search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    • கிமாமி சேமியா ரெசிப்பி ஒரு முகலாய ரெசிப்பி.
    • ஈத் பெருநாள் அன்று செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை ஆகும்.

    இந்த கிமாமி சேமியா ரெசிப்பி ஒரு முகலாய ரெசிப்பி. முகலாயர்கள் காலத்தில் ஈத் பெருநாள் அன்று செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை ஆகும். இந்த ரெசிபியை அவர்கள் ஈத் பெருநாளான ரம்ஜான் அன்று செய்து சாப்பிட்டு வந்துள்ளனர்.

    அத்தகைய இனிப்பு ரெசிப்பியை நாம் எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனை வீடுகளில் முக்கியமான விழாக்காலங்களில் செய்து சாப்பிடலாம். அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா- 200 கிராம்

    சர்க்கரை- 200 கிராம்

    நெய்- 50 கிராம்

    ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

    முந்திரி, ஏலக்காய், பிஸ்தா

    தேங்காய்- ஒரு ஸ்பூன்

    திராட்சை- ஒரு ஸ்பூன்

    பால்கோவா- 100 கிராம்

    செய்முறை:

    முதலில் ஒரு வாணொலியில் நெய் விட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, ஆகியவற்றை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் தேங்காயையும் சிறிய துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அதே கடாயில் சிறிதளவு நெய்விட்டு சேமியாவையும் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு தண்ணீர் கொத்ததும் அதில் வறுத்த பொருட்கள் மற்றும் ஏலக்காய்தூள் சேர்க்க வேண்டும். அதன்பிறகு சேமியாவையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    கலவை சிறிது கெட்டியானதும் அதில் பால்கோவா சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கிமாமி சேமியா தயார்.

     

    • பார்ட்டிகளில் செய்து அசத்துவதற்கு ஏற்ற டிஷ்
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 250 கிராம்

    பெரிய வெங்காயம்- 3

    பெரிய தக்காளி- 2

    பச்சை மிளகாய்- 1

    பூண்டு- 10பல்

    மல்லி தூள்- 2ஸ்பூன்

    சீரகத்தூள்- 1/2 ஸ்பூன்

    கரமசாலா- 1 1/4 ஸ்பூன்

    மிளகாய் தூள்- 1 1/4 ஸ்பூன்

    காஷ்மீர் மிளகாய்த்தூள்- 1/2ஸ்பூன்

    உப்பு- தேவையானஅளவு

    மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்

    முந்திரி பருப்பு- 20

    பாதாம் பருப்பு- 10

    ஃப்ரஷ் கீரிம்- 1/4 கப்

    சோம்பு- ஒரு ஸ்பூன்

    எண்ணெய்- தேவையானஅளவு

    தயிர்- ஒரு கப்

    செய்முறை:

    முதலில் சிக்கனை நன்றாக சுத்தப்படுத்திவிட்டு அதனை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் இந்த சிக்கனுடன் உப்பு, மிளகுத்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், வெங்காயம், பிரெட் தூள் சேர்த்து பிசைந்து எடுத்து உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த உருண்டைகளை பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், சோம்பு, பச்சை மிளகாய், முந்திரி, ஏலக்காய், பட்டை மற்றும் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். பச்சை வாசனை போன பிறகு அதில் அரைத்து வைத்த விழுதை சேர்க்க வேண்டும். பின்னர் அதில் சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாதூள், உப்பு சேர்த்து கலந்து அதில் பொறித்து வைத்துள்ள சிக்கன் கோப்தாக்களை போட்டு கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான கிரீமியான சிக்கன் மலாய் கோப்தா தயார். அதற்கு மேல் கிரீம் சேர்த்தும் பரிமாறலாம்.

     

    • வடைக்கு மாவு அரைக்கும் போது உப்பை கடைசியாக சேர்க்க வேண்டும்.
    • தேங்காய் பர்பிக்கு தேங்காய் துருவலை வறுத்த பின்னர் பர்பி செய்தால் கெட்டியாக வரும்.

    * பயத்தம் மாவு உருண்டை செய்யும்போது வெல்லத்தை மிக்சியில் தூள் செய்து அத்துடன் வறுத்து சலித்த பயத்தம் மாவை போட்டு அரைத்தால் மாவு கட்டி இல்லாமல் இருக்கும்.

    * வடைக்கு உளுந்து அரைக்கும் போது கடைசியில்தான் உப்பு சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் மாவு இளகிவிடும்.

    * ஒருவருக்கு மட்டும் காபி போட வேண்டும் என்றால் சிறிது சர்க்கரை கலந்த காபித்தூளை டீ வடிக்கட்டியில் போட்டு வெந்நீர் ஊற்றினால் கெட்டியான டிகாஷன் கிடைக்கும்.

    * சப்பாத்தியை சிறு துண்டுகளாக செய்து, அத்துடன் உருளைக்கிழங்கு குருமாவை சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    * உளுந்தம் பருப்பு அதிகமாகவும், கடலை பருப்பு கொஞ்சமாகவும் போட்டு மிளகாய், கெட்டி காயம், உப்பு சேர்த்து வறுத்து அரைத்தால் இட்லி பொடி நல்ல சுவையாக இருக்கும்.

    * சாம்பார் சாதம் செய்யும்போது அரிசி, பருப்பு, காய்கறி கலவை, சாம்பார் பொடி ஆகியவற்றை மட்டும் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். உப்பு, புளிக்கரைசலை தாளிக்கும் போது கொதிக்க வைத்து சேர்க்க வேண்டும். அப்போதுதான் சாதம் குழைவாக இருக்கும்.

    * அப்பம் செய்யும் போது அரிசி, தேங்காய் அரைத்த கலவையில் வெல்லத்தை தண்ணீரில் நன்றாக கரையவிட்டு ஆறிய பின்பு தான் ஊற்ற வேண்டும். சூடாக ஊற்றினால் அப்பம் சரியாக வராது.

    * தேங்காய் பர்பி செய்யும்போது தேங்காய் துருவலை ஈரப்பசை போக சிறிது வறுத்த பின்னர் பர்பி செய்தால் கெட்டியாக வரும்.

    * வாய் குறுகலான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் முளைக்கீரையை வைத்தால் அடுத்த நாள் கீரை பசுமை நிறம் மாறாமல், வதங்காமல் இருக்கும்.

    • உரித்து வைத்துள்ள தட்டப்பயறை சேர்த்து மசாலாவோடு சேரும் வரை வதக்கவும்.
    • புழுங்கல் அரிசியை இரண்டு முறை கழுவிக் கொள்ளவும். பின் 2 கப் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    புழுங்கல் அரிசி - 1 கப்

    வெங்காயம் - 1

    தக்காளி - 2

    தட்டைப்பயறு - 1/2 கப்

    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

    தனியா தூள் - 1/2 டீஸ்பூன்

    சீரகம் - 1/4 டீஸ்பூன்

    கடுகு உளுந்து - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி தழை - 1/4 கப்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    அரைக்க

    இஞ்சி - 1/2 அங்குலத்துண்டு

    பூண்டு பற்கள் - 6

    சின்ன வெங்காயம் - 4

    சோம்பு - 1 டீஸ்பூன்

    பட்டை - 2 சிறிய துண்டு

    கிராம்பு - 3

    கொத்தமல்லி இலை - சிறிது

    செய்முறை

    1. மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், சோம்பு, கிராம்பு, பட்டை சேர்த்து அரைக்கவும். பின் கொத்தமல்லி இலை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    2. தக்காளியை தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

    3. புழுங்கல் அரிசியை இரண்டு முறை கழுவிக் கொள்ளவும். பின் 2 கப் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    4. குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    5. பின் தக்காளி விழுதை சேர்த்து கைவிடாமல் வதக்கவும். பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி அதோடு தனியா தூள் சேர்த்து வதக்கவும். பின் உரித்து வைத்துள்ள தட்டப்பயறை சேர்த்து மசாலாவோடு சேரும் வரை வதக்கவும்.

    6. பின் ஊறவைத்து வடிகட்டிய அரிசியை மசாலாவோடு சேர்த்து நன்றாக கிளறவும். பின் 2 கப் தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும். 2 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.

    7. குக்கரில் இருக்கும் ஆவி தானாக அடங்கியதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து மெதுவாக கலந்து பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.

    காய்ந்த தட்டப்பயறை வைத்து செய்தால் தண்ணீரில் இரண்டு முறை கழுவி 4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

    • இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.
    • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள்.

    தேவையானவை:

    இட்லி மாவு - 2 கப்

    புளிக்காத புது தயிர் - 3 டீஸ்பூன்

    ஓமப்பொடி - 3 டீஸ்பூன்

    மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்

    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    மல்லித்தழை - சிறிதளவு

    அரைக்க:

    தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 4

    முந்திரிப்பருப்பு - 6

    தாளிக்க:

    கடுகு - அரை டீஸ்பூன்

    பெருங்காயம் - அரை டீஸ்பூன்

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    * மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள்.

    * அத்துடன் கடுகு, பெருங்காயம் தாளித்து உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள்.

    * பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் துவி பரிமாறலாம்.

    * அல்லது வெறும் மல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம். இந்த இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.

    • மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும்.
    • இறுதியாக கொத்தமல்லி சேர்த்து சூடாக பரிமாறவும்.

    தேவையான பொருட்கள்:

    வஞ்சிரம் மீன் - முள் எடுத்தது 2 (சிறிய க்யூப்ஸாக வெட்டுங்கள்)

    வெங்காயம் - 1 (நறுக்கியது)

    தக்காளி - 1 (நறுக்கியது)

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி - தேவையான அளவு

    இஞ்சி மற்றும் பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மிளகு தூள் - தேவையான அளவு

    சுவைக்க உப்பு

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    செய்முறை:

    * ஒரு கடாயில் எண்ணெயை வைத்துத் சூடாகும்போது வெங்காயம் சேர்த்துத் வெங்காயம் இளஞ்சிவப்பு நிறமாக வரும் வரை வதக்கவும்.

    * இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்துத் வறுக்கவும் .

    * தக்காளி சேர்த்துத் நன்கு வறுக்கவும். மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும்.

    * பின்னர் அதில் வெட்டி வைத்த மீன் துண்டுகளை சேர்த்து அடுப்பை மிதமாக வைத்து கிளறவும். பின்னர் மிளகு சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

    * இறுதியாக கொத்தமல்லி சேர்த்து சூடாக பரிமாறவும்

    • செய்த உணவையே செய்து செய்து வெறுப்பா இருக்கா...
    • மிகவும் சுவையாகவும் வித்தியாகமாகவும் இருக்கும்.

    இரவு நேரம் வந்தவுடன் என்ன உணவு சமைப்பது என்று வீட்டு பெண்களுக்கு ஒரு வித குழப்பம் ஏற்படும். செய்த உணவையே செய்து செய்து வெறுப்பா இருக்கா... அப்போ இதை டிரை பண்ணுங்க... மிகவும் சுவையாகவும் வித்தியாகமாகவும் இருக்கும். வாங்க எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    தயிர் - 100 மிலி

    சின்ன வெங்காயம் - 6

    பூண்டு - 5 பல்

    முந்திரி - 4

    தக்காளி - 2

    பெரிய வெங்காயம் - 2

    சிவப்பு, பச்சை குடமிளகாய் - 2

    பட்டை, கிராம்பு, கடல் பாசி - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    மிளகாய் தூள் - தேவையான அளவு

    மஞ்சள் தூள் - தேவையான அளவு

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் ஒரு வெங்காயம், குடமிளகாய் இரண்டையும் டிக்கா செய்வதற்கு வெட்டுவது போல் சதுர வடிவில் வெட்டி எடுத்து கொள்ளவும்.

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், பூண்டு, முந்திரி, தக்காளி ஆகியவற்றை சிறிது நேரம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

    பின்னர் வதக்கிய அனைத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டு அதனுடன் 100 மிலி தயிர் சேர்ந்து அரைத்து கொள்ளவும்.

    பின்னர் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெட்டி வைத்துள்ள பெரிய வெங்காயம், குடமிளகாய் ஆகியவற்றை 10 நிமிடங்கள் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.


    ஒரு வாணலில் பட்டை, கிராம்பு, கடல் பாசி சேர்ந்து நன்கு வதக்கவும், அதனுடன் பொடியாக வெட்டி வைத்த பெரிய வெங்காயத்தை போட்டு அதனை பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பின்னர் தயிர் சேர்ந்து அரைத்து வைத்திருந்த விழுதை இதனுடன் சேர்த்து நன்று வதக்கவும். அதனுடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா போன்றவற்றை சேர்ந்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் வதக்கி வைத்திருக்கும் குடமிளகாய் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இறுதியாக அடுப்பை அணைத்து கொத்தமல்லி சேர்க்கவும். இதோ சுவையான சப்பாத்தி, பூரி, பரோட்டாவிற்கு ஏற்ற குடமிளகாய் தயிர் கிரேவி ரெடி. 

    • மாலை வந்ததும் என்ன ஸ்நாக்ஸ் செய்வது என்று ஒரு மிக பெரிய குழப்பம் ஏற்படுகிறது.
    • வாங்க சிக்கன் நக்கெட்ஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

    வீட்டில் அம்மாக்களுக்கு மாலை வந்ததும் என்ன ஸ்நாக்ஸ் செய்வது என்று ஒரு மிக பெரிய குழப்பம் ஏற்படுகிறது. அதுவும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்றதாகவும் இருக்க வேண்டும். அதற்கு தான் நாங்க ஒரு சிம்பில் ஸ்நாக்ஸ் ரெடி பண்ணியிருக்கோம் வாங்க சிக்கன் நக்கெட்ஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

    தேவையானவை:

    போன்லெஸ் சிக்கன் - 1/2 கிலோ

    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    மைதா - 2 டீஸ்பூன்

    முட்டை - 2

    ப்ரெட் க்ரம்ஸ் - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை:

    * சிக்கனை சுத்தம் செய்துவிட்டு மிகவும் மெல்லியத் துண்டுகளாகப் போடவும்.

    * ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சிக்கன் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.

    * வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு மூடி மிதமானத் தீயில் வேக வைக்கவும்.

    * தண்ணீர் ஊற்ற வேண்டாம். சிக்கனில் உள்ள தண்ணீரிலேயே வெந்துவிடும்.

    * அடிப்பிடிக்காமல் சிக்கன் துண்டுகளை இரண்டு அல்லது மூன்று முறை திருப்பிவிட்டு வேக வைக்கவும்.

    * தண்ணீர் முழுவதும் சுண்டி, சிக்கன் வெந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.

    * மைதா, ப்ரெட் தூள் இரண்டையும் தனித்தனி கிண்ணங்களில் எடுத்துக்கொள்ளவும்.

    * முட்டையைத் தனியாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடித்து வைத்துக்கொள்ளவும்.

    * ஒரு சிக்கன் துண்டை எடுத்து மைதாவில் முழுவதும் புரட்டி, அடுத்து முட்டையில் முழுவதும் தோய்த்து, உடனே ப்ரெட் தூளில் போட்டு புரட்டி ஒரு தட்டில் வைக்கவும்.

    * இதுபோல் எல்லா சிக்கன் துண்டுகளையும் செய்து வைக்கவும்.

    * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ஒவ்வொன்றாகவோ போட்டு ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் மறுபக்கம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்துவிடவும்.

    * இதனை தக்காளி கெச்சப்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    • இறாலை காரம் இல்லாமல் சுவையாக கொடுத்தால் சொல்லவா வேண்டும்.
    • குழந்தைகள் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

    அசைவ உணவில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இறால். அந்த இறாலை காரம் இல்லாமல் சுவையாக கொடுத்தால் சொல்லவா வேண்டும். வாங்க எப்படி செய்யலாம்னு பார்ப்போம்...

    தேவையான பொருட்கள்:

    இறால் - 1/2 கிலோ

    பிரியாணி அரிசி - 1/2 கிலோ

    வெங்காயம் - 2

    தக்காளி - 4

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம்

    கொத்தமல்லி - 1கை

    புதினா - 1 கை

    தேங்காய் பால் - 1 கப்

    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு

    எண்ணெய் - 100 மில்லி

    நெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் இறாலையும், அரிசியும் கழுவி சுத்தம் செய்து வைக்கவும். பிறகு குக்கரில் எண்ணெய்,நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும்.

    பின்பு அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதில் பின்பு மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து வதக்கவும்.

    பிறகு தக்காளியும் சேர்த்து வதக்கி அதில் இறால் சேர்த்து நன்றாக கிளறவும்.

    பின்பு இறால் தண்ணீர் விட ஆரம்பித்ததும் அதில் பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா தூவி கிளறி அதில் ஒரு கப் திக்கான தேங்காய் பால், 2 கப் தண்ணீர் ஊற்றவும். பின்னர் இவை அனைத்து நன்கு கொதித்தவுடன் தண்ணீர் ஊற்றி ஊற வைத்த அரிசியை போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.

    சுவையான இறால் தேங்காய் பால் புலாவ் ரெடி. குழந்தைகள் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

    • எள்ளில் இருக்கிற எண்ணெய் தோலுக்கு நல்ல பளபளப்பு தருது.
    • இத சரியான அளவுல நம்ம உணவுல சேர்த்துக்கிட்டு வந்தோம்னா நம்ம உடம்புக்கு தேவையான பலன்கள் கிடைக்கும்.

    எள்ளுல இருபது சதவீதம் புரதமும் 50% எண்ணையும் 16 சதவீதம் மாப்பொருளும் இருக்கு.

    இத உடம்புக்கு சேர்த்துட்டு வந்தோம்னா அது உடலுக்கு நல்ல பலத்த கொடுக்கும். அது மட்டும் இல்லாம எள்ளுல இரும்புச்சத்து, துத்தநாகம் இதெல்லாம் அதிகமா இருக்கு.

    எள்ளில் இருக்கிற எண்ணெய் தோலுக்கு நல்ல பளபளப்பு தருது.

    அதே மாதிரி தோல்ல ஏற்படுற நோய்களான சொரி, சிரங்கு, படை மாதிரியான எல்லா நோய்களையும் எளிதா, விரைவா குணப்படுத்திடும்.

    மேலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், மற்றும் வைட்டமின் ஏ, பி போன்ற சத்துக்கள் எல்லாமே இதுல உள்ளடங்கி இருக்கு.

    இத சரியான அளவுல நம்ம உணவுல சேர்த்துக்கிட்டு வந்தோம்னா நம்ம உடம்புக்கு தேவையான பலன்கள் கிடைக்கும்.



    தேவையான பொருட்கள்:

    எள்ளு - 2 மேஜைக்கரண்டி

    வர மிளகாய் - 9

    தனியா - 1 மேஜைக்கரண்டி

    பச்சரிசி - 1மேசைக்கரண்டி

    துவரம் பருப்பு - 1மேசைக்கரண்டி

    சீரகம் - 1/2 மேஜைக்கரண்டி

    வெந்தயம் - 1/2 மேஜைக்கரண்டி

    சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு

    தக்காளி - 1

    கத்திரிக்காய் - 6

    முருங்கைக்காய் - 1

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    உளுந்து - 1/2 தேக்கரண்டி

    கருவேப்பிலை - 2 கொத்து

    நல்லெண்ணெய் - 3 குழி கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    மஞ்சள் - 1/2 தேக்கரண்டி

    பூண்டு - 5 பல்

    ஒரு சிறிய லெமன் அளவு புளி கரைத்து கொள்ளவும்

    செய்முறை:

    முதலில் ஒரு கடாயை வைத்து அதில் வரமிளகாய், தனியா, அரிசி, துவரம்பருப்பு சீரகம், வெந்தயம் எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    பின் எள்ளையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்

    ஒரு கடாயை வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்றி கடுகு வெந்தயம் உளுந்து நன்கு வதக்கி கொள்ளவும் பின் வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    பின் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்

    நன்கு கத்தரிக் காய் முருங்கைக் காய் வேகும் வரை மூடி வைத்து கொதிக்க விட வேண்டும், கொதித்தபின் அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும் தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்

    சுவையான எள்ளு குழம்பு தயார்.

    • கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள தூதுவளையை சேர்த்து நன்கு வதக்கவும்.
    • தூதுவளையை மிக்சியில் அரைத்து சேர்க்கவும்.

    தற்போது பருவநிலை மாறுபாடு காரணமாக பலரும் சளி, இருமல், காய்ச்சல், உடல் சோர்வு போன்ற காரணங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இந்த தூதுவளை மிளகு ரசம் கைகொடுக்கும். அதை எப்படி வைப்பது என்று பார்க்கலாமா....

    தேவையான பொருட்கள்:

    தூதுவளை - 1 கப்

    சின்ன வெங்காயம் - 10

    பூண்டு - 8 பல்

    மிளகு - 1 டீஸ்பூன்

    சிரகம் - 1 டீஸ்பூன்

    புளி - ஒரு நெல்லிகாய் அளவு

    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    வரமிளகாய் - 3

    கடுகு - 1/2 ஸ்ஸ்பூன்

    தக்காளி - 4

    க.எண்ணெய் - 2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    கொத்தமல்லி - ஒரு கைபிடி

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு வாணலியில் கடலை எண்ணெய் சேர்த்து, கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள தூதுவளையை சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி, கொதிக்கும்போது புளி கரைசலையும், அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து கலந்துவிடுங்கள். அதோடு மஞ்சள் தூள், இடித்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும்.

    பின்னர் தூதுவளையை மிக்சியில் அரைத்து சேர்க்கவும். இறுதியாக, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதை நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவும்.

    பின் தாளிக்க கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பின் அதை அந்தக் கலவையில் கொட்டுங்கள். இறுதியாக மிளகு தூள், கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் ஆரோக்கியம் தரும், சளி, இருமலை, காய்ச்சல், உடல் சோர்வை துரத்தும் தூதுவளை மிளகு ரசம் தயார்.

    • பிஸ்கெட்டை வைத்து எளிமையா செய்யலாம் பிஸ்கெட் பர்ஃபி.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    என்னது பிஸ்கெட்டை வைத்து சாக்லேட் பர்ஃபியா, அதெப்படி என்று தானே யோசிக்கிறீங்க... நம்ம வீட்டில் இருக்கும் பிஸ்கெட்டை வைத்து எளிமையா செய்யலாம் பிஸ்கெட் பர்ஃபி. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதுமட்டுமல்ல குழந்தைகளே எளிமையா இதனை செய்ய முடியும். அரைமணிநேரத்திலேயே இதனை செய்து முடித்துவிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிஸ்கெட்- ஒரு பாக்கெட்

    கோ கோ பவுடர்- அரைகப்

    பொடித்த நட்ஸ்- ஒரு கப்

    வெண்ணெய்- 50 கிராம்

    சர்க்கரை- அரைகப்

    செய்முறை:

    இந்த சாக்லேட் பர்ஃபி செய்வதற்கு கிரீம் இல்லாத பிஸ்கெட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் பிஸ்கெட்டை எடுத்து அதனை சிறிது சிறிதாக உடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பு மிக்சியில் போட்டு பொடித்துவிடக்கூடாது.

    அதன்பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பிடித்த சர்க்கரை, கோ கோ பவுடர் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவை கெட்டியாகும் போது வெண்ணெய் சேர்க்க வேண்டும்.

    வெண்ணெய் சேர்த்தவுடன் இந்த கலவை சிறிது கெட்டியாகத்தொடங்கும். இந்த நேரத்தில் இந்த கலவையை எடுத்து நாம் ஏற்கனவே உடைத்து வைத்துள்ள பிஸ்கெட் கலவையில் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

    இந்த கலவையை வெண்ணெய் தடவிய கேக் மோல்டில் கொட்டி சரி சமமாக சமப்படுத்த வேண்டும். பின்னர் இதனை மூடி ஃப்ரிட்ஜில் 2 மணிநேரம் வைத்து எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து பரிமாறலாம். கோடை விடுமுறையை கொண்டாடும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். 

     

    ×