செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-05-15 12:49 IST   |   Update On 2020-05-15 12:49:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,637 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 451 ஆக உயர்ந்துள்ளது. 

Similar News