தமிழ்நாடு

கொளப்பாக்கத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை

Published On 2023-07-24 06:57 GMT   |   Update On 2023-07-24 06:57 GMT
  • பேவர் பிளாக்சாலை அமைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூடுவாஞ்சேரி:

காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட கொளப்பாக்கம் நாராயணன் நகர் ஜாஸ்மின் தெருவில் செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலர் கஜா என்கிற கஜேந்திரன் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக்சாலை அமைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்ரீ சீனிவாசன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் நேதாஜி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்த விழாவில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலருமான ரத்தினமங்கலம் எம்.கஜா என்கிற கஜேந்திரன் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில் பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News