தமிழ்நாடு

மனித சங்கிலி போராட்டம் நடைபெற்ற காட்சி


புதுவையில் இன்று தி.மு.க. கூட்டணி மனித சங்கிலி போராட்டம்

Published On 2022-10-02 06:55 GMT   |   Update On 2022-10-02 06:55 GMT
  • தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி கட்சியின் கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
  • தி.மு.க. மற்றும் கூட்டணிகட்சியினர் அண்ணாசிலை முதல் காமராஜர் சிலை வரை கைகோர்த்து நின்றனர்.

புதுச்சேரி:

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி கட்சியின் கூட்டம் முதலியார் பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் காந்தி பிறந்த நாளான இன்று சமூக நல்லினக்கத்தை வலியுறுத்தியும் மத வெறிக்கு எதிராகவும் புதுவை அண்ணாசிலை முதல் காமராஜர் சிலை வரை மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன் படி இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. மற்றும் கூட்டணிகட்சியினர் அண்ணாசிலை முதல் காமராஜர் சிலை வரை கைகோர்த்து நின்றனர்.

இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., எதிர்கட்சி தலைவர் சிவா, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், சம்பத் எம்.எல்.ஏ. காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Similar News