search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    தொடர்ந்து பதற்றம் அதிகரிப்பு: தைவானுக்குள் அத்துமீறி நுழைந்த 20 சீன போர் விமானங்கள்
    X

    தொடர்ந்து பதற்றம் அதிகரிப்பு: தைவானுக்குள் அத்துமீறி நுழைந்த 20 சீன போர் விமானங்கள்

    • தைவானின் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் இன்று தெரிவித்தது.
    • டிரோன்களும் அடங்கும் என்றும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. இதற்கிடையே சமீபத்தில் தைவானை சுற்றி சீனா போர் பயிற்சியை நடத்தியது.

    இந்நிலையில் தைவானின் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் இன்று தெரிவித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 20 சீன விமானப்படை விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்தது என்றும் இதில் டிரோன்களும் அடங்கும் என்றும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×