தமிழ்நாடு

காசிமேட்டில் பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

Published On 2022-06-27 09:28 GMT   |   Update On 2022-06-27 09:28 GMT
  • துறைமுகத்தில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இயற்கை மற்றும் செயற்கை பாறைகள் உள்ளன.
  • தூண்டில் பயன்படுத்தி மீன் பிடிக்கும் பைபர் பைபர் படகு மீனவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ராயபுரம்:

காசிமேடு மீன்பிடி துறை முகத்தில் 150-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

துறைமுகத்தில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இயற்கை மற்றும் செயற்கை பாறைகள் உள்ளன.

இந்த பகுதியில் மற்ற பகுதியைச் சேர்ந்த சில மீனவர்கள் விசைப்படகுகளில் வந்து மீன் பிடிப்பதால் பாறைகள் சேதம் அடைவது மட்டுமல்லாமல் மீன்வளமும் பாதிக்கப்படு வதாக காசிமேடு மீனவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இதனால் தூண்டில் பயன்படுத்தி மீன் பிடிக்கும் பைபர் பைபர் படகு மீனவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கரையோரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்படிபபதற்கு எதிர்ப்பு தெரிவித்து காசிமேடு பைபர் படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. தங்களது படகுகளில் சிவப்புக் கொடி கட்டி உள்ளனர்.

இதுதொடர்பாக பைபர் படகு மீனவர் சங்க நிர்வாகிகள் இது தொடர்பாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் விசைப் படகுகளில் பவளப்பாறை அருகே வலைவிரித்து மீன் பிடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News