21.9.2025 முதல் 27.9.2025 வரை
துணிச்சலும் தைரியமும் மிகுந்த வாரம். 2,7-ம் அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவுடன் இணைகிறார். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். திருமண முயற்சிகள் சற்று காலதாமதம் ஆகலாம். பூர்வீகம் சென்று வருவதில் சற்று சிரமம் இருக்கும். பணம் பொருள் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அறிமுகம் அல்லாத நபர்களிடம் பணத்தை கொடுக்கக் கூடாது அதேபோல் உங்களுக்கு உதவி செய்வதாக கூறும் அன்னியர்களை நம்ப வேண்டாம். எது எப்படி இருந்தாலும் ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டை தானே பார்ப்பதால் எந்த நிலையிலும் தைரியம் குறையாது.
26.9.2025 அன்று மாலை 3.24 மணி முதல் 29.9.2025 அன்று அதிகாலை 3.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொருளாதார முன்னேற்றத்தில் தடை உருவாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. உயர் அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும். நவராத்திரி காலங்களில் அம்மன் கோவில்களுக்கு குங்குமம் வாங்கித் தருவதால் மங்களம் உண்டாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406