாடல்களை சமீபத்தில் அப்டேட் செய்தது. புதிய ஐபேட் ப்ரோ மாடலில் OLED டிஸ்ப்ளே, புதிய 13 இன்ச், M4 சிப்செட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஐபேட் ப்ரோ மாடலுக்காக ஆப்பிள் நிறுவனம் விளம்பர வீடியோ வெளியிட்டது.

    விளம்பர வீடியோவின் படி மிகப்பெரிய நசுக்கு இயந்திரம் ஒன்று இசை வாத்தியங்கள், கணினிகள், ஆர்கேட் இயந்திரங்கள், பெயிண்ட், சிற்பங்கள், கேமராக்கள் மற்றும் ஏராளமான பொருட்களை நசுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில் நசுக்கப்படும் பொருட்கள் அனைத்தும் புதிய ஐபேட் ப்ரோ என்று ஆப்பிள் நிறுவனம் வீடியோ மூலம் வெளிப்படுத்த முயற்சிக்கிறது.

     


    ஆப்பிள் வெளியிட்டுள்ள ஐபேட் ப்ரோ விளம்பர வீடியோவுக்கு பலரும் ஆன்லைனில் எதிர்ப்பு தெரிவித்தனர். பலரும் இந்த வீடியோ மனித முயற்சி மற்றும் பயனுள்ள கருவிகள் அழிக்கப்படுவது, மோசமான விளம்பரமாக அமைந்துள்ளது என கமென்ட் செய்து வருகின்றனர். வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பான அறிக்கையில், "ஆப்பிள் நிறுவனத்தில் எங்களது டி.என்.ஏ.-வில் கிரியேட்டிவிட்டி உள்ளது. இதன் மூலம் சாதனங்களை அழகாக வடிவமைத்து, உலகளவில் கிரியேட்டர்களை ஊக்கப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எங்களின் குறிக்கோள் பயனர்கள் தங்களது கற்பனை மற்றும் யோசனைகளை ஐபேட் மூலம் வெளிப்படுத்த ஏராளமான வழிகளை ஏற்படுத்தி கொடுப்பது ஆகும். இந்த வீடியோவில் எங்களது மார்க் தவரிவிட்டது, மன்னித்துவிடுங்கள்," என்று தெரிவித்துள்ளது.

    • மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் சப்போர்ட் உடன் கிடைக்கிறது.
    • ஐபேட் ப்ரோ மாடல் முற்றிலும் புதிய M4 சிப்செட் கொண்டிருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களை அப்டேட் செய்து புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி புதிய ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்கள் 11 இன்ச் மற்றும் 13 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது.

    புதிய ஐபேட் ஏர் மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் M2 சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸர் ஏ.ஐ. சார்ந்த அம்சங்களை இயக்குவதற்கு ஏற்ற திறன் கொண்டிருக்கிறது. புதிய ஐபேட் ஏர் மாடலுடன் மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் சப்போர்ட் உடன் கிடைக்கிறது.


     

    நான்கு வித நிறங்களில் கிடைக்கும் புதிய ஐபேட் ஏர் மாடல் குறைந்தபட்சம் 128 ஜி.பி. மெமரியுடன் கிடைக்கின்றன. புதிய ஐபேட் ஏர் மாடல்கள் ஐந்துவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 12MP கேமரா, டச் ஐ.டி., வைபை 6E போன்ற வசதிகள் உள்ளன.

    ஐபேட் ப்ரோ மாடல் முற்றிலும் புதிய M4 சிப்செட் கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் ப்ரோ உள்ளிட்ட சாதனங்களையும் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச வெளியீட்டை ஒட்டி புதிய சாதனங்களின் இந்திய விலையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐபேட் ஏர் 2024 11 இன்ச் வைபை 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 900

    ஐபேட் ஏர் 2024 11 இன்ச் வைபை+செல்லுலார் 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 990

    ஐபேட் ஏர் 2024 13 இன்ச் வைபை 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 900

    ஐபேட் ஏர் 2024 13 இன்ச் வைபை+செல்லுலார் 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 94 ஆயிரத்து 900

    புதிய ஐபேட் ஏர் (2024) மாடல் புளூ, பர்பில், ஸ்பேஸ் கிரே மற்றும் ஸ்டார்லைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், விற்பனை மே 15 ஆம் தேதி துவங்குகிறது.

    ஐபேட் ப்ரோ 11 இன்ச் வைபை 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 900

    ஐபேட் ப்ரோ 11 இன்ச் வைபை+செல்லுலார் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900

    ஐபேட் ப்ரோ 13 இன்ச் வைபை 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900

    ஐபேட் ப்ரோ 13 இன்ச் வைபை+செல்லுலார் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 900

    ஐபேட் ப்ரோ மாடல் சில்வர் மற்றும் ஸ்பேஸ் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், விற்பனை மே 15 ஆம் தேதி துவங்குகிறது.

    ஆப்பிள் பென்சில் ப்ரோ விலை ரூ. 11 ஆயிரத்து 900

    11 இன்ச் மேஜிக் கீபோர்டு விலை ரூ. 29 ஆயிரத்து 900

    13 இன்ச் மேஜிக் கீபோர்டு விலை ரூ. 33 ஆயிரத்து 900 

    • 7 மாடல்களின் விலை குறைந்த பட்சம் 600 டாலர்கள் ஆகும்.
    • மூன்று இடங்களை ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் ஆகும்.

    உலகளவில் அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்டியலில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. 2024 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் ஸ்மார்ட்போன் வினியோகம் தொடர்பாக கவுன்ட்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி இந்த காலாண்டு வாக்கில் விற்பனைான டாப் 10 ஸ்மார்ட்போன்கள் அனைத்திலும் 5ஜி கனெக்டிவிட்டி இடம்பெற்றிருந்தது. மேலும், பயனர்கள் பிரீமியம் சாதனங்களை அதிகளவில் வாங்க துவங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன்களில் 7 மாடல்களின் விலை குறைந்த பட்சம் 600 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 50 ஆயிரத்து 90) என துவங்கின.

    2024 ஆண்டின் முதல் காலாண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடலாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இடம்பெற்று இருக்கிறது. டாப் 10 விற்பனையான ஸ்மார்ட்போன்களில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. இதில் முதல் மூன்று இடங்களை ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் ஆகும்.

    முதல் காலாண்டின் டாப் 10 பட்டியலில் இரண்டு இடங்களை சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் பெற்றுள்ளது. இதில் கேலக்ஸி S24 அல்ட்ரா ஐந்தாவது இடமும், கேலக்ஸி S24 பேஸ் வேரியண்ட் ஒன்பதாவது இடமும் பிடித்துள்ளது.

    அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்

    ஐபோன் 15

    ஐபோன் 15 ப்ரோ

    ஐபோன் 14

    கேலக்ஸி S24 அல்ட்ரா

    கேலக்ஸி A15 5ஜி

    கேலக்ஸி A54

    ஐபோன் 15 பிளஸ்

    கேலக்ஸி S24

    கேலக்ஸி A34





    • ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்த புது அம்சங்கள் அறிவிக்கப்படலாம்.
    • M4 பிராசஸர் வழங்கப்படும் என தகவல்.

    ஆப்பிள் நிறுவனத்தின் லெட் லூஸ் (Let Loose) நிகழ்ச்சி நாளை (மே 7) நடைபெற உள்ளது. வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியை உலகம் முழுக்க பார்வையாளர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தபடி நேரலையில் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் புதிய சாதனங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட இருக்கிறது.

    அதன்படி ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதய ஐபேட் ப்ரோ மாடல்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ப்ரோ ஆகும். இரு மாடல்களும் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இவற்றில் ஸ்கிரீனை சுற்றி மெல்லிய பெசல்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    ஐபேட் சாதனங்களில் முதல்முறையாக இரு மாடல்களிலும் OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று தெரிகிறது. புதிய ஐபேட் மாடல்களில் M4 பிராசஸர் வழங்கப்படும் என தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், M3 பிராசஸர் கூட வழங்கப்படலாம்.

    இதைத் தொடர்ந்து இரண்டு ஐபேட் ஏர் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இவை 10.9 இன்ச் மற்றும் 12.9 இன்ச் அளவுகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இவற்றுடன் ஹேப்டிக் ஃபீட்பேக் மற்றும் புது வசதிகளை வழங்கும் ஆப்பிள் பென்சில் மற்றும் மேஜிக் கீபோர்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    புதிய சாதனங்கள் வரிசையில் ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்த புது அம்சங்கள் மற்றும் அறிவிப்புகள் ஆப்பிள் லெட் லூஸ் நிகழ்ச்சியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். 

    • அறிக்கையை வாட்ஸ்அப் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
    • இந்தியாவில் சுமார் ஏழு கோடி அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டது.

    இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 7 கோடி வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை தடை செய்துள்ளதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி மோசடி மற்றும் தேவையற்ற விளம்பர தொந்தரவுகள் குறித்து தங்களுக்கு கிடைக்கும் அனைத்துவிதமான குற்றச்சாட்டுகளையும் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிகள் பிரிவு 4(1) (d)-இன் கீழ் வாட்ஸ்அப் மோசடிகள் தொடர்பான புகார் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-இன் கீழ் வாட்ஸ்அப் தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை விளக்கும் அறிக்கையை வாட்ஸ்அப் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கையில் தான் இந்தியாவில் சுமார் ஏழு கோடி அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

    இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வாட்ஸ்அப் சுமார் 7.9 மில்லியன் அக்கவுண்ட்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் வாட்ஸ்அப் சுமார் 69 மில்லியன் அக்கவுண்ட்களை தடை செய்துள்ளது. 

    • ஆப்பிள் பென்சில் ரெண்டர் இடம்பெற்று இருக்கிறது.
    • ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யலாம்.

    ஆப்பிள் நிறுவனம் மே 7 ஆம் தேதி புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் லெட் லூஸ் (Let Loose) என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. ஆப்பிள் லெட் லூஸ் நிகழ்ச்சிக்கான அறிவிப்பில் ஆப்பிள் பென்சில் ரெண்டர் இடம்பெற்று இருக்கிறது.

    இத்துடன் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில், புதிய சாதனங்கள் அறிமுகத்தை ஒட்டி புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஆப்பிள் பென்சில் கிராஃபிக் டிசைன் திறன்களை எடுத்துரைக்கும் சிறு வீடியோவை இணைத்துள்ளார்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் இந்த நிகழ்ச்சியில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது. இவற்றில் M3 சிப், OLED டிஸ்ப்ளே, மெல்லிய பாடி மற்றும் பெசல்கள், மேட் ஸ்கிரீன் ஆப்ஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    மேலும் இரண்டு புதிய ஐபேட் ஏர் மாடல்கள், ஐபேட் ப்ரோ மாடலுக்கென ரிடிசைன் செய்யப்பட்ட மேஜிக் கீபோர்டு அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. புதிய ஆப்பிள் பென்சில் விசேஷ வசதிகளை கொண்டிருக்கும் என்றும் இதில் விஷன் ஒ.எஸ். சப்போர்ட் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

    ஆப்பிளின் லெட் லூஸ் நிகழ்ச்சி மே 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 7.30) துவங்க இருக்கிறது. 

    • இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    • ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு CE 3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நார்டு CE 3 ஸ்மார்ட்போனின் விலை கடந்த நவம்பர் மாதம் ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டது.

    நார்டு CE 3 ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999-இல் இருந்து ரூ. 24 ஆயிரத்து 999 என்று மாறி இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 9 குறைக்கப்பட்டு ரூ. 22 ஆயிரத்து 990 என்று மாறியுள்ளது.

     


    இதுதவிர ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவற்றை சேர்க்கும் போது ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20 ஆயிரத்து 990 என்று மாறிவிடும்.

    ஒன்பிளஸ் இந்தியா வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 22 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அக்வா சர்ஜ் மற்றும் கிரே ஷிம்மர் நிறங்களில் கிடைக்கிறது. 

    • உலகளவில் 184 நாடுகளில் சேவைகளை தடையின்றி டேட்டா சேவைகளை பெற அனுமதி அளித்திருந்தது.
    • ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதுபுது வசதிகளை செய்து வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

    2022 டிசம்பர் மாதம் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் வேர்ல்ட் பாஸ் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் உலகளவில் 184 நாடுகளில் சேவைகளை தடையின்றி டேட்டா சேவைகளை பெற அனுமதி அளித்திருந்தது. எனவே ஏர்டெல் வாடிக்கையாளர்கள் விமான நிலையத்திற்குச் சென்றாலும் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்தாலும், இந்த ஒரு பேக் இப்போது அனைத்து ரோமிங் தேவைகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

    அதன்படி வெளிநாடுகளில் அதிகம் தங்குபவர்கள் அல்லது அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கென சிறப்பு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பேக்குகள் மலிவு விலையில் சுமார் 1 வருடம் வரை செல்லுபடியாகும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உலகின் எந்த மூலையிலிருந்தும் வாடிக்கையாளருக்கு 24X7 கால் சென்டர் மூலம் வாடிக்கையாளர் சேவையை முற்றிலும் இலவசமாக பெறலாம் என்றும் தெரிவித்து அதை நடைமுறைபடுத்தி இருந்தது. இந்த மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்விக்கும் விதமாகவும், பயனுள்ளதாக இருந்தது.


    இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதவாது.

    வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாடிக்கைகாளர்கள் அந்தந்த நாட்டில் புதிய சிம் கார்டுகளை வாங்குபதை தவிர்க்கும் வகையில் 'அனைத்து நாடுகளுக்கும் ஒரே பிளான்' என்ற பெயரில் 'புதிய சர்வதேச ரோமிங்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, 10 நாட்களுக்கு 1GB இணைய சேவையுடன் 100 நிமிடங்கள் டாக் டைம் கொண்ட இந்த புதிய திட்டம் 899 ரூபாய் கட்டணத்தில் கிடைக்கும். அதே போல் 30 நாட்களுக்கான கட்டணம் ரூபாய் 2998 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாடு செல்லும் பயணிகளுக்கும் மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

    ×