தமிழ்நாடு

பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு- வியாபாரிகள் போராட்டம்

Published On 2023-03-18 08:22 GMT   |   Update On 2023-03-18 08:22 GMT
  • நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இந்த சாலைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.
  • பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு கடைகள், நடைபாதை கடைகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆலந்தூர்:

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே பழண்டி அம்மன் கோவில் தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு ஆகிய சாலைகள் உள்ளன. நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இந்த சாலைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.

இதை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இன்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு கடைகள், நடைபாதை கடைகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News