விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்- 78 வயதில் பங்கேற்கும் வயதான வீராங்கனை

Published On 2022-08-02 13:51 IST   |   Update On 2022-08-02 13:51:00 IST
  • செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் வயதான வீராங்கனை என்ற பெருமையை ஜூலியா லேபல் அரியாஸ் பெற்றுள்ளார்.
  • நேற்றைய 4-வது சுற்றில் அவர் 13 வயது சிறுமி மரியமை (துனிசியா) எதிர்கொண்டார்.

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் வயதான வீராங்கனை என்ற பெருமையை ஜூலியா லேபல் அரியாஸ் பெற்றுள்ளார். மொனக்கா நாட்டை சேர்ந்த அவருக்கு 78 வயதாகிறது. அர்ஜென்டினாவில் பிறந்து அந்நாட்டு அணிக்கு விளையாடி பின்னர் பிரான்ஸ் நாட்டுக்காக ஆடினார். தற்போது மொனாக்காவுக்காக ஆடுகிறார்.

நேற்றைய 4-வது சுற்றில் அவர் 13 வயது சிறுமி மரியமை (துனிசியா) எதிர்கொண்டார். 70-வது காய் நகர்த்தலுக்கு பிறகு ஜூலியா வெற்றிபெற்று இந்த வயதிலும் சாதித்தார். பின்னர் அவர் கூறும்போது, 'நான் மிகவும் சோர்ந்து விட்டேன். ஆனால் வெற்றிபெற்று விட்டேன். எனது உடல்நலம் காரணமாக சில செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கவில்லை. சென்னை போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

78 வயதான ஜூலியா பங்கேற்கும் 18-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இதுவாகும்.

Tags:    

Similar News