விளையாட்டு

வைஷாலி

செஸ் ஒலிம்பியாட்: தொடக்கத்தில் இருந்தே ஆட்டம் என் வசம் இருந்தது- வைஷாலி

Published On 2022-07-30 05:53 GMT   |   Update On 2022-07-30 05:53 GMT
  • வெள்ளை நிற காய்களுடன் விளையாடினேன்.
  • இந்த போட்டி 4 மணி நேரம் நீடித்தது.

பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணியில் இடம்பெற்றுள்ள ஆர்.வைஷாலி முதல் சுற்று வெற்றி குறித்து கூறியதாவது:-

தஜிகிஸ்தான் வீராங்கனை சபரினாவுடன் நான் முதல் சுற்றில் ஆடினேன். வெள்ளை நிற காய்களுடன் விளையாடினேன். இந்த போட்டி 4 மணி நேரம் நீடித்தது. தொடக்கத்தில் இருந்தே ஆட்டம் என் வசம் இருந்தது. ஆட்டத்தின் போக்கை மாற்றுவதற்கு கொஞ்சம் நேரமாகி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓபன் பிரிவு இந்திய 'ஏ' அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் சசிகிரண் வெற்றி குறித்து கூறும் போது, தொடக்கமே சிறப்பாக அமைந்துள்ளது. அடுத்தடுத்த சுற்றுகளில் மேலும் திறம்பட விளையாடுவோம். அமெரிக்காவை எதிர் கொள்ளும் போட்டி கடும் சவாலாக இருக்கும் என்றார்.

Tags:    

Similar News