செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது - முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

Published On 2020-07-10 11:16 GMT   |   Update On 2020-07-10 11:18 GMT
புதுச்சேரியில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அங்கு கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் 6வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் ஞாயிறன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதுச்சேரியில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

வரும் ஞாயிறு கடைசி முகூர்த்த நாள் என்பதால் முழு ஊரடங்கு கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News