தமிழ்நாடு

சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிப்புக்கு விண்ணப்பிக்க கட்டணம் 250 மடங்கு உயர்வு?

Published On 2023-08-05 05:39 GMT   |   Update On 2023-08-05 05:39 GMT
  • சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது.
  • ஜூலை 1-ந் தேதியில் இருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று சென்னை பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

சென்னை:

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. பல்வேறு கட்டண உயர்வை எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் உயர்த்தி இருப்பதாக ஆராய்ச்சி மாணவர் தெரிவிக்கின்றனர்.

பகுதி நேர பி.எச்.டி. படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க முன்பு கட்டணம் ரூ.5000 ஆக இருந்தது. அவை தற்போது ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

முழு நேரம் பி.எச்.டி. படிக்கும் விண்ணப்ப கட்டணம் முன்பு ரூ.100 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க கூடுதலாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்ற அதிர்ச்சி தகவலை மாணவர்களை தெரிவிக்கின்றனர். 250 மடங்கு கட்டணம் உயர்ந்து உள்ளது.

இதே போல மற்றொரு கட்டணமும் ரூ.2000 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1-ந் தேதியில் இருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று சென்னை பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மூத்த அதிகாரிகள் கூறும்போது, சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது. ஜூனில் நடந்த சிண்டிகேட் மற்றும் செனட் கூட்டத்தில் இதற்கான முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளன என்றனர்.

கட்டண உயர்வை, பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி மறுத்துள்ளார். கட்டணம் உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார்.

Tags:    

Similar News